கிளிநொச்சி வரை படையினர் முன்னேறிவிட்ட நிலையில், அவர்களின் கால்களை வாரிவிடும் செயல்களில் எவரும் ஈடுபடக்கூடாதெனத் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பயங்கரவாதத்தை ஒழிப்பதன் மூலம் நாட்டை பாதுகாக்க முடியுமென்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
அரசு, புலிகளின் ஒவ்வொரு முகாம்களையும், பதுங்கு குழிகளையும் தகர்த்துக்கொண்டு முன்னேறும்போதும் எதிர்க் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளையும் கிளப்புகின்றனர். மனித உரிமை மீறல்களை முன்வைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக செயற்படுகின்றனர். இந்த செயற்பாடுகள் விடுதலைப் புலிகளுக்கே உந்துசக்தியைக் கொடுக்கும்.
உலகில் பல நாடுகளில் பல நிறுவனங்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்ற பலரையும் இணைத்துக் கொண்டு செயற்படுகின்றனர். இந்த அரச சார்பற்ற நிறுவனங்களே மனித உரிமை மீறல்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுகின்றன. இவர்களே இலங்கைக்கு எதிராக சதி செய்கின்றனர். இவர்கள் வெளியிடும் அறிக்கைகளையே ஐ.தே.க.வினர் இங்கே வாசிக்கின்றனர்.
தமது தலைவர்கள் புலிகளால் கொல்லப்படும்போது மௌனமாகவிருந்த சம்பந்தன் போன்றோர் இப்போது மனித உரிமைகள் தொடர்பில் உரத்துக் குரல் கொடுக்கின்ற?ர்.
ஜனநாயகத்திற்கு உரமூட்டுவதன் மூலம் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியுமென்பதற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் அதன் முதலமைச்சரும் சிறந்த உதாரணம். கிழக்கில் புதைக்கப்பட்டிருந்த ஜனநாயகத்தை குழியிலிருந்து தோண்டியெடுத்து உயிர் கொடுத்துள்ளோம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment