Thursday, August 7, 2008

மட்டு. தொப்பிக்கல தரவையில் இராணுவ "ட்ரக்' மீது கிளைமோர்! 23 படையினர் உயிரிழப்பு என்கின்றனர் புலிகள்

மட்டக்களப்பு தொப்பிக்கல தரவைப் பகுதியில் பெரியவட்டுவான் என்ற இடத்தில் இராணுவத்தினர் பயணம் செய்த "ட்ரக்' ஒன்றின் மீது நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி யளவில் விடுதலைப் புலிகள் கிளை மோர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
அந்தத் தாக்குதலில் 23 படையினர் உயிரிழந்தனர் என்றும் நான்கு பேர் காய மடைந்தனர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 30 வரை யான படையினரை ஏற்றிச் சென்ற "ட்ரக்' இந்தத் தாக்குதலில் சிக்கி, தூக்கி வீசப் பட்டு சின்னாபின்னமாகிக் கிடந்தது என் றும் புலிகள் கூறுகின்றனர். காயமடைந்த படையினர் வெலிகந்த வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்தக் கிளைமோர் தாக்கு தல் தொடர்பாகத் தகவல் வெளியிட்ட படைத்தரப்பு, ஆக ஒரேயொரு இராணுவ சிப்பாய் மாத்திரமே பலியானார் என்றும் மூவர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறு கிறது. மட்டக்களப்பு தொப்பிக்கல பிரதேசத்தை இராணுவத்தினர் கைப்பற்றியமைக்குப் பின்னர் கடந்த சுமார் ஒருவருடகாலத்தில் அங்கு படையினர் மீது நடத்தப்பட்ட முதலாவது பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டது.

No comments: