Sunday, April 20, 2008

தேர்வில் காப்பியடித்த எம்.எல்.ஏ.

சட்ட கல்வித் தேர்வில் காப்பியடித்த எம்.எல்.ஏ., கையும் களவுமாக
பிடிபட்டார். இடுக்கி மாவட்டம் பீர்மேடு எம்.எல்.ஏ., பிஜுமோள். திருவனந்தபுரம்
பல்கலையில், பகுதி நேர சட்டப்படிப்பு (எல்.எல்.பி.,) படித்து வருகிறார்.
இரண்டாவது செமஸ்டர் தேர்வு திருவனந்தபுரம், "லா அகடமியில்' நடந்தது.
இதில், "லேண்ட் லா" தேர்வு எழுதிய எம்.எல்.ஏ., பிஜுமோள், காப்பியடித்த
போது, கண்காணிப்பாளரிடம் சிக்கினார். இவர், எம்.எல்.ஏ.,வாக இருப்பதால்,
மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் எச்சரித்த கண்காணிப்பாளர், தேர்வு
ஹாலை விட்டு வெளியேற்றினார். ஏற்கனவே, இவர் அரை மணி நேரம்
தாமதமாக தேர்வு எழுத வந்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்க கேரள
மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

No comments: