கடந்த 10 வருடங்களுக்கு மேலாக புத்தளம் பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணம் உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய பட்டதாரியான தேன்கிளி சங்கீதா என்னும் இளம் பெண்ணை வெள்ளை நிற வாகனத்தில் வந்த இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பாலாவியிலுள்ள தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இடம்பெற்றுள்ளது. மேற்படி பெண் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் சமூக இணைப்பு அதிகாரியாக பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவரது கடத்தல் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யு.என்.எச்.சீ.ஆர் மற்றும் பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Tuesday, May 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment