பண வீக்கம், விலைவாசி என்பன கிடுகிடு என எகிறி வானைத் தொட்டு நிற்கும் பின்புலத்தில், அன் றாட சீவியத்துக்கான வயிற்றுப்பாட்டுக்கு உணவு பெற முடியாத இக்கட்டில் சிக்கலில் சாதாரண குடும்பம் ஒவ்வொன்றும் சிக்கித் தவிக்கும் பேரவல நிலைமை இன்று உருவாகியிருக்கின்றது.
அடிப்படைத் தேவைகளுக்குரிய அத்தியாவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியாத அள வுக்கு ஒவ்வொரு வீட்டிலும் வரவு செலவுத் திட்டம் கையை மீறிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் சூடானின் டாபூர் நிலைமையை ஒத்த மோசமான பட்டினி நிலையை இலங்கை மக் கள் எதிர்கொள்ளும் பேராபத்துக் கட்டம் சூழ்ந்து நெருங்கி வருவதாக முக்கிய ஆய்வு மையங்களும், நிறுவனங்களும் எச்சரித்திருக்கின்றன.
இந்தப் பின்புலத்தில் இலங்கையின் பொருளா தார நிலைமை குறித்து சாதாரண மக்களின் வாழ் வாதார நிலைமைகள் பற்றி இலங்கையின் முக்கிய ஆய்வு மையம் மக்கள் கணிப்பைக் கண்டறிந்துள்ளது.
அந்த ஆய்வின்படி
* நாட்டில் முக்கிய மிக அத்தியாவசிய பொருள் களின் விலைகள் நெருக்கடிக் கட்டத்தை அடைந்து விட்டன என்பதை 96 வீதமான மக்கள் ஆமோதித் திருக்கின்றார்கள்.
* இந்த நெருக்கடிக் கட்டத்துக்கு அரசுதான் பொறுப்பு என்று 82 வீதமான இலங்கை மக்கள் கருது கின்றார்கள். அரசு மீது குற்றம் சுமத்த முடியாது என் போர் ஆகப் பதினாறு வீதத்தினர் மட்டுமே.
* வெளிநாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக் கான விநியோகமும் கேள்வியும் அதிகரித்திருப்பதும் உள்நாட்டில் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்ற கருத்தை இலங்கை நாட்டு மக்களில் 72 வீதமானோர் ஏற்றுக் கொள்ளுகின்றனர். விடை தெரியாது என்று பதினாறு வீதத்தினர் கூறுகின்றனர். அத்தியாவசியப் பொருள்களுக்கு வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் கேள்வி அதிகரிப்பும் இலங்கையில் விலைவாசி அதிகரிப்புக்குக் காரணம் என்ற நியா யத்தை நாட்டு மக்களில் 12 வீதத்தினர் ஏற்கவில்லை.
* இன்றைய பொருளாதார இக்கட்டு நிலையைச் சமாளித்து, மக்களுக்கு உதவுவதற்காக அத்தியாவ சியப் பொருள்களுக்கு அரசு மேலும் மானியமளித்து, பொருள்களின் விலையைக் குறைக்க விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டு மக்களில் 78 வீதத்தினர் கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள்.
இவையே மேற்படி ஆய்வுகளில் மக்கள் கருத்துக் கணிப்பில் வெளியான முடிவுகளாகும்.
இன்று இத்தகைய மோசமான பொருளாதார நெருக் கடி நிலைமை ஏற்பட்டு, மக்கள் தமது வாழ்வியலுக் கான அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாது அந்தரிக்கும் சூழ்நிலை ஏற்பட்ட மைக்கு அரசே அரசின் நிர்வாகச் சீர்கேடுகள், வீண் விரய நடவடிக்கைகள், ஊதாரித்தனமான செயற் பாடுகள், தவறான ஆட்சி முறைகள் என்பனவே காரணம் என்று எண்பது வீதமான மக்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள்.
பொதுச்சொத்தை சீரழிக்கும் செயற்பாட்டுக்கு உதாரணமாக "மிஹின் ஏயார்' நிறுவனச் சீர்கேட்டை இந்த ஆய்வில் கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இந்த விமான சேவை நிறுவனத்தை உருவாக்கி, செயற்படுத் தியதன் மூலம் பல நூறு கோடி ரூபா அரசநிதி எவ் வாறு வீண் விரயமாக்கி, அழிக்கப்பட்டது என்பது இன்று பரகசியமான விவகாரமாகும். அதைச் சுட்டிக் காட்டியதன் மூலம் இன்றைய குளறுபடி நிலைக்கு அரசுத் தலைமையே பொறுப்பும் பின்னணியும் என்று பொதுமக்கள் நேரடியாகவே குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
இதற்கிடையில்
இலங்கையின் நான்கு சிறுவர்களுள் ஒருவர் போசாக்கின்மையால் வாடுகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் புள்ளி விவரத்தை "யுனிசெவ்' அமைப்பும் வெளியிட்டிருக்கின்றது.
அந்த அமைப்பின் ஆய்வுகளின்படி இலங்கைச் சிறுவர்களில் 22 வீதத்தினர் எடை குறைந்தவர்கள். மேலும் 18 வீதத்தினர் வளர்ச்சி குன்றியவர்கள்.
இந்த ஆய்வுகள் தரும் புள்ளி விவரங்களும் கணக் குகளும் சரியானவை என்றால்
இனப்பிரச்சினை, கொடூர யுத்தம், பேரழிவுகள், மோசமான மனித உரிமை மீறல்கள், அரசு ஆதரவுத் துணைப்படைகளின் ஆதரவோடு முன்னெடுக்கப் படும் அரச பயங்கரவாதச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் மட்டுமல்லாது, பட்டினிச்சாவு உட்பட்ட போஷாக்கின்மைப் பிரச்சினை களிலும் டாபூர் தேசத்தை ஒத்ததாக இலங்கைத் தீவு உருவாகப் போகின்றது என்பதே அர்த்தம்.
சூடானின் அரசுத் தலைவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படும் நிலைமை அந்த நாட்டில் ஏற்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
அத்தகைய கட்டத்தையும் தாண்டி இலங்கை நிலைமை சென்றாலும் கூட ஆச்சரியப்படுவதற் கில்லை என்பதே அவதானிகளின் கருத்தாகும்.
Thursday, August 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment