Saturday, April 26, 2008

வடபகுதியைக் கைப்பற்றும் திட்டத்தில் எந்த மாற்றமுமில்லை


வடபகுதியை படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தமது திட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

வடபோர்முனையில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த புதன்கிழமை முகமாலை முன்னரங்கப் பகுதியில் படைத்தரப் பினருக்கு ஏற்பட்ட இழப்புக்களானது வடக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தும் தமது நோக்கத்தைத் தடுக்காது. அதேநேரம் விடுதலைப் புலிகளின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிடவுமில்லை.

வடக்கில் கடந்தகால மோதல்களில் பல்வேறு இழப்புக்களைச் சந்தித் திருந்த போதும், வடக்கை முழுமையாகக் கைப்பற்றும் காலம் மிகத் தொலைவில் இல்லை. அதேநேரம் முகமாலை மோதல்களில் 150 பேர் கொல்லப்பட்ட தாகவும், இதற்கு உயர்இராணுவ அதிகாரிகளின் கவனயீனமே காரணமெனவும் வெளியான தகவல்களை மறுத்திருக்கும் இராணுவத் தளபதி, 53 மற்றும் 55ஆம் படைப்பிரிவுகள் எதிர்களின் பலம் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்தே வந்ததாகக் கூறியுள்ளார்..

இந்த மோதலில் ஈடுபட்டிருந்த 53ஆம் 55ஆம் படைப்பிரிவுகள் தமது எல்லையை எட்டியிருப்பதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்..

No comments: