வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இளம் வர்த்தகர் ஒருவர் தனது பிள்ளையை பாடசாலைக்கு சேர்த்து விட்டு திரும்பும் வழியில் காணாமல் போயிருப்பதாக பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் உறவினர்கள் புகார் செய்துள்ளனர்.
வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் வசித்து வந்த 47 வயதுடைய பரமலிங்கம் சந்திரகாந்தன் என்ற குடும்பஸ்தரே காணாமல் போயிருப்பதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார் செய்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் தனது பிள்ளைகளை அதே வீதியிலுள்ள பாலர் பாடசாலைக்கு அழைத்துச் சென்ற பின்னர் அவர் இதுவரை வீடுதிரும்பவில்லை. இவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
செட்டியார் தெருவின் பிரபல நகை வியாபாரியான இவர் காணாமல் போயிருப்பது புறக்கோட்டைப் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, May 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment