இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்கள் பேரவலத்தையும் பெரும் மனிதாபிமான நெருக்கடிகளையும் எதிர்நோக்கியிருக்கின்றனர் என ஐ.நா. தொண்டு அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.
அந்த மக்கள் மேலும் அவலங்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்கு ஐக்கிய நாடுகளின் உதவிகள் காலம் தாழ்த்தாது அவசரமாக அவர்களைச் சென்றடைவது மிகவும் அவசியமானது என்று அந்த அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டென் வெய்ஸ் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான அலுவலகத்தின் செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
12 ஆயிரம் குடும்பங்கள் மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சிக்கு அருகில் வந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் இதுவரை இடம்பெயர்ந்த மக்களைச் சென்றடைய முடிந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் அந்த மக்களுக்கான விநியோகங்கள் தொடர்வதை உறுதி செய் வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்த 1,45000 பேர்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில்
வன்னியில் நிலைமை மிகவும் நிச்சயமற் றதாகவுள்ளதாகவும் இதன்காரணமாக அப்பகுதி மக்களுக்கு ஐக்கிய நாடுகளின் விநியோகம் அவசியமாகவுள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் காரணமாகப் புதிதாக இடம்பெயர்ந்தவர்கள் உட்பட ஒரு லட்சத்து 45 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் விடுத லைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி யில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மோதல் இடம்பெறும் கிளிநொச்சி தென்மேற்கு மற்றும் முல் லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவு மக்கள் சிக்குண்டு உள்ளனர் எனவும் இவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரிய வில்லையெனவும் கோர்டென் வெய்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறான கருத்தை வலியுறுத்தியுள்ள மன்னார் மறைமாவட்ட ஆயர் தோமஸ் இராயப்பு ஜோசப் விடுதலைப் புலிகளினது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் மேலும் துயரத்தை அனுப விப்பதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுக ளினதும், ஏனைய மனிதாபிமான அமைப் புகளினதும் உதவிகள் அந்த மக்களைச் சென்றடைவது அவசியம் என்று கூறினார்.
அடுத்த சில மாதங்களில் மழைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் அந்த மக்களின் நிலை மேலும் மோசமடையலாம் என்றும் அவர் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான அலவலக செய்திச் சேவைக்குத் தெரிவித் துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment