Wednesday, June 4, 2008

RCMP யின் அடுத்த குறி??????

கனடாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் காரியாலயங்கள்
சீல்வைக்கப்பட்டாகி விட்டன. புலிகள் இயக்கத்துக்காக
உலகத் தமிழர் இயக்கம் சட்ட விரோதமாக கப்பம் வாங்கியது
அம்பலத்துக்கு வந்தள்ளது. தமிழர்களை மிரட்டி வங்கிக்
கணக்குகளில் இருந்து மாதா மாதம் கப்பம் அறவிடும்படி புலிகளின்
தலைமை உலகத் தமிழரின் முக்கியத்தர்களுக்க அனப்பிய கடிதம்
பிடிபட்டுள்ளது. கனடாவில் தேர்தல் பணிகளுக்காக மட்டும் பாவிக்க
வேண்டிய வாங்காளர் அட்டைகளை திரட்டுத்தனமாக எடுத்து
அதனடிப்படையில் தமிழரின் இருப்பிடங்களை
அறிந்து கம்பம் அறவிட்டதும் இப்போது வெட்ட
வெளிச்சமாகியுள்ளது.

கள்ளக் கடத்தல் பாரம்பரியத்தையுடைய
வல்வெட்டித்துறையும் மற்றவர்களை சுத்திப்
பிளைக்கும் வியாபாரத்தில் கரைகண்ட புங்குடு தீவு
வியாபரிகளும் சேர்ந்து (கதிர்காமக் கந்தா நீயும்
புங்குடு தீவானுக்கு போயிலை வித்த நீயொ,
இப்பிடி கொவணத்தோடு நிக்கிறாய் என்ற
கதையை இவ்விடத்தில் நினைவு கூரவும்) கனடா
வாழ் தமிழரை தட்டிச்சுத்தி செய்த திருகு
தாளங்கள் இப்போது அம்பலத்துக்கு
வந்தாகிவிட்து. இந்த நிலையில்
கனேடியப் பொலீசாரின் அடுத்த குறி
என்ன என்பது தொடர்பாகத்தான்
கனேடிய புலித் தமிழர் தலையைப்
போட்டு பிய்த்துக் கொள்கின்றனர்.
இது ஒன்றும் பெரிய புதிரல்ல.
சாதாரணமாக யாரைக் கேட்டாலும்
சொல்லி விடுவார்கள். கஸ்டப்பட்டு
உளக்கம் மக்களின் பணத்தை
கட்டுக்கட்டாக கப்பமாக அறவிட்டால்
அதை கள்ளமாகத்தான் பதக்கி வைக்க
வேண்டும். ஆனால் கனடா மண்ணில்
சதாரணமாக யாருமே நூறு டொலர் அல்லது மிஞ்சி மிஞ்சிப் போனால்
இருநூறு டொலர்களுக்கு மேல் பணமாக கையில் வைத்திருப்பது
கிடையாது. அப்படியிருக்க இந்த புலிப்பினாமிகள் கட்டுக்கடாக
பணத்தை எங்கே ஒளித்து வைத்திருப்பது?
எங்கோ ஒரு இடததில் அவை கணக்கு காட்டப்படத்தான்
வேண்டும். கணக்கு காட்டாமல் வைத்திருந்தால் அது கறுப்புப் பணம்.
அதை கழுவி வெள்ளைப் பணமாக்குவதற்கு புலிகள் என்னென்ன
நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்? அந்த திருகுதாள
விளையாட்டில் அவர்களோடு சேர்ந்து பணியாற்றுபவர்கள் யார்?
என்பதுதான் கனேடியப் பொலீசாரின் அடுத்த குறியாகும். அந்த
வகையில் புலிகள் சேர்த்த கப்பத்தை முதலீடாக வைத்து
டொரன்டொ முதல் மொன்றியல், ஒட்டாவா, வான்கூவர் என கனேடிய
மாநிலங்கள் பலவற்றில் தமிழர்கள் வைத்திருக்கும் வியாபார
நிலையங்கள் மீதே சுஊஆP யின் கடந்த இரு வருடங்களாக
தகவல்களைத் திரட்டி வருவதுடன் அதில் தொடர்பபட்டுள்ள
முக்கிய நபர்களையும் கண்காணித்து வருகின்றனர்.
டொரன்டோவில் புலிகளின் முதலீட்டில் நடத்தும் பல வியாபார
நிலையங்கள் என வெளிப்படையாக தெரிந்த இடங்கள் சில
இருக்கின்றன. ஆனால் வெளியே தெரியாமல் வேறு
தனிப்பட்டவர்களின் பெயர்களில் நடத்தப்படும் வியாபார நிலையங்கள்
தொடர்பாகத்தான் கனேடியப் பொலீசார் கண் வைத்திருப்பதாகத்
தெரியவருகின்றது. அவ்வாறான இடங்களில்
தொழில் செய்வதற்கென்று இலங்கையில் இருந்து
அண்மையில் புலிகால் அனுப்பி வைக்கப்பட்ட
பலர் வந்திருக்கின்றனர்.

ஏற்கனவே இங்கு புலிகளுக்காக முக்கிய
பங்காற்றியவர்கள் பலர் கைது செய்யப்படாமல்
இரப்பதற்காக படிப்படியாக கனடாவை விட்டு
வேற நாடகளுக்கு குடம்பமாக
அனப்பிவைக்கப்படகின்றனர். அவர்களில் சிலர்,
"பிள்ளைகள் வளருகிறது நாங்கள் இந்தியாவில்
அல்லது சிங்கப்பூரில் போய் செட்டில் ஆகப்
போகிறோம்" என்று கதை விட்டபடி
கிளம்பிப்போய்க் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்குப் பதிலாக புதிய நபர்கள்
கொண்டு வந்து இறக்கப்படுகின்றனர்.
கனடாவில் புலிகளின் இரகசிய உள்
வட்டம் ஒன்று முன்னர் இருந்தே
இயங்கி வருகிறது. அது தொடர்பான
தகவல் அறிந்தவர்கள் அதனோடு
நெருக்கமாக பணியாற்றி பண முதலீடு
செய்து பாரிய அளவில் வியாபாரம்
செய்தவர்கள் போன்ற விபரங்கள்
கனேடிய பொலீசாரின் விசாரணைஹ
களின்போது வெளிவராமல்
இருப்பதற்காகவே பல நபர்கள் கனடாவை விட்டு வெளியே
அனுப்பப்படுகின்றனர்.

ஏற்கனவே புலிகளுக்காக பணம் சேர்த்து திரிந்தவர்கள், சேர்த்த
பணத்தில் ஒரு பகுதியை சுத்தி வீடு வாங்கியவர்கள், வியாபாரம்
துவங்கியவர்கள் எல்லாரையும் தற்போது புலிகள் அணுகி வருகின்றனர்;.
போலீசார் விசாரித்தால் தம்மைப்பற்றி எதுவும் கூறவேண்டாம் என
கேட்டுக்கொள்கின்றனர். ஆனால் புலிகளின் பணத்தில் வீடு
வாங்கியவர்கள், பிஸினஸ் ஆரம்பித்தவர்கள் தமக்கு அந்தப் பணம்
வந்தது எவ்வாறு என்பது தொடர்பாக பொலீசாரிடம் விளக்கம் கூறியே
ஆகவேண்டும். ஒன்றில் அவர்கள் புலிகளை காப்பாற்றுவதற்காக
தாங்கள் கம்பி எண்ண வேண்டும். அல்லது கனேடிய பொலீசாருக்கு
அப்புரூவலாக மாறி புலிகளை மாட்டிவிட வேண்டும். நடக்கப்
போகும் கூத்தை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியதூன்.

எதிரொலி

No comments: