Monday, March 31, 2008

நிலவுக்கு அஸ்தியை அனுப்பலாம்

4 லட்சம் ரூபாய் இருக்கிறதா? நிலவுக்கு அஸ்தியை அனுப்பலாம்

லாஸ் ஏஞ்சல்ஸ் :நெருங்கிய உறவினர்கள் இறந்து விட்டால், அவர்களின் அஸ்தியை, இமய மலையில் துõவுவதும், புண்ணிய நதிகளில் கரைப்பதும் வழக்கம். இனி அஸ்தியை, நிலவுக்கே அனுப்பி வைக்கலாம். இதற்கு ரூ.4 லட்சம் கட்டணம்.

அமெரிக்காவில், ஹூஸ்டனில் செயல்பட்டு வருவது செலஸ்டிஸ் நிறுவனம். 14 நாடுகளை சேர்ந்த, நுõற்றுக்கணக்கான முக்கிய நபர்களின் அஸ்தியை இந்நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. தற்போது, நிலவுக்கு அஸ்தியை அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளது. இது குறித்து, நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் சாபெர் கூறியதாவது:அஸ்தி உள்ள சிறு கலசங்கள்,"ரோபோ லேன்டர்' என்ற கலத்தில் வைக்கப்பட்டு, ராக்கெட் மூலம் நிலவுக்கு எடுத்து செல்லப்படும். அங்கு "ரோபோ லேன்டர்'கள் தரை இறக்கப்படும். ஒரு நபரின் அஸ்தியை நிலவுக்கு எடுத்து செல்ல, ரூ.4 லட்சம் கட்டணம். அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு சார்லஸ் சாபெர் கூறினார்.

Dinamalar

No comments: