Tuesday, June 3, 2008

50 தையல் ஊசிகளை விழுங்கி குடும்பப் பெண் தற்கொலை முயற்சி

கணவனுடனும் தந்தையுடனும் பிரச்சினைப்பட்டு ஆத்திரமடைந்த பெண்ணொருவர் 50 தையல் ஊசிகளை ஒரேயடியாக விழுங்கித் தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது, அவரை ஆபத்தான நிலையில் காலி கராப்பிட்டிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக எடுத்துச் சென்று உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.
மேற்படி சம்பவம் பத்தேகம ஹல்பாதொட்ட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட பெண்ணின் தாயார் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு சென்றிருக்கிறார் தந்தையின் பராமரிப்பிலிருந்த இப் பெண்ணை தந்தை தன்னுடன் வேலை செய்வதற்காக தினசரி அழைத்துச் சென்றுள்ளார்.

ஆற்றங்கரையிலிருந்து மண்ணை லொறியில் ஏற்றுவதே இவர்களது வேலையாகும்.

இவர்களுடன் சேர்ந்து இன்னொரு இளைஞனும் வேலை செய்துள்ளார். அவருக்கு தனது மகளை தந்தை திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இப்பெண் திடீரென 50 தையல் ஊசிகளை விழுங்கியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதி ஆபத்தான நிலையிலுள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: