Tuesday, June 3, 2008

லட்சக்கணக்கில் பாங்கியில் கள்ள நோட்டை கொடுத்த வாலிபர் கைது; விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா?

மயிலாப்பூர் ராதாகிருஷ் ணன் சாலையில் ஒரு தனி யார் பாங்கி உள்ளது. இங்கு நேற்று மதியம் 30 வயது மதிக்கத் தக்க வாலிபர் டிப்- டாப் உடை அணிந்து வந்தார். அவர் 2 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தார்.

அந்த பணத்தை அதிகாரி கள் சோதனை செய்த போது அதில் இருந்த ரூ.500, ரூ.1000 போன்றவை கள்ள நோட்டுகள் என்று தெரிய வந்தது. அந்த வாலிபரை அதிகாரிகள் அங்கேயே அமர வைத்து ராயப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரி வித்தனர்.

துணை கமிஷனர் மவுரியா உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவீந்திரன், ராயப்பேட்டை இன்ஸ் பெக்டர் இருதயம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் ஆகியோர் பாங்கிக்கு சென்று அந்த வாலிபரை பிடித்தனர். அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர்.

அப்போது அவரது பெயர் பிரின்ஸ் மரியா நிக்கோலா (28) என்றும் இலங்கையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அந்த பணத்தை பரமேஸ்வரன் என்பவரது பெயரில் பிரின்ஸ் மரியா செலுத்தினார். எனவே பரமேஸ்வரனையும் பிடித்து வந்து விசாரித்தனர்.

பிரின்ஸ் மரியாவிடம் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்று போலீசார் விசாரித்தனர். அப்போது தனது வைர மோதிரத்தை விற்றதால் பணம் கிடைத்தது என்றான். யாரிடம் விற்றாய் என்று கேட்ட போது அண்ணா சாலையில் ஒரு வியாபாரி நின்று கொண் டிருந்தார். அவரிடம் விற் றேன் என்றான். அந்த வியா பாரி பற்றிய விவரங்களை பிரின்ஸ் மரியா தெரிவிக்க வில்லை.

எனவே அவன் ஏமாற்று வதை போலீசார் கண்டு பிடித்தனர். பணம் எப்படி வந்தது என்று துருவி துருவி விசாரிக்கிறார்கள். பிரின்ஸ் மரியா கடந்த 31-ந் தேதி தான் இலங்கையில் இருந்து சென்னை வந்தான். அவன் கள்ள நோட்டுக்களை இலங்கையில் இருந்து கொண்டு வந்திருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிக்கப்படுகிறார் கள்.

இதே போல் முகப்பேரில் உள்ள அதே தனியார் பாங்கி யில் ரூ.2600 கள்ள நோட் டுக்கள் கிடந்தது. அதை லூக் காஸ் என்பவர் எடுத்து சென்று ஜெ.ஜெ.நகர் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார்.

அதே பாங்கியின் திரு வான்மிïர் கிளையில் ஏற் கனவே ரூ.2 லட்சம் கள்ள நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதை யும் பிரின்ஸ் மரியா தான் டெபாசிட் செய்திருக் கலாம் என்று தெரிகிறது.

பிரின்ஸ் மரியாவிடம் போலீசார் சோதனை செய்த போது ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டுக்கள் இருந்தது. அந்த கள்ள நோட்டுக்களையும பாங்கியில் கொடுக்க முயன்ற ரூ.2 லட்சம் கள்ள நோட்டுக் களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

பிரின்ஸ் மரியாவிடம் இருந்த கள்ள நோட்டுக்கள் சென்னையில் அச்சடிக்கப் பட்டதாப அல்லது இலங்கை யில் இருந்து கொண்டு வரப்பட்டதா என்று விசா ரித்து வருகிறோம். அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் விடுதலைப் புலி கள் இயக்கத்தை சேர்ந்த வராக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

பயங்கரவாத இயக்கத்தி னருக்காக அவர் கள்ள நோட் டுக்களை மாற்ற முயற்சி செய்திருக்கலாம் என்ற சந் தேகமும் வலுத்துள்ளது. இதனால் மாநில உளவு பிரிவு போலீசாருக்கும், கிï பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் தான் இனி இது பற்றி விசாரிப் பார்கள்.

சென்னையில் உள்ள பாங்கிகளை அணுகி ஏதா வது கள்ள நோட்டுக்கள் இருப்பில் உள்ளதா என்று சரிபார்க்கும் படியும் வற்பு றுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறி னார்.

1 comment:

Anonymous said...

Yutarets! kasagad bah!