இலங்கை இனப்பிரச்சனை விவகாரத்தை ஒட்டி லண்டனில் கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு ஒருவிடயத்தைச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
""உலகில் பயங்கரவாதம் என்பது ஒன்றுதான். அதில் "நல்ல பயங்கரவாதி', "கெட்ட பயங்கரவாதி' என்று இரு வகை இல்லை'' என பிரிட்டனுக்கும் மேற்குலக நாடு களுக்கும் "பயங்கரவாதம்' குறித்துப் பாடம் புகட்ட முயல் கிறார் அவர். அதுவும் அக்கரைச் சீமையில் போயிருந்து கொண்டு அவர்களுக்குப் "பயங்கரவாதம்' குறித்து அரிச்சுவடி படிப்பிக்கின்றார் அவர்.
"நல்ல பயங்கரவாதம்', "கெட்ட பயங்கரவாதம்' குறித்தெல்லாம் பேசமுன்னர் "பயங்கரவாதம்' என்றால் என்ன என்பதற்கு சரியான அர்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் வெள்ளைக்காரர்களுக்கு அவர், அது குறித்து பாடம் புகட்ட முயல்கிறாரா என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமானது.
தவிரவும் "நல்ல பயங்கரவாதம்', "கெட்ட பயங்கர வாதம்' என இரண்டு இருக்கின்றதோ, இல்லையோ ஆனால் "நல்லாட்சி', "கொடூர ஆட்சி' என இரண்டு உலகில் காலாதி காலம் இருந்து வந்திருப்பதையும், அதிலும் இந்த கொடூர ஆட்சியின் ஓர் அம்சமாக "அரச பயங்கரவாதம்' என்ற மிகக் கொடூரப் போக்கும் அராஜகச் செயற்பாடும் விளங்கி வருவது நினைவூட்டத் தக்கதாகும்.
தமது தாயக உரிமைக்காக நியாயமான சுதந்திரங் களுக்காக கௌரவ வாழ்வுக் காக இனத்தின் இருப் புக்காக தமது பாரம்பரிய வதிவிடத்தைப் பறிபோகா மல் தக்க வைப்பதற்காக ஆயுதமேந்திப் போராடுவது, அதுவும் சுமார் மூன்று தசாப்தகாலம் காந்திய முறை யிலும், அகிம்சை நெறியிலும், சாத்வீக வழியிலும் போராடித் தோற்றபின்னர் வேறுவழியின்றி இராணுவ நெறிமுறையைத் தேர்ந்தெடுத்துப் போராடுவது வெறு மனே "பயங்கரவாதம்' என்று வகைப்படுத்தக் கூடியது என்றால்
1770களின் மத்தியில் வெடித்த அமெரிக்க சுதந் திரப் போராட்டத்திலிருந்து அண்மையில் தனிநாட்டுப் பிரகடனத் துக்கு வழிவகுத்த கொசோவோ விவகாரம் வரை அனைத்து விடுதலைப் போராட்டங்களுமே வெறும் பயங்கரவாதமாக அர்த்தப்படுத்தக் கூடியவை யாகிவிடும்.
தேசிய ஒடுக்கு முறையிலிருந்து விடுபட்டு தனி அரசை அமைத்துக் கொண்டு வாழும் உரிமைக்கான போராட்டத்தை பயங்கரவாதம் கருத்துருவத்துக்குள் சிறைப்படுத்தி விட முடியாது.
ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்துக்கு எதிராக ஆயுதம் தூக்குவதும், வன் முறையில் ஈடுபடுவதும், கலகம் செய்வதும் எடுத்த எடுப்பிலேயே "பயங்கர வாதம்' என்று வர்ணிக்கப்படக் கூடியவை அல்ல.
அத்தகைய போராட்டங்களின் பின் புலத்தில் புதைந்து கிடக்கும் நியாய, அநியாயங்களின் அடிப்படை யிலேயே அந்தப் போராட்டத்தை எந்தவகைக்குள் அடக்குவது என்பதை உலகம் தீர்மானிக்கிறது.
இந்த அடிப்படையை மறந்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்குல கினருக்குப் புத்தி புகட்ட முயன்றிருக் கின்றார்.
அதே சமயம் நாடு, இறைமை, ஆட்சி அதிகாரம் என்ற கவசங்களை வைத்துக் கொண்டு முன்னெடுக் கப்படும் சர்வதி காரத்தையும், ஜனநாயகத்தின் பெய ரால் மேற்கொள்ளப்படும் எதேச்சதிகாரத் தையும் உல கம் வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டு வாளா விருக்கும் எனவும் எதிர்பார்க்க முடியாது.
இலங்கையில்ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் மனித உரிமை மீறல் துஷ் பிரயோகங்கள் மிக மோசமாக எல்லை மீறி இடம்பெற்று வருகின்றன. இதனை சர்வதேச அமைப்புகள் வரை பல தரப்பினரும் அடையாளம் கண்டு அம்பலப்டுத்தி வரு கின்றனர்.
"சட்டத்தின் ஆட்சி'' என்ற வெளித் தோற்றத்தில் "அரசபயங்கரவாதம்' இங்கு அப்பட்டமாக அரங்கேறு கின்றமையை உலகம் அறிந்து கொண்டிருப்பதால் அது குறித்துக் கண்டனக் குரல்கள் தீவிரமாக எழுந்துள்ளன.
அதை மூடி மறைப்பதற்காக சர்வதேச ரீதியில் தமது அரசுக்கு எதிராகப் புலிகள் ஆதரவு சக்திகள் நடத்தும் பிரசாரப் போராட்டத்தில் தாங்கள் தோற்றுவிட்டனர் என்று கதை விடவும் முயற்சிக்கிறார் அவர்.
"கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் கொண்டு' நோக்குவது போல இலங்கை விவகாரத்தையும் இங்கு நடப்பவற்றையும் சர்வதேசம் நுணுக்கமாக அவதா னித்துக் கொண்டிருக்கின்றது.
எது பயங்கரவாதம், எது நல்லாட்சி, எது கொடூர ஆட்சி, சட்டத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாதம் எது என்பவை எல்லாம் சரியான அளவு கோலால் இன்று அளவெடுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன.
யாருக்கு இரத்தவெறி, யாருக்கு அதிகார மமதை, எவரது நடவடிக்கை கொடூரமானது என்ற கேள்விகளுக் கெல்லாம் தீர்ப்பு ஒரு நாள் வந்தேயாகும்.
அப்போது கூட உண்மை கசக்கும். அதிகப்படி என்ற ஜனநாயகக் கோட்பாட்டுக்கு அடங்காமல், நீதியின்படி என்ற அடிப்படையில் தீர்ப்பு எழுதப்படும் போது நியா யம் வெல்லும்; விதண்டாவாதங்கள் தோற்றுப் போகும்.
Sunday, June 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment