Wednesday, August 6, 2008

பிரிட்டிஷ் பிரதமர் மாளிகை முன்னால் புலிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஐக்கிய இராட்சியத்தில் வாழும் ஸ்ரீலங்கா நாட்டவர்கள் குறிப்பாக லண்டன் மாநகரம் புறநகர்ப்பகுதிகளில் வாழ்ந்துவரும் சிறிலங்கா நாட்டவர்கள் ஒன்றிணைந்து தற்போது அமைத்திருக்கும் "பயங்கரவாதத்திற்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள்' எனப்படும் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் டவுணிங் வீதி 10 ஆம் இலக்க நிலையத்தில் (Nணி 10,ஈணிதீணடிணஞ் ண்tணூஞுஞுt, ஃணிணஞீச்ண) அமைந்திருக்கும் பிரிட்டிஷ் பிரதமரின் மாளிகை முன்பாக புலிகள் இயக்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டனில் வாழும் சிறிலங்கா நாட்டவர்களான சிங்கள இனத்தவர்கள், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என அனைத்து இனத்தவர்களும் கலந்துகொண்டு புலிகளின் பயங்கரவாதத்துக்கும் பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் தரப்பில் புலிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் ஆதரவு நடவடிக்கைகளுக்கும் எதிராகத் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேற்படி "பயங்கரவாதத்திற்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள்' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் இந்த ஆர்ப்பாட்டத்தில் லண்டனில் இயங்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி. கட்சிப் பிரிவின் சார்பிலும் பொருந்தொகையான உறுப்பினர்களும் பங்கெடுத்துக் கொண்டதாகவும் மேலும் குறிப்பிடும்படியான எண்ணிக்கையிலான லண்டன் பௌத்த குருமாரும் கலந்துகொண்டதாகவும் லண்டன் தகவல்கள் தெரிவித்துள்ளன.

லண்டன் டவுணிங் வீதியில் பெரும் சனநெருக்கடியை ஏற்படுத்திய இந்த பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியின் இறுதியில் "பயங்கரவாதத்துக்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள்' அமைப்பின் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டுக் குழுவினர் புலிகள் இயக்கத்துக்கும், பயங்கவாதத்துக்கும் பிரிட்டனில் நிலவும் பயங்கரவாத ஆதரவு செயற்பாடுகளுக்கும் எதிரான அனைத்து தகவல்கள், கோரிக்கைகள் அடங்கிய, பிரிட்டிஷ் பிரதமருக்கு எழுதப்பட்ட மகஜர்களை டவுனிங் வீதி 10 ஆம் இலக்க பிரிட்டிஷ் பிரதமரின் வாசஸ்தல அலுவலகத்தில் கையளித்தனர்.

இதுபற்றி மேற்படி லண்டனில் இயங்கும் "பயங்கரவாதத்துக்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள்' அமைப்பின் தரப்பில் ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கேற்ப சிறிலங்கா அரசு அங்கு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்த முக்கிய சந்தர்ப்பத்தில் பிரிட்டனில் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருக்கும் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தலைநகர் லண்டன் உட்பட அனைத்து முக்கிய பிரதேசங்களிலும் புலிகள் இயக்க பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பகிரங்கமாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் அவ்வாறே லண்டனில் அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஆதரவு ஊடகங்களும் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும் பகிரங்கமாக பிரசாரங்களையும் விழாக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருவதாகவும் மேற்படி மகஜரில் ஆதாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே மேற்படியான புலிகள் இயக்கம் சார்ந்த செயற்பாடுகள் பிரிட்டனில் பகிரங்கமாக மேற்கொள்ளப்படும் நிலையில் பிரிட்டிஷ் அரச தரப்பும் பாதுகாப்புத்துறையும், உயர்மட்ட அதிகாரிகளும் அவற்றைத் தடுக்கும் வகையில் செயற்படாமலிருப்பது பற்றியும் மேற்படி மகஜர்களில் சுட்டிக்காட்டப்பட்டு ஆழ்ந்த கவலையும் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் பிரிட்டனில் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பகிரங்கமாகச் செயற்பட்டுவரும் பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கத்தின் பாராளுமன்றப் பிரதிநிதிகளான விஜேந்திர ஷர்மா, மற்றும் கீத்வாஸ் போன்ற அரசியற் பிரமுகர்களின் புலிகள் இயக்க ஆதரவு நடவடிக்கைகள் பற்றியும் மேற்படி மகஜரில் "பயங்கரவாதத்துக்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள்' அமைப்பு ஆதாரபூர்வமாகத் தெரிவித்துக் கவலை வெளியிட்டுள்ளது. எனவே பிரிட்டன் அரசால் புலிகள் இயக்கம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டதற்கேற்ப புலிகளின் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பிரிட்டனில் செயற்படும் அனைத்துத் தரப்பினர் பற்றியும் விசாரணைகளை மேற்கொண்டு பிரிட்டனில் புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்களின் பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு விழாக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மேலும் பிரிட்டிஷ் அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியற் பிரமுகர்களின் புலிகள் ஆதரவு நடவடிக்கைகள் என்பவற்றை உடனடியாகத் தடை செய்யும்படி மேற்படி மகஜரின் பிரிட்டிஷ் பிரதமரை இறுதியாகக் கோரியுள்ளது. மேற்படி "பயங்கரவாதத்திற்கு எதிரான சிறிலங்கா நாட்டவர்கள் அமைப்பு'

லங்காதீப லண்டன் கடிதம் பகுதி (03/08/2008)

No comments: