Monday, August 11, 2008
புலிகள் இறுதியில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த கூடும்
விடுதலைப்புலிகள் இறுதியில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என கருணா தெரிவித்துள்ளார். தான் அந்த அமைப்பில் இருந்த காலத்திலும் விடுதலைப்புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். லக்பிம சிங்கள இதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் மூன்றாம் நிலைகளில் சிறந்த தலைவர்கள் இல்லாததன் காரணமாகவே விடுதலைப்புலிகள் தற்போது தோல்வியடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவர்களில் பலர் இராணுவத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார். தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போது ஆராய்ந்த பின்னரும், பூகோள வரைப்படங்களுக்கு அமையவும் போரிட்டதாகவும் பிரபாகரன் என்ற வரைப்படத்தின் அடிப்படையில் போராடவில்லை என்றும் கருணா தனது செவ்வியில் கூறியுள்ளார். அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் பாதுகாத்து கொள்ள முடியாது எனவும் பிரபாகரன் இந்தியாவுக்கோ அல்லது கம்போடியாவுக்கோ தப்பிச் செல்ல போவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கருணா தெரிவித்துள்ளார். இந்த முயற்சி தோல்வியடை கூடும் என தெரிவிக்கும் கருணா பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியாது என எவரும் கூறிவார்கள் எனில் அது பொய்யான கருத்து என்றும் கூறியுள்ளார். அவர் வாழும் ஆசையை கொண்டவர், மரணத்திற்கு அச்சமுள்ளவர் என்பதாலேயே பிரபாகரன் பாரியளவில் தன்னை சுற்றி பாதுகாப்புகளை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமரிக்கப்படையினரால் ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனை உயிருடன் பிடிக்க முடியுமானால் ஏன் இலங்கை படையினருக்கு பிரபாகரணை பிடிக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment