Thursday, June 19, 2008

இத்தாலியில் புலிகளின் சேவைக்கு பங்கம் துரத்த ஆரம்பித்துவிட்டுது

இத்தாலிக்கான இலங்கை தூதுவர் ஹேமந்த வர்ணகுலசூரிய இத்தாலியின் உள் விவகார அமைச்சர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து புலிகளின் ஒலி-ஒளிபரப்புச் சேவைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன் பாரிஸில் மிலானை தமது முக்கிய தளமாகக் கொண்டு புலிகள் ஒலி-ஒளிபரப்புச் சேவையை நடத்திவருவதையும் இலங்கைத் தூதுவர் இத்தாலி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொணடுவந்துள்ளார் எனவும் ஜனாதிபதி செயலகம் மேலும் அறிவித்துள்ளது. இத்தாலியில் புலிகளின் ஒலி-ஒளிபரப்புச் சேவைக்கு தடை விதிக்க தீர்மானம்! இத்தாலியில் இயங்கும் புலிகளினது ஒலி-ஒளிபரப்புச் சேவைக்கு தடை விதிக்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்து உள்ளதாகவும் இத்தாலிய மற்றும் இலங்கை அரசாங்க உயர் அதிகாரிகள் நேற்று ரோமில் சந்தி;த்துப் பேசியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இத்தீர்மனம் பற்றி ஐரோப்பிய யூனியனின் ஏனைய உறுப்பினர்களுக்கும் தாம் அறிவித்து இந்த நடவடிக்கைக்கு அவர்களின் ஒத்துழைப்பை பெறப்போவதாகவும் இத்தாலிய அதிகாhரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தாலியில் புலிகள் பிழையமுறையை கையாண்டுவரும் நடவடிக்கைளில் அதிகயளவு பணம் சேகரித்தும், அவ் நடவடிக்கைகளை பிரச்சாரப் படுத்தியும் வந்த புலிகளின் ஆதரவாளர்கள் 33பேர் நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை அரசின் மனித உரிமைகளுக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப் படுத்திவரும் சர்வதேச சமூகம் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான தமது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.

No comments: