ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியா கச் சிறையில்
இருக்கும் நளினி யைத் தாம் சந்தித்தது உண்மை என்று ராஜீவ் காந்தியின்
மகள் பிரியங்கா, ஒப்புக்கொண்ட நிலையிலும், அப்படியொரு சந்திப்பு
நடக்கவில்லை என்று வேலூர் மகளிர் சிறையின் கண் காணிப்பாளர்
ராஜசெüந்தரி கூறியுள்ளார்.
பிப்ரவரி 19-ம் தேதி தமிழகத்துக்கு ரகசியப் பயணம் மேற் கொண்ட
பிரியங்கா, வேலூரில் தங்கக் கோவிலுக்குச் சென்றதாகவும், மகளிர் சிறையில்
நளினி யைச் சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாயின.நளினியைத் தாம் சந்தித்தது உண்மை என்று ஏப்ரல் 15-ம் தேதி பிரியங்காஒப்புக்கொண்டார்.அதைத் தொடர்ந்து நளினி யின் வழக்கறிஞர்களும் இச் சந்திப்பை உறுதிசெய்தனர். நளினி யும், அவருடைய கணவர் முருக னும் இச் சந்திப்புக்காகநன்றி தெரிவித்து பிரியங்காவுக்கும், சோனியாவுக்கும் கடிதங்கள் எழு
தியுள்ளனர். அக் கடிதங்கள் அவர்களுடைய வழக்கறிஞர்களிடம் இருக்கின்றன.
நளினி -பிரியங்கா சந்திப்பு குறித்து நளினியின் சகோதரர் பாக்கியநாதனும்
உறுதி செய் துள்ளார். பிரியங்காவின் சகோத ரர் ராகுல்காந்தியும் உறுதி செய்
துள்ளார். நளினியைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் பிரி யங்காவுக்கு
கொஞ்ச நாட்களாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறையில் இருக்கும் ஒருவரை, ரகசியமாக பிரியங்கா சந்திக்க அனுமதி தந்ததில் விதி மீறல் இருப்பதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது.
விதிகளுக்குஉட்பட்டு தான் இச் சந்திப்பு நடந்ததாகச் சிறை அதிகாரிகள் தந்த விளக்க மும்
பத்திரிகைகளில் வெளியா யின.ஆனால், திடீர் திருப்பமாக நளினி -பிரியங்கா சந்திப்பு நடக்க வில்லை என்றுமகளிர் சிறையின் கண்காணிப்பாளர் ராஜசெüந் தரி இப்போது கூறியுள்ளார்.தகவல் அறியும் உரிமைச் சட் டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மனுவுக்கு அளித்த
பதிலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதற்காக அவர் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி மாநில தகவல்ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நளினியின் வழக்கறிஞர் துரை சாமியின் மகன் வழக்கறிஞர் டி.ராஜ்குமார் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல்செய்துள்ள மனு விவரம்: பிரியங்கா, நளினி சந்திப்பு மார்ச் 19-ல்நடைபெற்றதாக தகவல் வெளியானது. இது உண்மையா? எனக்கேட்டும், எந்தவிதி களின்படி இந்தச் சந்திப்பு நடந்தது?, யார் உடன் இருந்தார்கள்?, எவ்வளவு
நேரம் சந்திப்பு நடந்தது?, நளினியும், பிரியங்காவும் என்ன பேசிக்கொண்டார்கள்? என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் சிறை நிர்வாகத்திற்கு ஏப்ரல் 8-ம் தேதி மனுசெய்யப்பட்டது.இந்த மனுவை ஏப்ரல் 16-ம் தேதி சிறை அதிகாரி பெற்றுள்ளார்.
இதுகுறித்து வேலூர் பெண்கள் தனிச் சிறை அதிகாரியும், பொது தகவல்அலுவலருமான ராஜசௌந்தரி அனுப்பி உள்ள பதிலில், ஆயுள் தண்டனைசிறை வாசி நளினியை மார்ச் 13 மற்றும் மார்ச் 19 ஆகிய நாட்களில் எவரும் நேர்காணல் பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.
நளினியை, வேலூர் பெண்கள் சிறையில் மார்ச் 19-ம் தேதி சந்தித்ததாக
பிரியங்கா உறுதி செய்துள்ளார். ஆனால் சிறை அதிகாரி தவறான தகவலை
தெரிவித்துள்ளார்.இதற்காக வேலூர் பெண்கள் சிறை அதிகாரி ராஜசௌந்தரி மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்.தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 18(2) கீழ் நளினி, பிரியங்கா சந்திப்புகுறித்து, கடிதம் மூலம் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக
விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என மனு வில் வழக்கறிஞர் ராஜ்குமார் கூறியுள்ளார்.
Friday, May 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment