Thursday, May 1, 2008

பிரிட்டனுக்குள் நுழைய பின்லாடன் மகனுக்குத் தடை

ஒசாமா பின் லாடன் மகன் உமர் ஒசாமாவுக்கு, பிரிட்டனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.தனது தந்தை பின்லேடனுடன் உமர் ஒசாமாவுக்கு, இன் னும் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலேயே, அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

27 வயதாகும் உமர், பிரிட்டனில் வசிக்கும் 52 வயதான ஜென் பிளிக்ஸ்
பிரவுனே என்ப வரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியினர், தற்போது எகிப்து நாட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரிட்டனின் ஷேஸ்ஷையர் நகரில் குடியேற விரும்பிய இவர்கள், எகிப்து நாட்டில் உள்ள பிரிட்டன் தூத ரகத்தில் விசா கோரி விண்ணப் பித்திருந்தனர்.
இவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தூதரக அதி காரிகள், உமருக்கு தனது தந்தை பின்லேடனுடன் தொடர்பு இருப்பதாகவும், கடந்த ஆண்டு நடைபெற்ற லண்டன் குண்டு வெடிப்பில் இவருக்கும் பங்கு இருப்பதாகக் கூறி, அவர் பிரிட் டனில் குடியேறுவதற்கு அனு மதி மறுத்துள்ளனர்.

இதனிடையே, தனக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப் புத் தெரிவித்து தூதரகத்தில் உமர் முறையீடு செய்துள்ளார்.தனது தந்தையைக் காரணம் காட்டி, தனக்கு அனுமதி மறுக் கப்படுவது தவறு என அதில் கூறியுள்ளதாக, அங்கிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில்
செய்தி வெளியாகியுள்ளது.

No comments: