Tuesday, June 3, 2008

பிரித்தானிய தமிழன்

கொழும்பிலுள்ள வீதியொன்றில் ஒருவர் நடந்த சென்று கொண்டிருக்கும்
போது ஒரு வெறிநாயொன்று ஒரு சிறுமியொருவரைத் தாக்கிக்கொண்டிருப்
பதைக் கண்டார்.

உடனே அவர் அந்த வெறிநாயின் தலையில் தடியால் தாக்கி
சிறுமியைக் காப்பாற்றி விட்டார். உடனே அந்தச் சிறுமியின் தாயார்
வேகமாக அவரிடம் சென்று தன் மகளை நாயிடமிருந்து காப்பாற்றியதற்
காக அவருக்கு நன்றி சொல்லி தன்னுடன் கூடவே வந்த ஜேவிபி
பாராளுமன்ற உறுப்பினரையும் அந்தச் சிறுமியின் தாயார் அறிமுகப்படுத்
தி வைத்தார்.

உடனே அந்த ஜேவிபி எம்பி அந்த நபரைப் புகழ்ந்து நன்றி சொல்லி நீர்
ஒரு ஹீரோ நாளை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக கொழும்பு
வாசி சிறுமியின் உயிரைக் காப்பாற்றினார் என் வரும் என்றார்.

ஆனால் சிறுமியின் உயிரைக் காத்த அந்த நபரோ நான் கொழும்பு
வாசியல்ல என்றார்.

ஓ அப்படியானால் துணிவுள்ள இலங்கைப் பிரஜை சிறுமியின் உயிரைக்
காப்பாத்தினார் என்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி வரும் என்று
ஜேவிபி எம்பி மீண்டும் கூறினார்.

மறுபடியும் அந்த நபர் நான் இலங்கைப் பிரஜையுமல்ல என்று கூறினார்.

அப்போ நீர் யார் என்று ஜேவிபி எம்பி கேட்டார்.

நான் ஒரு பிரித்தானியத் தமிழன் என்று அந்த நபர் பதிலளித்தார்.

மறுநாள் பத்திரிகைகளில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ்ப் பயங்
கரவாதி ஒருவர் இலங்கை நாயொன்றைக் கொன்றுவிட்டார்
என்று
தலைப்புச் செய்தி இருந்தது.

இணையத்திலிருந்து பெறப்பட்டது

No comments: