Tuesday, June 3, 2008

பிரபாகரனுடன்,பொட்டம்மான்,தமிழேந்தி

பிரபாகரனுடன்,பொட்டம்மான்,தமிழேந்தி மூவரும் பிரபாகரனுடைய பங்கருக்
கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மேலால் வாத்துக்கள்
கூட்டம் கூட்டமாக பறந்து செல்கின்றன. இந்தப் பறவைகளைச் சுடும்படி
பொட்டம்மானுக்கு பிரபாகரன் உத்தரவிடுகிறார்;.

உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தனது ஏகே 47 துப்பாக்
கியை எடுத்து வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகளை நோக்
கி சுடுகின்றார். துப்பாக்கிக் குண்டுகள் பறவைகளைத் தாக்கவில்லை.

இப்பொழுது நீ சுடு என்று தமிழேந்திக்கு உத்தரவிடுகிறார் பிரபாகரன்.
நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி பறவைக்கூட்டத்தை நோக்கிச் சுடுகிறார்.
பொட்டம்மான் போலவே தமிழேந்தியின் துப்பாக்கிக் குண்டுகள்
பறவைகள் மேல் படவில்லை.

ஆத்திரமடைந்த பிரபாகரன் இங்கு எல்லாவற்றையும் நான்தான் செய்
யவேண்டும் என்று கூறிக்கொண்டு தனது துப்பாக்கியை எடுத்து பறந்து
கொண்டிருக்கும் பறவைகளை நோக்கி ஐந்து வேட்டுக்களைத் தீர்க்
கிறார். இருந்தும் ஒரு பறவைகூட குண்டு பட்டு விழவில்லை.

அங்கு நிசப்தம் உண்டாயிற்று. திடீரென்று தமிழேந்தி எழுந்து நின்று
அட கடவுளே என்ன அதிசயம் அங்கே பாருங்கள் இறந்துபோன
பறவைகள் வானத்தில் பறந்து கொண்டிருக்கின்றன என்றார்.

இணையத்திலிருந்து பெறப்பட்டது

No comments: