Tuesday, June 17, 2008

இலங்கை தமிழ் திரைப்பட துறை செயற்பாட்டாளர் தேவதாஸன் கடத்தப்பட்டார்

‘சலனம்’ சித்திர அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரும் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினருமான கனகசபை தேவதாஸன் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகின்றது. புலனாய்வுப் பிரிவினராக தம்மை இனம்காட்டிய சிலர், வெளியிடம் ஒன்றில் இருந்து கொழும்பு, ஜம்பட்டா வீதியில், உள்ள அவரது தங்குமிடத்துக்குக் கடந்த சனியன்று அழைத்துச் சென்று தங்குமிடத்தை ஆராய்ந்த பின் தம்முடனேயே அவரை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தின் பின்னர் அவர் தொடர்பில் இல்லை என அவரது உறவினர்கள் நன்பர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் காவற்துறையிளரோ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரோ அவரைத் தாங்கள் கைது செய்யவேயில்லை எனத் தெரிவித்துள்ளனர். திரைப்படத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள தேவதாஸன், தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஒரு தமிழ் சினிமாவுடன் சம்பந்தப்பட்டிருந்தவர். இதற்காக பலதடவைகள் தமிழகம்; சென்று வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் உள்ள நிலையில் அவர் கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தனி அறை ஒன்றில் தங்கியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: