Tuesday, June 3, 2008

விடுதலை புலிகளுக்கு உதவிய ஆராய்ச்சி மாணவர் கைது

மதுரையில் விடுதலைப் புலிகளுக்கு ரசாயனம் வாங்கி கொடுத்து உதவிய சென்னை லயோலா கல்லூரி ஆராய்ச்சி மாணவர் டேவிட், கியூ பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இலங்கை விடுதலைப் புலிகளுக்கு ரசாயன பொருட்களை கடத்தியதாக, மதுரை மாவட்ட கியூ பிராஞ்ச் போலீசாரால் கடந்த ஏப்., 9ம் தேதி சக்கிமங்கலத்தில் வைத்து நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரிக்கையில், வேதியியல் ஆராய்ச்சி மாணவர் உதவியதாக தெரிவித்தார். இது தொடர்பாக, சென்னை லயோலா கல்லூரி ஆராய்ச்சி மாணவர் டேவிட்(26) என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். இலங்கையைச் சேர்ந்த ஜேம்ஸ் மகன் டேவிட் எம்.எஸ்சி., பட்டதாரி; லயோலா கல்லூரியில் பிஎச்.டி., ஆராய்ச்சி மாணவர். ஜேம்ஸ், டேவிட் உட்பட குடும்பத்தினர், திண்டுக்கல் புதுப்பட்டியில் உள்ள அகதிகள் முகாமில் பதிவு செய்து அங்கு வசிக்கின்றனர். சென்னையில் டேவிட் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். இவரை நவநீதகிருஷ்ணன் அணுகி, புலிகளுக்கு தேவையான ரசாயன பொருட்களை வாங்கிக் கொடுக்க உதவும்படி கேட்டுக் கொண்டார். அவருக்கு உதவிய டேவிட்டை, போலீசார் கைது செய்து மதுரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் 2ல் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் வெங்கடேசன் (பொறுப்பு) உத்தரவுப்படி டேவிட் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

1 comment:

Anonymous said...

Damu pa kmu to?.. Nano ni klase blog man?