Sunday, August 10, 2008

புலிகளின் ஊடுருவலைத் தடுக்க 21 தீவுகளில் தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி: சென்னை திருமங்கலத்தில் சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த வெடிபொருளுக்கான மூலப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் வழியாக அவர்கள் இலங்கைக்கு வெடி பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை கடலோர பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
வனத்துறையினரும், கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து தூத்துக்குடி முதல் இராமேஸ்வரம் வரை உள்ள 21 தீவுகளை கண்காணித்து வருகின்றனர்.

இதுதவிர நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அகதிகள் முகாம்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அகதிகள் பயன்படுத்தும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மாவட்டம் முழுவதும் கியூ பிரிவு மற்றும் மத்திய, மாநில உளவு துறையினர் உஷார்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இதுதவிர மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

No comments: