தெற்காசிய நாடுகளின் ""சார்க்' மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ""சார்க்' அமைப்பின் தரப்பிலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தரப்பிலும் மேற்கொண்டு வரப்படும் நிலையில் இவ்வாறு ""சார்க்' மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஸ்ரீலங்காவுக்கு வரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தற்போது மாகாணசபை ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவரப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் செல்வாரா என்பது பற்றியும் அவ்வாறு செல்ல நேர்ந்தால் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சந்தித்துப் பேசுவாரா என்பது பற்றியும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இந்தவகையில் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப இவ்வாறு ""சார்க்' மாநாட்டுக்காக ஸ்ரீலங்காவரும் இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் பெற்றுத் தருமாறு கிழக்கு மாகாணசபை தரப்பில் கேட்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் இதுவரையில் இந்திய அரசு தரப்பிலிருந்து மேற்படியாக இந்தியப் பிரதமர் ஸ்ரீலங்கா வந்து ""சார்க்' மாநாட்டில் கலந்து கொண்டபின்னர் கிழக்கு மாகாணம் செல்வது பற்றியோ கிழக்கு முதலமைச்சர் பிள்ளையானைச் சந்தித்துப் பேசுவது பற்றியோ எந்தவிதமான தகவலோ அறிவிப்போ வெளியாகவில்லை.
ஆயினும், இந்தியச் செய்திவட்டாரங்களில் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப கடந்த காலங்களில் பிரபாகரனின் புலிகள் இயக்கத்துடன் சேர்ந்து இயங்கிவந்த பிள்ளையானுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பை ஏற்படுத்தவோ பேச்சுவார்த்தை நடத்தவோ சாத்தியம் இல்லை என்ற ரீதியிலான கருத்துகளே இந்திய அரச தரப்பில் நிலவுவதாகத் தெரியவந்துள்ளது.
லங்காதீப: 15.06.2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment