Saturday, May 3, 2008

ஏன் பெண்ணே இந்தக் கோலம்?

அல்குர் ஆனையும், அல்ஹதீஸையும்
மனத்தில் ஓத வேண்டிய நீ
ஆயிரம் சினிமாப்பாட்டை
எப்பிழையும் இல்லாமல் ஒப்பிக்கிறாய்!

"மஃரிப்' தொழுகையிலிருந்து
"இஷா' வரை
இறை வேதம் ஓத வேண்டிய நீ சின்னத்
திரையில் மெகா
சீரீயலை, சீரியஸாய்ப் பார்க்கிறாய்!

நபிமாரின்
வரலாற்றைப் படிக்க வேண்டிய நீ
நடிகர்களின் வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கின்றாய்!
சஹாபாப் பெண்மணிகளின்

சரித்திரத்தைப் படித்து
உன் வாழ்க்கையில்
நடைமுறைப் படுத்த வேண்டிய நீ
சமகால நடிகைகளின்
சரித்திரத்தைப் படித்து
உன் வாழ்க்கையில்
நடைமுறைப் படுத்துகின்றாய்!

பாணகமுவரபாய்தீன்

No comments: