Monday, March 31, 2008

இவரன்றோ மக்கள் பிரதிநிதி

இலினாய்ஸ், மார்ச் 30: பணத்தை பறிகொடுத்தால் ஐயோ என்று அழுது புலம்பும் மக்களுக்கு இடையே அமெரிக்காவை சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் தன்னிடமிருந்து பணத்தை பறித்துச் சென்ற திருடனுக்காக பிரார்த்தனை செய்யப் போவதாக கூறியுள்ளாராம்.

விவிட்டர் யூஞ்ச் என்ற 77 வயதான பெண் எம்.பி.யான அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் துப்பாக்கியை காட்டி அவரிடமிருந்து வெறும் 7 டாலர் களை மட்டும் பறித்துச் சென்று விட்டானாம்.

இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வேலைவாய்ப்புகள் இல்லாதது இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளாராம்.

Maalaisudar

No comments: