Tuesday, August 19, 2008

மாகாணசபைத் தேர்தலுக்கு முன் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுவிடும்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் படையினரால் கிளிநொச்சியை கைப்பற்ற முடியும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கருவிட்ட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் இறந்து போனார் என்ற செய்தி கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.படையினர் கிளிநொச்சியை நெருங்கியுள்ளனர். எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் கிளிநொச்சியையும் கைப்பற்றமுடியும் எனவும் ரட்ணசிறி விக்கிரநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments: