Monday, August 11, 2008

புலிகளின் தலைவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயருகின்றனர்.

அரச படையினரின் உக்கிர தாக்குதல்கள் காரணமாக புலிகளின் தலைவர்கள் தமது குடும்பங்களை வெவ்வேறு இடங்களுக்கு இடம் நகர்த்திச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

யுத்த ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துணுக்காய் மற்றும் மல்லாவி பிரதேசத்திலிருந்து புலி பொறுப்பாளர்களின் குடும்பத்தவர்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினரின் தாக்குதல்களில் வன்னிப் பிரதேசத்தை தக்கவைக்க புலிகளின் தலைவர்கள் பல்வேறு யுத்த தந்திரோபாயங்களை உச்சக்கட்டத்தில் பயன்படுத்தி வருவதாகவும் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments: