Thursday, June 5, 2008

புலிகளின் படையணிகளுக்கு திறமையான தலைவர்கள் இல்லாத நிலை உருவாகிறது

அண்மையில் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட தலைவர்களில் முக்கியமானவராகிய பால்ராஜ் உயிரிழந்தார். இவர் இருதயநோய் காரணமாக உயிரிழந்ததாக புலிகள் இயக்கம் அறிவித்திருந்தது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் பால்ராஜின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த இரகசிய நிலையத்திற்கு ஏனைய சிரேஷ்ட தலைவர்களுடன் வந்து பால்ராஜுக்கு இறுதி மரியாதையைச் செலுத்தியிருந்தார். இதிலிருந்து இயக்கத்தின் செயற்பாடுகளில் பால்ராஜ் வகித்துவந்த முக்கியத்துவத்தை உணரலாம். இவ்வாறு கடந்தகாலங்களில் அதன் முக்கிய தலைவர்களைத் தொடர்ந்து இழந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த 25 ஆம் திகதி புதன்கிழமை மற்றுமொரு முக்கிய தலைமைத்துவத்தை இழந்தது. அன்று புலிகள் இயக்கத்தின் பெண் போராளிகள் படையணியில் முக்கிய அணியாகிய ""சோதியா' பெண்புலிகள் படையணியின் பிரதித் தலைவி லெப்டினன் கேர்ணல் செல்வி உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்குகளில் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் கலந்துகொண்டு செல்வியின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். எவ்வாறாயினும் புலிகள் இயக்கத்தின் ஊடகங்கள் சோதியா படையணியின் பிரதித் தலைவி உயிரிழந்ததற்கான காரணத்தை உத்தியோகபூர்வமாக கூறாமல் அவர் உயிரிழந்தார் என்ற தகவலைத் தெரிவித்திருந்தது. ஆயினும், இராணுவ புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் மே 25 ஆம் திகதி மன்னார் பாலம்பிட்டி பிரதேசத்தில் அரச படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மேற்படி புலிகள் இயக்கத்தின் சோதியா பெண்புலிகள் படையணியின் தலைவி செல்வி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

புலிகள் இயக்கம் தரப்பில் செல்வியைப் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப இவர் 1995 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர் எனவும் அரச படையினருக்கு எதிரான முக்கிய தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர் எனவும் மேலும் புதிதாக இயக்கத்தில் சேர்க்கப்படும் பெண்கள் படையணியினருக்கு யுத்தப் பயிற்சிகளை வழங்கிய முக்கிய ஆயுதப்பயிற்சியாளராகச் செயற்பட்டுவந்தார் எனவும் கூறியுள்ளது. மேலும், இவர் புலிகளின் குரல் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றி வந்துள்ளார். அத்துடன், செல்வியின் மரணம் புலிகள் இயக்கத்துக்கு படையணி நடவடிக்கைகள் மற்றும் யுத்தச் செயற்பாடுகளைப் பொறுத்தவரை பெரும் இழப்பு எனப் புலிகள் இயக்கமே துக்கம் தெரிவித்துள்ளது.

சோதியா படையணியின் விசேட தலைவியாகிய கேர்ணல் துர்க்கா மற்றும் ஏனைய சிரேஷ்ட பெண்கள் படையணித் தலைவிகளின் தலைமையில் மேற்படி செல்வியின் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் பங்கெடுத்ததிலிருந்து புலிகள் இயக்கத்தில் செல்வியின் முக்கியத்துவத்தை உணரக்கூடியதாக உள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கத்தின் யுத்தத் தாக்குதல்களில் செல்வி முக்கிய தலைவியாக செயற்பட்டதால் மட்டும் பிரபாகரனின் மனைவி அங்கு பிரசன்னமாயிருக்கவில்லையெனவும் அவ்வாறு பெண் போராளிகள் தலைவிகளுடன் அவர் தோன்றியதன் மூலம் புலிகள் இயக்கத்தில் சேருவதற்கான உந்தலை தமிழ் யுவதிகளிடையே ஏற்படுத்தும் நோக்கத்துடனும் அவர் செல்வியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டார் எனவும் இராணுவப் புலனாய்வுத்தரப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், பிரபாகரனின் மனைவி வன்னியை விட்டு வெளியேறிவிட்டார் என்று அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறு அவர் வெளியேறவில்லை. இன்னும் வன்னியில் தான் இருக்கிறார் என்று வன்னியிலுள்ள பெண் புலிகளுக்கும் பொதுமக்களுக்கும் காட்டுவதற்காகவே பிரபாகரன் மனைவி மதிவதனி உயிரிழந்த செல்விக்கு இறுதி மரியாதை செய்யும் சாக்கில் அங்கு ஏனைய புலிகள் இயக்க சிரேஷ்ட தலைவிகளுடன் தோன்றினார் எனவும் மேலும் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது உயிருடனுள்ள புலிகள் இயக்கத் தலைவிகளைக் காட்டிலும் களமுனைகளில் திறமை வாய்ந்த தலைவியாகக் கருதப்படும் கேணல் செல்வி ""விழி நிமித்திய வீரம்' என்ற பெயரில் சோதியா படையணியால் வெளியிடப்பட்ட இறுவெட்டில் நான்கு பாடல்களையும் எழுதியுள்ளார். இவ்வாறு புலிகள் இயக்கத்தில் கடந்தகாலங்களில் கேர்ணல், லெப்டினன் கேர்ணல், என்னும் உயர் பதவி வகிக்கும் பெண் புலிகள் படையணிகளின் தலைவிகள் பலர் உயிரிழந்துவிட்டனர். அவ்வாறே அண்மைக்காலங்களில் புலிகள் இயக்கத்தின் படையணித் தலைவர்கள் பலரும் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் மிகவும் குறுகிய காலத்தில் புலிகள் இயக்கத்தின் படையணிகளுக்கு ஏற்ற தலைமைத்துவம் இல்லாத நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

லங்காதீப விமர்சனம்:01.06.2008

No comments: