Monday, May 12, 2008

பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் தெரிவில் மூன்று முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

சுதந்திர முன்னணி சார்பில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் சார்பில் பிள்ளையானும் ஹிஸ்புல்லாவும் முதலமைச்சர் வேட்பாளர்களாக பிரேரிக்கப்பட்டிருந்தனர். வாக்களிப்பு முடிவுகளின் அடிப்படையில் பிள்ளையான் 41 ஆயிரத்து 936 வாக்குகளையும் ஹிஸ்புல்லா 35 ஆயிரத்து 949 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.சுதந்திர முன்னணி தேர்தல் பிரசார காலத்தில் தமது கட்சிசார்பில் யார் கூடிய வாக்குகளைப் பெறுகிறாரோ (பிள்ளையான் அல்லது ஹிஸ்புல்லா) அவர்களே முதலமைச்சர் எனப் பிரசாரம் செய்தது.

அத்துடன் சுதந்திர முன்னணி சார்பில் எந்த சமூகப் பிரதிநிதிகளுக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கிறதோ அவர்களின் சமூகத்தவரே முதலமைச்சரெனவும் இருவகையான பிரசாரங்களையும் முன்னெடுத்திருந்தது.

முஸ்லிம்கள் அதிக பிரதிநிதிகளையும் பிள்ளையான் அதிக விருப்பு வாக்குகளையும் பெற்றிருக்கும் நிலையில், யாருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதென்ற புதுச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கி சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கெதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த அரசாங்கம் முயலுமெனவும் தீவிர சிங்கள கடும் போக்குக்கட்சியும் ஆளும் கூட்டணியின் பங்காளியுமான ஜாதிக ஹெல உறுமய, பிள்ளையானே முதலமைச்சராக தெரிவு செய்யப்பட வேண்டுமென பிரசாரம் செய்தநிலையில், அவர் முதலமைச்சராகுவதையே அக்கட்சி விரும்புவதாகவே தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஆளும் தரப்பு வெற்றிக்கு ஹிஸ்புல்லாவை விட பிள்ளையானே பெரும் பங்காற்றியுள்ளதாகவும் சிலர் சுட்டிக்காட்டினர்.

ஆனாலும் அரசின் 3 பங்காளி முஸ்லிம் கட்சிகள் ஹிஸ்புல்லா முதலமைச்சராக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

முதலமைச்சர் பதவிப் பகிர்வு போலவே மாகாண அமைச்சுப் பதவிகளிலும் சிக்கல் தீவிரமடையுமென அறியவரும் நிலையில் சிலர் பிள்ளையானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தலா இரண்டரை வருட காலம் முதலமைச்சர் பதவியை வழங்கலாமெனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பசில் ராஜபக்ஷ எம்.பி.யுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது;

"கிழக்கின் முதலமைச்சர் யார் என்பதை நாம் இதுவரை தீர்மானிக்கவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் முன்னணி சார்பில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் ஆலோசனையுடன், இவர்களையும் கவனத்திலெடுத்து முதலமைச்சரை தீர்மானிப்போம்" என்றார்.

அத்துடன் ரணில், பிரபா, ஹக்கீம் கூட்டணி இத்தேர்தலில் மண் கௌவியுள்ளதாகவும் அவர்கள் கிழக்கு மக்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கிலிருந்து புலிகளை விரட்டி அங்கு ஜனநாயகத் தேர்தலை நடத்த காரணமாகமைந்த முப்படையினருக்கு அரசாங்கம் வீர வணக்கம் செலுத்துவதாகவும் அவர் மேலும்



பிள்ளையானுக்கு அதிக விருப்பு வாக்கு ஹிஸ்புல்லாஹ் மூன்றாவது இடத்தில்



கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான பிள்ளையானே (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) அதி கூடிய விருப்பு வாக்கைப் பெற்றுள்ளார்.
மற்றொரு முதலமைச்சர் வேட்பாளரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 3 ஆவது அதிகூடிய விருப்பு வாக்கையே பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 11 உறுப்பினர்களது விபரங்களும் அவர்களுக்கு கிடைத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையும் இங்கு தரப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

1. பிள்ளையான் (இல.13). 41,931 2. ஜவாஹிர் சாலி முஹமட் (இல.1)- 36,419 3. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (இல.2) - 35,949 4. எம்.எஸ்.சுபைர் (இல.11)- 34,318 5. ஜெயம் (இல.08) - 23,456 6.பிரதீப் மாஸ்ரர் (இல.04)- 22,176

ஐ.தே.க.

1.பஷீர் சேகுதாவுத் (இல.01) - 23,342 2.அமீர் தீன் (இல.02) - 12,157 3. சசிதரன் (இல.03). 11,021 4. மாசிலாமணி (இல.10)- 8,042 தமிழ் தேசிய ஜனநாயக முன்னணி 1.துரைரெட்ணம் (இல.01)- 1,752.

No comments: