Wednesday, June 4, 2008

உலகத் தமிழருக்கே உலை வைத்துவிட்ட "உலகத் தமிழர் இயக்கம்"

தம்பித்துரை பிரபாகரன் நேரு குணரட்ணம் மற்றும் சித்தா சித்தம்பலம் போன்ற உலகத் தமிழ் பிரமுகர்கள் இப்போது எங்கே என்றே தெரியவில்லை. முன்னர் கனேடியத் தமிழ் மக்களிட்ம பெரும் சவடால் விட்டுத் திரிந்தவர்கள் தற்போது தப்பித் தவறிக்கூட கனேடிய பத்திரிகைகளில் அறிக்கை விடுவதல்லை.

2006ஏப்ரலில் கனேடிய பொலீசாரின் முற்றுகைக்கு உள்ளான உலகத் தமிழர் இயக்கத்தின் கபாரியாலயங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் 13ம் திகதிகளில் முழுமையாகசீல் வைக்கப்பட்டுவிட்டன. கடந்த 2006ம் ஆண்டில் டொரன்டோ மொன்றியல் ஆகிய இடங்களில் அமைந்திருந்த உலகத் தமிழர் இயக்க காரியாலயங்கள் சுஊஆP யின் விசெட பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்ட செய்தியை கனடா வாழ் தமிழர்கள் பலரும் மறந்தே
போயிருந்தனர். அது ஒன்றும் பெரிய விடயமல்ல எனத்தோன்றுகின்ற வகையில் கனடா வாழ் புலிகள் உலகத்தமிழர் பத்திரிகையையும் அச்சடித்து விநியோகித்து வந்தனர்.

ஆனால் கனேடியப் பொலீசாரோ உலகத் தமிழர் காரியாலயங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள், மற்றும் கணனிகள் என்பவற்றை கொண்டு சென்றிருந்தனர். உலகத் தமிழர் காரியாலயத்திலிருந்து கைப்பற்றிய ஆவணங்களை துருவித் துருவி ஆராய்ந்த கனேடியப் பொலீசார் அங்கிருந்த பலரின் பெயர் விபரங்கள். வங்கிக் கணக்கு விபரங்கள் உட்டபட பல பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொண்டனர். அவற்றை வைத்தே சிலரைத் தொட்ர்ந்து
கண்காணிக்கத் தொடங்கினர்;. தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர்; அந்த வகையில் அகப்பட்டவர்தான் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிவிக்கப்பட்டிருக்கும் தம்பித்துரை பிரபாகரன் என்பவர்.

புலிகளுக்காக உலகத் தமிழர் சார்பில் பணம் சேகரித்துள்ளதாகவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 14 வருட சிறைத் தண்டனையை இவர் அனுபவிக்க வேண்டி வரும்.

அவர் பொலீசாரிடம் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளதோடு
தனக்கும் உலகத் தமிழர்; அமைப்புக்கும் இருந்த நெருங்கிய
உறவையும் அம்பலப்படுத்தியுள்ளதாகவே அவரது நெருக்கமான
நண்பர்கள் தெரிவிக்கின்றனர்;. ஆனால் உலகத் தமிழர்; இயக்கமோ
வழமை போலவே தமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
என்று முழுப் பூசனிக்காயை சோற்றில் புதைக்க முயன்றுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில தம்பித்துரை கைது செய்ப்பட்டதற்கும்
தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் உலகத் தமிழர் காரியாலயங்கள் சீல்
வைக்கப்பட்டதற்கும் தொடர் பிருப்பதாகவே கனேடிய பொலீஸ்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2006ல் உலகத் தமிழர் இயக்கத்தின்
காரியாலயங்கள் சுற்றி வளைக்கப்பட்டு ஆவணங்கள் எடுத:தச்
செல்லப்பட்டாலும் இரண்டு வருடகாலமாக இந்தக்காரியாலயங்கள்
சீல் வைக்கப்படாமல் விட்டு வைக்கப்பட்டிருந்தன. தற்பொத
தம்பித்துரை பிரபாகரன் கைது செய்யப்பட்டு வழக்குத்
தொடரப்பட்டுள்ள நிலையில் பொலிசாருக்கு உளகத்
தமிழர் இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு
பொதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்றே தகவல்கள் கூறுகின்றன. அவ் ஆதாரங்கள் பலவற்றை பொலீசார்; தம்பித்துரையின் ஒப்புதல்வாக்குமூலத்தில் இருந்தே பெற்றுக்கொண்டுள்ளனர்.இதுவரைகாலம் உலகத் தமிழரொடு மிக
நெருக்கமாக பணியாற்றிய பலர் தற்போது அந்தப் பக்கமே தலை வைத்துப்
படுப்பதில்லை. 'உலகத் தமிழர் இயக்கமா?அப்படியென்றால் என்ன? எனக் கேட்கும் நிலையில் இந்தப் பேர்வழிகள் சென்றுள்னர்.இத்தனை காலம் அவர்களுக்காக பணம் சேர்ப்பது உட்பட பல வேலைகளில்ஈடுபட்டவர்கள் கையும் களவுமாக பிடிபட்டவுடன் அவர்களைக் கைகழுவி விடுவதுதான் இந்த புலிகளின் பினாமி அமைப்புக்களின் வேலை
என்பதை கனேடிய புலி வாலுகள் தற்போது புரிந்து வருகின்றனர்.

இதற்கு முன்னரும் புலிகளுக்கு ஆயுதம் வாங்குவது மற்றும் பல்வேறு
வகையில் இரகசிமான முறையில் உதவிகளைச் செய்ததான குற்றச்
சாட்டுகளின் பேரில் கனடாவிலும் அமெரிக்காவிலும் பல்கலைக்கழக
மாணவாகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டபோது கனேடியத் தமிழ்
காங்கிரஸ் தமக்கு அப்படியாரையும் தெரியாது எனக் கைகழுவி
விட்டு நழுவியமை பலரும் அறிந்ததே.

இந்த முறை உலகத் தமிழரின் அவலம் யாதெனில், உலகத் தமிழர்
இகக்கத்தின் முன்னாள் இன்நாள் பிரமுகர்கள எவருமே கனேடியப்
பத்திரிகையாளாகளுடன் ஒரு வார்த்தைகூட பேசுவதற்கு திராணி
இல்லாது இருப்பதேயாகும். பத்திரிகையாளர் எதைக்கேட்டாலும்
எல்லாவற்றுக்கும் தமது வக்கிலிடமே கேட்டுக்கொள்ளுங்கள் எனப்
பதில்கூறி நழுவுகின்ற நிலைக்கு நிலைமை மோசமாகியுள்ளது.


புலிகள் இயக்கம் தொடர்பாக கனேடிய பாதுகாப்பு பிரிவுகளான
RCMP மற்றும் CSIS ஆகியவற்றினால் விடுக்கப்பட்ட
அறிக்கைகளின் அடிப்படையில் பல செய்திகளை தொடர்ந்து
வெளியிட்டமைக்காக National Post பத்திரிகை மீது மானநட்ட
வழக்குப் போடப் போவதாக 2000ம் ஆண்டில மிரட்டிய நேரு
குணரட்ணம் மற்றும் சித்தா சித்தம்பலம் போன்ற உலகத் தமிழ்
பிரமுகர்கள் இப்போது எங்கே என்றே தெரியவில்லை.
முன்னர் கனேடியத் தமிழ் மக்களிட்ம பெரும் சவடால் விட்டுத்
திரிந்து தமது பெயர்கள் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில்
வரவேண்டும் என அலைந்தவர்கள் தற்போது தப்பித் தவறிக்கூட
தமது பெயர்கள் பத்திரிகைகளில் வந்துவிடக்கூடாது என்பதில் மிகக்
கவனமாக இருக்கின்றனர். காரணம் நாளை நாங்களும் கனேடிய
மண்ணில் கம்பி எண்ண வேண்டி வரலாம் என்கின்ற பீதி இவர்களை
தற்போது பிடித்து ஆட்டுகின்றது.

கடந்த காலங்களில் இவர்கள் செய்ததெல்லாம் என்ன? இலங்கையில்
நிகழும் அரசியலின் முழுத்தாற்பரியத்தையும் அறியாத கனேடிய
தமிழ் இளம் சமுதாயத்தை கண்மூடித்தனமாக புலி அரசியலை
ஆதரிக்க வைத்ததுதான். புலிகளினால் தமிழ் மக்களுக்கு விடிவு
வரப்போவிதல்லை என்பதை தாம் நன்கு உணர்ந்திருந்தும் இளம் சந்ததியினரை
செம்மறியாடுகள் போல் வழி நடாத்தி தாங்கள் பிரமுகர்களாகத்
திரிந்தனர். தற்போது சகலதும் அம்பலப்பட்ட நிலையில் தாங்கள்
தப்பித்துக்கொள்ள முயலுகின்றனர்;.

உலகத் தமிழனத்துக்கான தமிழர்களுக்கே தலைவனாக ஒரு கொலை
வெறிபிடித்த பாசிச மனநோயாளியை இவர்கள் காண்பிக்க
முனைந்தனர். அந்த மன நொயாளியின் பிறந்த நாளையொட்டி
நடாத்தப்படும் மாவீரர் தினத்தை தமிழர்களின் விடுமுறை தினமாக
கனடாவில் காண்பிக்க முனைந்தனர். அந்த பாசிச இயக்கத்தின்
கொடியை தமிழினத்தின் தேசியக் கொடியாக காண்பிக்க
முயற்சிகளை மேற்கொண்டனர்.

கனடாவில் இருக்கும் லிபரல் ஜனநாயச் சூழலைப் பாவித்து தமக்கு
சாதமான சகலதையும் செய்துகொண்ட இவர்கள் இந்த கனேடிய
ஜனநாயக சூழலை தமிழ் மக்கள் பூரணமாக அநுபவிப்தைக்கூட
அநுமதிக்காத ஒரு கூட்டமாகவே செயற்பட்டு வந்துள்ளனர்.
கனடாவில் சுதந்திரமான எந்த ஒரு தமிழ் ஊடகமும் வெளிவராமல்
அவர்கள் தடுத்துள்ளனர். இலங்கையில் செய்யும் அனைத்து
அடாவடித்தனங்களான உடல் ரீதியாக தாக்குதல், அச்சுறுத்தல்,
கப்பம் வாங்குதல் போன்ற சகலவற்றையும் அவர்கள் கனடாவில்
செய்துவருகின்றனர்;.

ஆனால் அவர்களின் சகல திட்டங்களும் படிப்படியாக சரிந்து
வருவதையே தற்போதைய நிலைமை காண்பிக்கின்றது. தற்போது
இவர்கள் பணம்வாங்கச் சென்றால் மக்கள் உடனடியாக பொலீசாருக்கு
தகவல் கொடுக்கத் துணிந்துள்ளனர்;. இவர்கள் வந்து பணம் தரும்படி
கேட்பதை பதி செய்வதற்கான ஒலிப்திவுக் கருவிகள் கமராக்கள்
என்பவற்றை மக்கள் சில இடங்களில் தயாராக வைத்துள்ளனர். இந்த
ஆதாரங்கள் கனேடியப் பொலீசாரிடம் கையளிக்கப்படுகின்றன.

கனேடியப் பொலீசார்; மிக மெதுவாக ஆனால் படிப்படியாக
ஆதாரங்களை சேகரித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.
காரணம் கனடாவில் இப்படியான கிரிமினல் செயற்பாடுகளைத்
தடுக்கப்போகும்போது இது ஒரு இனத்துக்கு எதிரான செயற்பாடாக
காண்பிக்க முனைவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே
உறுதியான ஆதாரங்களை முழுமையாக சேகரிக்கியறார்கள்.

தற்போது கனடாவில் வாழும் பலருக்கு தாங்கள் துணிந்து புலிகளுக்கு
எதிராகச் செயற்படலாம் என்னும் நம்பிக்கை படிப்படியாக அதிகரித்து
வருகின்றது. காரணம் இலங்கையில்
கிழக்கு மாகாணத்திலும் வடக்கே யாழப்பாணத்திலும் புலிகளால பாரிய
அளவில் எதுவும் செய்ய முடியாது என்னும் நம்பிக்கை அதிகரித்து
வருகின்றது. இலங்கையில் தமிழ் மக்கள் புலிகள் இல்லாத ஒரு அரசியல் சூழ்
நிலைக்குத் தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருப்பதும் இந்த நம்பிக்கைக்கு
மற்றுமொரு முக்கிய காரணமாகும்.

கனடாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, அவுஸ்திரேலியா,
இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தற்போது புலிகளுக்கு எதிரான
நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. கனடாவிலும்
ஐரோப்பாவில் சில நாடுகளிலும் சில இடங்களில் அரசியல் வாதிகள்
வோட்டுகளுக்காக புலிகள் பற்றி கடுமையாககப் பேசாவிட்டாலும்
அந்நதந்த நாட்டு அரச இயந்திரங்கள் குறிப்பாக பாதுகாப்பு
தொடர்பான விடயத்தில் அவை புலிகள் இயக்கத்தையும் அதன்
செயற்பாடுகளையும் ஒரு பிரைச்சனையாகவே காண்கின்றன.

ஆனால், உலகத் தமிழர் இயக்கம், அதற்குத் தலைமை புலிகள்,
உலகெங்கும் வாழும் தமிழர்களை பிரதிநிதிதித்துவப் படுத்துபவர்கள்
புலிகளே என்னும் கருத்துக்களைப் பரப்பித் திரந்தவர்களும், புலிகளின்
ஆதரவில் சில்லறைத் தனமான செல்வாக்குத் தேடித் திரிந்தவர்களும்
ஒன்றைப் புரிந்து கொள்வேண்டும். புலிகள் அம்பலப்பட்டு
அடிவாங்குகையில் புலிகளுக்காக காவடி எடுத்தவர்களும்
அடிவாங்கியே தீரவேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. தமிழர்தான்
புலிகள், புலிகள்தான் தமிழர் என்றால் புலிகள் மீது விழும்
குற்றச்சாட்டுக்கள் தமிழ் சமூகத்தின் மீதும் விழும் என்பதும் தவிர்க்க
முடியாதது.

இந்தச் சாபக்கேட்டில் இருந்து மீழுவதற்கு உள்ளது ஒரே வழிதான்
தமிழ் மக்கள் புலிகளை விட்டு ஒதுங்கி ஆக்க பூர்வமான சமூக
அரசியல் செயற்பாடுகளின் மூலம் தமது பணிகளை முன்கொண்டு
செல்வதுதான்.

எதிரொலி

No comments: