
”படுகொலைகளைச் செய்யும் புலிகள் யாரின் விடுதலைக்குப் போராடுகிறார்கள்” மங்கையற்கரசி அமிர்தலிங்கம் : இராஜேஸ் பாலா
07.06.08ல் லண்டனில் நடத்தப்பட்ட மஹேஸ்வரி ஞாபகார்த்தக்கூட்டத்தில் திருமதி அமிர்தலிங்கமும் ஒரு பேச்சாளாராக எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவர் கடந்த ஒருமாதத்திற்கு மேல் தனது உறவினர்களைப் பார்க்க வெளிநாடு சென்றிருந்ததால் கூட்டத்திற்கு வரமுடியவில்லை என்று தெருவித்தார். லண்டனுக்கு வந்ததும் முதற் கண்ணாக, மஹேஸ்வரியின் கொலைக்கெதிரான தனது கண்டனத்தைத் தெரிவித்தார். அவரின் குறிப்பில் பின்கண்ட விடயங்களை அறிவித்தார்.
” மனித உரிமை எழுத்தாளர் இராஜேஸ் பாலாவினால் ஒழுங்கு செய்யப்பட்டு லண்டனில் நடத்தப்பட்ட மகேஸ்வரி ஞாபகார்த்தக் கூட்டத்திற்கு வரமுடியாமல் போனதற்கு எனது துக்கத்தைத் தெரிவித்துகொள்கிறேன். மஹேஸ்வரியின் கொலை ஒரு பாதகமான செயலாகும். உற்றார் உறவினர் முன்னிலையில் ஈவிரக்கமின்றிக் காட்டு மிராண்டித்தனமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் மஹேஸ்வரி. சுவீனமான தாயைப் பார்க்கப்போன மகளுக்கா இந்தக்கதி? என்று எங்கள் தமிழ் மக்கள் இந்தக் காட்டுமிராண்டிகளைக் கண்டித்துத் துரத்தப் போகிறார்கள், தூக்கியெறியப் போகிறார்கள் என்று தெரியாது. இப்படிக் கொடுமையான வன்முறைகளைத் தெடர்ந்து செய்பவர்களுக்கு மக்கள் மத்தியில் இடமில்லை என்பதைத் தமிழ் மக்கள் இக்கொலைகாரர்களுக்குச் செயலில் காட்டவேண்டும். மஹேஸ்வரி, ஒரு தனிப்பட்ட அரசியற் தளத்துக்கு அப்பாற் சென்று மக்களுக்கு உதவியவர். தன்னலமற்ற மக்கள் சேவைக்குப்பரிசு இந்தக் கொலையா?
புலிகள் யாரின் விடுதலைக்குப் போராடுகிறார்கள்? தமிழ் மக்களினதும், புலிகளுக்குப் பிடிக்காத எந்த மனிதர்களினதும் உயிர்களை, அம்மக்களின் உடலிலிருந்து அநியாயகமாகப் பறித்து எடுக்கும் ‘விடுதலை’ வேலைகளைத்தான் செய்கிறார்கள். இவர்களிடமிருந்து தமிழர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?”
திருமதி மங்கையற்கரசியின் கணவர் திரு அமிர்தலிங்கம் அவர்களும் புலிகளால் வீடு தேடிவந்து கொலை செய்யப்பட்ட தமிழர்களின் பட்டியலில் அடங்குவர். வீடு தேடிவந்து தேனிரும் சிற்றுண்டியும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, சாப்பாடு தந்தவர்களையே கொலை செய்யும் கலையில் வல்லுனர்கள் புலிகள். இவர்களிடம் மனித உரிமைபற்றிப் பேசுவது காலம் கடந்த விடயம் என்கிறார்கிறார்கள் ஒருசிலர்.
அரசியற் சரித்திரம் என்பது ஒரு மாய விளையாட்டு மாதிரி. யாருக்கு யார் சினேகிதம் யாருக்கு யார் எதிரி என்பது ஒரு சில கணங்களில் மாறிக் கொண்டுவரும் யதார்த்தங்கள். இவ்வவு காலமும் எத்தனையோ தோல்விகளைக் கண்டபின்னும் ‘கனவு’ இராசியத்தில் வாழும் மனநோயாளிகளைக்கொண்ட சமுதாயத்தில் ஒரு சிறு பகுதியான மக்கள் என்றாலும் யதார்தநிலையை உணர்ந்து ‘ஜனநாயக’ வழிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாற்தான் மனித உரிமைபற்றிப் பேசவேண்டியிருக்கிறது.
-------------
மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் மற்றுமொரு நினைவு நிகழ்வு யூலை 13ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொன்வே மண்டபம் ரெட் லயன் சதுக்கத்தில் மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இந்நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு லண்டனில் நடைபெறும் இரண்டாவது நினைவு நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதில் இலங்கையில் இருந்தும் பிரித்தானிய உரிமை அமைப்புகளில் இருந்தும் பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

No comments:
Post a Comment