Sunday, August 10, 2008

இண்டர்நெட்டில் பரவும் கிளுகிளு படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கொடி கட்டிப்பறக்கும் நயன்தாரா பற்றி சூடான தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.சிம்புவுடன் காதல் முறிந்ததும் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் கோடம்பாக்கத்தை தன்வசமாக்கியுள்ளார். ரஜினியுடன் நடித்த குசேலன் தற்போது ரிலீசாகியுள்ளது. தனுசுடன் ஜோடி சேர்ந்த யாராடி நீ மோகினி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஷால் ஜோடியாகி ஆடை குறைத்து நெருக்கமாக நடித்த சத்யம் படம் வருகிற 14-ந்திகதி ரிலீசாகிறது.

இந்த நிலையில் விஷாலும் நயன்தாராவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாயின. இதை விஷால் மறுத்தார். தற்போது நயன்தாரா மலையாள இயக்குனர் ஷாஜிகைலாசை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற கிளுகிளு படங்களும், இன்டர்நெட்டில் பரவியுள்ளது.

சிம்புவை காதலிக்கும் முன்பே ஷாஜி கைலாசுடன் நயன்தாரா தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்த கிளுகிளு படத்துடன் செய்தியை உலவ விட்டுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் நயன்தாராவும் ஷாஜியும் நெருக்கமாக இருந்தபோது இந்த படங்கள் எடுக்கப்பட்டது என்ற வாசகமும் இன்டர்நெட்டில் இடம் பெற்றுள்ளது.

ஆண்களை அடுத்தடுத்து காதலித்து ஏமாற்றுவதே நயன்தாராவின் வேலை என்றும் இன்டர்நெட் டில் செய்தி பரப்பியுள்ளனர். இதை பரப்பியது யார் என்று தெரியவில்லை. இதுபற்றி நயன்தாராவுக்கு நெருக்கமானவர் ஒருவர் கூறும்போது, நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக இருப்பது பலருக்கு பிடிக்கவில்லை. அவர் மார்க்கெட்டை சரிக்க சதிவலைகள் பின்னப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆபாச படங்களை பரப்பி இருக்கிறார்கள். நாங்கள் அந்த ஆபாச படத்தையும், அதோடு வந்திருக்கும் செய்தியையும் இன்னும் பார்க்கவில்லை என்றார்

No comments: