Wednesday, May 14, 2008

புதுமையான பழிவாங்கல்

தென் ஆப்பிரிக்காவில் விவாகரத்து பெற்ற மனைவி ஒருவர் தன்னுடைய மாஜி கணவனின் மானத்தை வாங்கி கொண்டிருக்கிறாராம்.
.
அந்த அம்மணி தன்னுடைய காரின் மீது, கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணங்களை எழுதிஒட்டியபடி வலம் வந்து கொண்டிருக்கிறாராம். தன்னுடைய கணவர் எப்படியெல்லாம் வஞ்சித்தார், எந்த அளவுக்கு இழிவாக நடந்து கொண்டார் என்றெல்லாம் ஒரு கவிதை போல எழுதி ஒட்டி வைத்திருக்கிறாராம்.

இந்த வாசகங்களை பலரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தினந்தோறும் அவர் வெளியே சென்று வருகிறாராம்.

அவரது கணவரோ 36 வருட மணவாழ்க்கைக்கு பிறகு மனைவி தன்னை இப்படி பழிவாங்கிவிட்டாரே என்று புலம்பி கொண்டிருக்கிறாராம்.

No comments: