Monday, July 21, 2008

மனித கேடயமாக மக்களை பயன்படுத்தும் புலிகள் இயக்கம்

கடந்த காலங்களில் அரச படையினரின் உறுதியான இராணுவ நடவடிக்கை காரணமாக அனைத்துப் பிரதேசங்களையும் இழந்து வன்னிப்பிரதேசத்துக்குள் மட்டுமே ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தற்போது எஞ்சியிருக்கும் வன்னி நிலப்பரப்பை பாதுகாப்பதற்காக யுத்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதை காட்டிலும் பொதுமக்களைப் பயன்படுத்தும் உத்தியையே கையாண்டு வருகிறார்.
இந்த வகையில் தமிழ் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பிரதேசங்களிலேயே பெரும்பாலும் நடமாடி தங்கள் இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாகப் புலிகளின் நடமாட்டமறிந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்குவதும் அதன் மூலம் பொதுமக்களுக்குப் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதுமே தற்போது புலிகள் இயக்கத்தலைவரின் குறிக்கோளாக உள்ளது. அத்துடன் வன்னிபிரதேசங்களில் புலிகள் இயக்கத்தினர் செயற்படும் முக்கிய மறைவிடங்கள் மற்றும் முகாம்கள் மீதெல்லாம் கடந்த காலங்களில் விமானப்படையினர் குறிதவறாத தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது புலிகள் இயக்கத்தினர் பொதுமக்களுடனேயே பதுங்கி வாழும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் விமானத்தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக பொதுமக்களை முன்னிலைப்படுத்தி மனித கேடயமாகப் பயன்படுத்திவருகிறது புலிகள் இயக்கம். அத்துடன் இவ்வாறு பொதுமக்கள் பெருந்தொகையில் கொல்லப்படும் சூழ்நிலைகள் உருவானது அவ்வாறு பொதுமக்களுக்கு பெரும் உயிர்சேதம் ஏற்படும்போது அந்தசம்பவங்கள் மூலம் அரசபடையினருக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக சர்வதேசம் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கும் நிலையை உருவாக்குவதும் இந்தப் பிரச்சினையை சர்வதேச ரீதியில் பெரும் பிரச்சினையாக்கி சர்வதேசத் தலையீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமே புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அடிப்படையான குறிக்கோள்களாகும். இதன் மூலம் அரசபடையினரின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்கும் எஞ்சியிருக்கும் வன்னிப் பிரதேசங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் பிரபாகரன் நினைக்கிறார். மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பிரதேசங்களையும் இழந்துவிட்ட பிரபாகரன் அனைத்து ஆயுத நடவடிக்கையிலும் நம்பிக்கையிழந்த நிலையில் தற்போது தன்னையும் இயக்கத்தினரையும் எஞ்சிய பிரதேசங்களையும் பாதுகாக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதை விட்டு பொதுமக்களை கேடய ஆயுதமாகப் பயன்படுத்த முன்வந்துவிட்டார்.

திவயின விமர்சனம் :20.07.2008

No comments: