அண்மையில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கும் குண்டுத்தாக்குதல்கள் மற்றும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் சில குறிப்பிட்ட குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் பற்றி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவ்வாறு குண்டுத்தாக்குதல்களை புலிகள் இயக்கத்தினர் நடத்துவதற்கான தகவல்கள் மற்றும் வசதிகளை சில சிங்கள இனத்தவர்களே வழங்கியிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு புலிகள் இயக்கத்தினர் தாக்குதல்களை மேற்கொள்ளுவதற்கு சிங்கள இனத்தவர்கள் உதவிகளை வழங்கியதான மற்றுருமொரு சம்பவம் கடந்த 29 ஆம் திகதி நடந்துள்ளதை சிலாபம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிலாபம் பிரதேசத்தில் உள்ள றிதிவெல்ல ஏரிப் பகுதியில் அமைந்துள்ள மைனாத் தீவில் கோவிலொன்றின் பின் பகுதியில் தற்கொலைக் குண்டுதாரிகள் அணியும் குண்டுகள் பொருத்தும் கவச உபகரணங்கள் கடந்த 29 ஆம் திகதி சிலாபம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து சிலாபம் பொலிஸ் விசேட குழுவினர் மைனாத்தீவிற்குச் சென்று குறித்த கோவிலின் பின்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த மேற்படி தற்கொலைக்குண்டுக் கவசங்கள் உபகரணங்களை மீட்டதாகவும் இவ்வாறு ஐந்து தொகுதி கவசங்கள் அங்கு புதைக்கப்பட்டிருந்ததாகவும் சிலாபம் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத்தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை சிலாபம் பிரதேசத்தைச்சேர்ந்த போதைப் பொருள் தடுப்பு மற்றும் அழிப்புப் பிரிவைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவே மேற்கொண்டு குறித்த தற்கொலைக் கவசங்கள், உபகரணங்களை கைப்பற்றியுள்ளனர். குறித்த பொலிஸ் பிரிவு தரப்பில் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப,
கடந்த 29 ஆம் திகதி மேற்படி மைனாத்தீவு கோவிலின் பின்புறத்தில் ஒரு சில நபர்கள் நிலத்தில் குழிவெட்டி மேற்படி தற்கொலைக்குண்டுகவசத் தொகுதிகளைப் புதைத்துக் கொண்டிருக்கும்போது அதனை கண்ட நபர் ஒருவரே உடனடியாக சிலாபம் பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் கொடுத்ததாகவும் ஆயினும் இதுபற்றி முதலில் தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் பிரிவினர் குறித்த பகுதியிலிருந்து எதனையும் கண்டு பிடிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் மேற்படி நபரிடமிருந்து மீண்டும் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவுக்கு அவசர தொலைபேசி அழைப்பு கிடைத்ததாகவும் இதன் பின்னரே குறித்த போதைத்தடுப்பு விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மறுபடியும் குறித்த மைனாத்தீவு கோவில் பகுதியில் தேடுதலை மேற்கொண்டு தற்கொலைக்கவசங்கள் புதைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி தற்கொலைக் கவசங்கள் சில நபர்களால் புதைக்கப்படுவதைக் கண்ட குறித்த நபர் முதலில் 119 அவசர அழைப்பு பிரிவுக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்று குறித்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த தற்கொலைக்கவசங்களைத் தேடி எடுப்பதற்காக சிலாபம் பிரதேச 119 அவசர அழைப்புப் பொலிஸ் பிரிவினர் ஏற்ற முறையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பொலிஸ் மேலிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் 119 அவசர அழைப்புபிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யவும் சிலாபம் பிரதேச பிரதி பொலிஸ்மா அதிபர் நிமல் மெதிவக்க நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது தமிழ் இனத்தவர் ஒருவரையும் இரண்டு சிங்கள இனத்தவர்களையும் சிலாபம் பொலிஸ் போதைத்தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்துள்ளனர். மேற்படி நபர்களோ அல்லது அவர்களின் உதவியுடன் வேறு நபர்களோதான் மேற்படி தற்கொலைக் குண்டுக் கவசங்கள், உபகரணங்களை குறித்த மைனாத்தீவு கோவில் பின்புறத்தில் புதைத்து வைத்துள்ளதாகப் பொலிஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புலிகள் இயக்கப் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கருதப்படும் மேற்படி மூன்று சந்தேகநபர்களிடமும் தீவிர புலனாய்வு விசாரணைகளையும் மற்றும் மேலதிக தேடுதல் சோதனை நடவடிக்கைகளையும் சிலாபம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
லங்காதீப: 02/06/2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment