புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்துசென்று தனிக்குழுவாக இயங்கிவந்த வரும் பின்னர் அக்குழுவின் தலைமைத்துவம் பிள்ளையானிடம் சென்றதையடுத்து லண்டன் சென்றவருமான கருணா இன்னும் சில நாட்களுக்குள் ஸ்ரீலங்கா வந்து சேருவார் என லண்டன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா லண்டனில் வந்து இறங்கியபொழுது விமான நிலைய அதிகாரிகளால் அவருடைய கடவுச்சீட்டு மற்றும் பத்திரங்களை சோதனையிடப்பட்ட வேளையில் அவர் வைத்திருந்த கடவுச்சீட்டு போலியானது என அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை லண்டன் விமான நிலையப் பொலிஸ் பிரிவினர் கைதுசெய்திருந்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் கடவுச்சீட்டு மோசடி சம்பந்தமான குற்றச்சாட்டின் பேரில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் கருணாவின் கடவுச்சீட்டு மோசடி நிரூபிக்கப்பட்டதையடுத்து, கருணாவுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.
எவ்வாறாயினும் சில மாதங்களின் பின்னர் சிறையில் நன்னடத்தை அடிப்படையில் கருணாவை விடுதலை செய்யும்படி கருணா தரப்பிலிருந்து நீதிமன்றத்துக்கு செய்யப்பட்ட விண்ணப்பங்களையடுத்து அதனை ஏற்றுக்கொண்டு விடுதலை செய்யும்படி கட்டளை வழங்கிய நீதிமன்றம் அவர் விடுதலை செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கருணா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது கருணாவை ஸ்ரீலங்காவுக்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பிரிட்டிஷ் அரசு தரப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் சில நாட்களுக்குள் அவர் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்படுவார் எனவும் லண்டன் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லங்காதீப வெளிநாட்டுச் செய்திப்பகுதி: 08.06.2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment