முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மட்டுமே தற்போது இயங்கிவரும் புலிகள் இயக்கத்தினரைத் தோற்கடிக்கும் தீவிர இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரச படையினர், அண்மையில் அப்பிரதேசங்களுக்குள் பிரவேசித்து வெற்றிகரமாக முன்னேறி வருகின்றனர். குறிப்பாக, புலிகள் இயக்கத்தினரின் பல முக்கிய முகாம்களை இதுவரை கைப்பற்றியுள்ள படையினர், தற்போது வன்னியில் புலிகளின் பலக்கோட்டைகள் எனக் கருதப்படும் மல்லாவி, துணுக்காய், நாச்சிக்குடா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பிரதான மூன்று முகாம்களைச் சுற்றிவளைத்துள்ளனர். இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி அரச படையினர் மேற்படி பிரதான முகாம்களை உறுதியான முறையில் சுற்றிவளைத்திருப்பதாகவும் தொடர்ந்து தீவிர தாக்குதல்களைத் தொடுக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் வடக்குப் பாதுகாப்புத் துறைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மூன்று முகாம்களே வன்னியில் புலிகள் இயக்கத்தினரின் பிரதான முகாம்களாக இருப்பதால் இவை அரச படையினரால் அழிக்கப்பட்டுவிட்டால் வன்னியில் புலிகளின் பலம் அழிக்கப்பட்டதற்குச் சமமாகும் என பாதுகாப்புத் துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவற்றைவிட வன்னியில் வேறு இவற்றிலும் முக்கிய முகாம்கள் கிடையாது எனவும் புலிகளின் பிரதான படையணிகளின் பாதுகாப்பிலே மேற்படி மூன்று முகாம்களும் இருப்பதால் வன்னியைக் கைப்பற்றுவதற்கான மிக முக்கியமானதும் தீவிரமானதுமான மோதலாக இது இருக்கும் எனவும்,தற்போது அரச படையினர் அந்த பிரதான முகாம்களையும் சுற்றிவளைத்துத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களுக்குள் அந்தப் பிரதான முகாம்கள் மூன்றும் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பு முற்று முழுதாகப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் மற்றும் அவருடைய உயர்மட்டத் தலைவர்களும் மேற்படி மல்லாவி, துணுக்காய், நாச்சிக்குடா முகாம்களிலேயே பதுங்கியிருப்பதாக, ஏற்கெனவே பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த முகாம்களை அரச படையினர் கைப்பற்றுவது வன்னியைக் கைப்பற்றும் முக்கிய இராணுவ நடவடிக்கையாக இருக்கும் எனவும் இந்த முகாம்கள் அழிக்கப்படுவதுடன், புலிகள் இயக்கத்தின் பலம் வன்னியில் அழிக்கப்பட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி வன்னி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் படையணித்தலைவர்கள் தெரிவித்திருப்பதற்கேற்ப மேற்படி முகாம்கள் ஒரு சில நாட்களுக்குள் அழிக்கப்பட்டு அந்தப் பிரதேசங்கள் படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என உறுதியாகத் கூறியுள்ளனர்.
மேலும், மேற்படி புலிகளின் பிரதான மூன்று முகாம்கள் மீதான தாக்குதல்கள் இராணுவத் தளபதியின் விசேட அறிவுறுத்தல்களின் கீழ் வன்னிப்பிரதேச கட்டளைத் தளபதியின் நேரடியான கண்காணிப்பில் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வருவதாக மேலும் தெரியவந்துள்ளது.
லங்காதீப விமர்சனம்: 17.08.2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment