
கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பதை அரசாங்கம் நாளை அறிவிக்கும் என,அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி இன்று நாடு திரும்பியுள்ளார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவு தொடர்பாக ஆராயும் முக்கிய கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொளவர்.கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பது இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்..

No comments:
Post a Comment