Thursday, August 7, 2008

அகதிகள் என்ற பெயரில் புலிகள் ஊடுருவல்

இலங்கையில் தொடரும் இனப் பிரச்சினையால் 2006ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 22,350 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர். இவர்களில் 42 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து புலிகள் இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் பெரும்பாலான அகதிகள் கூலித் தொழிலாளிகள் எனக் கூறுகின்ற போதிலும் படகொன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபா வரை செலுத்தி தமிழகம் வருகின்றனர். இவர்களால் எவ்வாறு இவ்வளவு பணத்தை செலுத்த முடிந்தது என்ற கேள்விக்கு இது வரையில் பதிலில்லை. அதேவேளை தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்கு திரும்பிச் செல்லும் அகதிகளை அதிகாரிகள் காரணம் கேட்டு தடுத்து நிறுத்துவதும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அண்மையில் முகாம்களில் நடத்தப்பட்ட ஆய்வின் போது தமிழகத்துக்கு வந்த ஏராளமான அகதிகள் தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாக உளவுப் பிரிவு பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இத்தகைய பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தின் பல அகதி முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைக்கு பொருட்களை கடத்துவதில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஆயுதப் பயிற்சி பெற்ற அனைவரையும் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்ற வேண்டும் என உளவுப் பிரிவினர் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர் இது இராமநாதபுரம் கடந்த சில நாட்களாக புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் சிலர் இலங்கைக்கு பொருட்கள் கடத்தியது தொடர்பில் கைதான சம்பவத்தையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போது தமிழகத்திற்கு அகதிகள் என்ற போர்வையில் வந்தவர்கள் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து உளவுப் பிரிவு பொலிஸார் அகதிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: