யாழ்.மாவட்டத்திலுள்ள மின்மாற்றிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்குடன் மின்மாற்றி அமைந்திருக்கும் இடங்களைச் சுற்றி பனைமரங்களினால் இராணுவத்தினர் காப்பரண்களை அமைத்து வருகின்றனர்.
காப்பரண்களை அமைப்பதற்கென பெருந்தொகையான பனைமரங்களைத் தறித்தெடுத்து வரும் படையினர் பொதுமக்களைப் பயன்படுத்தி மேற்படி காப்பரண்களை அமைத்து வருகின்றனர்.
பொது இடங்கள், வீதிகள் மற்றும் சந்திகளில் அமைந்திருக்கும் மின்மாற்றிகளில் சில அண்மைக்காலமாக இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டு வந்ததையடுத்தே படையினர் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம் மின்மாற்றிகளுக்கு காப்பரண்களை அமைப்பதற்காக அயற்பிரதேசங்கள் மற்றும் வீதிகளில் பயணிப்போரை அழைத்து நீண்ட நேரம் தாமதிக்க வைத்து வேலைகளை வாங்கி வருவதால் தமது சொந்தக் கருமங்களைக் கவனிக்க முடியாதிருப்பதாகப் பொதுமக்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகிறது.
Tuesday, August 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment