Sunday, August 10, 2008

பூனகரியைத் தொட்டுவிட இன்னும் இருப்பது 23கி.மீ

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து சுமார் 75கி.மீ தொலைவில் உள்ளது பூனகரி. கடந்த ஆண்டு தொடங்கிய ஏ32 வீதி வழியான இராணுவ முன்னகர்வு கடந்த கிழமை வெள்ளாங்குளத்தை அடைந்தது. தொடர்ந்து முன்னேறும் TF-1 என்றழைக்கப்படும் 58வது படையணி புலிகளின் முக்கிய கடல் தளம் அமைந்துள்ள நாச்சிக்குடாவை அண்மித்துள்ளது. பூனகரியை படைகள் அடைய இன்னும் 23கி.மீ தொலைவு தூரம்தான் இருக்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்துக்குள் முதலில் நுழைந்த படையணியும் இதுவாகும். அத்துடன் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் கடைசியாக இருந்த ஒரேயொரு மாவட்டமான கிளிநொச்சிக்குள் இவர்கள் பிரவேசித்ததால் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் தற்போது இலங்கையில் ஒரு மாவட்டமும் இல்லையென்ற நிலை உருவாகி விட்டது.

2002 பெப்ரவரி யுத்த நிறுத்தத்தின் போது ஏழு மாவட்டங்களில் தமது பிரசன்னத்தை அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக வைத்திருந்த புலிகள் இன்று ஒன்றரை மாவட்டத்துக்குள் முடங்கிப் போயுள்ளார்கள். புலிகளின் இந்தத் தோல்வியின் பின்னுள்ள பல்வேறு காரணங்களில் முதன்மையானது புலிகளின் ‘ஏக தலைமைத்துவம்’ எனும் அறமற்ற அரசியலே ஆகும்.

No comments: