Tuesday, June 3, 2008

யாழில் வெகு விமர்சையான களியாட்ட விழாக்களில் கலந்துகொண்ட பெருந்திரளான் மக்கள் (படங்கள்)

யாழ் வர்த்தக சங்கத்தினரதும் படையினரதும் ஏற்பாட்டில் கடந்த 23இ 24இ 25ஆம் திகதிகளில் நடைபெற்ற களியாட்ட விழாக்களில் யாழ் மக்கள் பெருந்தொகையாக கலந்து மகிழ்ந்தனர். யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இக்களியாட்ட நிகழ்வுகளில் பல தரப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுகள் முற்றிலும் களியாட்ட நிகழ்வுகளாக அல்லாமல் அங்கு அத்தியாவசிய பாவனைப் பொருட்டகள் அரச நிர்ணயவிலைக்கு விற்கப்பட்டதுடன் வறுமைக் கோட்டின் கிழ் வாழும் மக்களில் சிலருக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் சிலருக்கு தையல் இயந்திரம் போன்ற சுயதொழில் உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப் பட்டதோடு சுனாமியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் ஏசியன் பௌண்டேசன் எனப்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனத்தினரால் வழங்கப்பட்டது…

நிகழ்வுகளில் இராணுவஇ பொலிஸ்இ யாழ் அரச உத்தியோகத்தர்களுடன் பொதுமக்களில் வயோதிபர்கள்இ இளைஞர்கள்இ யுவதிகள்இ குழந்தைகள் என்ற வேறுபாடில்லாமல் பெருந்தொகையில் ஜனவெள்ளம் ஒரு லட்சத்தையும் தாண்டிக் காணப்பட்டது. நிகழ்வுகளின் போது உரையாற்றிய இராணுவஇ பொலிஸ்இ யாழ் அரச உயர் அதிகாரிகள் இலங்கை மக்கள் அனைவரும் சாதிஇ மத பேதங்களை மறந்து பயங்கரவாத வன்செயல்களை புறந்தள்ளி வாழ முன்வர வேண்டும் என்கின்ற கருத்துக்களையே முன்வைத்தனர்.

இங்கு மக்களுக்கும் படையினருக்கும் இடையேயான இடைவெளிகள் மிகவும் குறைந்து அவர்கள் அங்கு சிநேகபூர்வமாக மனம் விட்டு பேசி மகிழ்ந்ததை மிகவும் அவதானிக்க கூடியதாக இருந்தது.


படங்கள் யாவும் எங்கள்தேசம் இணையத்திலிருந்து பெறப்பட்டவை












































2 comments:

Anonymous said...

I'm thankful with your blog it is very useful to me.

Anonymous said...

So that those who will accidentally visit your site will not waste there time with this stupid topics.