Tuesday, August 19, 2008

தற்கொலைத் தாக்குதல் நடத்திய இப்ராஹிம் முபாரக் யார்?

கடந்த மே மாதம் 16 ஆம் திகதி கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியில் சம்புத்தாலோக விகாரை முன்பாக கலத்தடுப்புப் பொலிஸ் பிரிவினர் அமர்ந்திருந்த பொலிஸ் வாகனத்தைக் குறிவைத்துத் தற்கொலைக் குண்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த கரும்புலி தற்கொலைப் படையணியைப் பற்றிய பல்வேறு வியப்புக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி தற்கொலைத் தாக்குதலில் தற்கொலைப்படையாளி பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் எம்.இசட்.ஈ.பி. 3875 இலக்கமுடைய ஹீரோ ஹொண்டா வகையைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளாகும். இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பொலிஸ் தரப்பில் 12 பேர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து குண்டு வெடிப்பு ஸ்தலத்தில் தற்கொலைப் படையாளியின் அடையாள அட்டை எனக் கருதப்பட்ட தேசிய அடையாள அட்டையை பொலிஸார் கண்டுபிடித்தனர். அந்த அடையாள அட்டையின் இலக்கம் 820244796ங என்பதாகும்.

இந்த அடையாள அட்டையில் புலனாய்வுப் பிரிவினரதும் பொலிஸ் பிரிவினரதும் வியப்புக்குரியதாக இருந்தது அதில் குறிப்பிட்டிருந்த பெயர் ஆகும். அது முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இப்ராஹிம் லெப்வை முபாரக் என்பவருடைய அடையாள அட்டையாகும். அதில் அவர் பிறந்த இடம் திருகோணலை எனவும் முகவரி வைசால வீதி (வைத்தியசாலை வீதி) கிண்ணியா திருகோணமலை எனவும் குறிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த அடையாள அட்டைப் பற்றி விசாரணைகளிலிருந்து பெறப்பட்ட வியப்பான தகவல்கள் புலனாய்வுப் பிரிவு தரப்பில் வெளியாகியுள்ளன. இவற்றுக்கேற்ப மேற்படி அடையாள அட்டையில் இப்ராஹிம் லெப்வை முபாரக் எனக் குறிப்பிடப்பட்ட புலிகள் இயக்க நபரின் பெயர் வேலாயுதன் பிரியதர்சன் எனவும் அவர் புலிகள் இயக்கத்தால் சுதர்ஷன் என்று அழைக்கப்பட்டு வந்தாரெனவும் தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய பிறந்த இடம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பலகாமம் பொன்கேணி பிரதேசமாகும். அங்கு தாய் சகோதரிகளுடன் வாழ்ந்து வந்த சுதர்சன் 16 வயதில் 2001 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததைத் தொடர்ந்து அவ்வூர் பகுதியிலிருந்து அடிக்கடி தலைமறைவாகிய பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குச் சென்றார். அரச படையினர் சாம்பூரைக் கைப்பற்றுவதற்கு முன்னர் மேற்படி சுதர்சன் அந்தப் புலிகள் முகாமிலிருந்தார். அங்கு தவறுதலாக வேறொரு புலிகள் இயக்க உறுப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். பின்னர் அவரைப் புலிகள் இயக்க பொலிஸ் படையில் சேர அழைக்கப்பட்டுச் சென்றாலும் புலிகள் இயக்க உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டுஅம்மான் சுதர்சனைக் கரும்புலிகள் பிரிவில் சேர்த்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நீண்ட காலம் தலைமறைவாகிவிட்ட சுதர்சன் கடந்த லோட்டஸ் வீதி தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னர் இப்ராஹிம் லெப்வை முபாரக் என்ற பெயருடன் குறித்த மோட்டார் சைக்கிளில் நடமாடித் திரிந்த பின்னர் மேற்படி கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளார்.

லங்காதீப விமர்சனம்: 10.08.2008.

No comments: