குருநாகல் குளத்து சுற்று வட்டத்தில் அமைந்துள்ள அனுமதியற்ற தங்குமிட விடுதிகளுக்குச் செல்பவர்களில் அதிகமானவர்களாக 14,15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களாகவே இருப்பதாக வடமேல் மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜயந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இவ்வாறு வடமேல் மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட வடமேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த ஜயசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
"" குருநாகல் குளத்து சுற்று வட்டப் பிரதேசத்திற்கு வரும் சிறுவர்கள் தவறான வழி நடத்தைகளில் ஈடுபடுவதாக அதிகமானவர்கள் என்னிடம் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளை விசாரணை செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவ்வாறானவை எதுவும் நடக்கவில்லை என்று என்னிடம் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு பொலிஸ் அதிகாரிகளின் உதவியும் முழுமையாகக் கிடைக்கின்றது.
இந்தப் பிரதேசத்திற்கு இளம் இளைஞர்கள் வருவதற்கு கூடுதலாக அனுமதியற்ற தங்குமிடம் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் இருப்பதினாலாகும்.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இந்த அனுமதியற்ற விடுதிகளுக்கு வருகின்றவர்கள் போலியான அடையாள அட்டை செய்து கொண்டு அவர்களுடைய வயதைக் கூட்டிக் காட்டுகின்றனர். 14,15 வயதுடைய இந்தச் சிறுவர்கள் செல்வதெல்லாம் அனுமதியற்ற இடங்கள் எனத் தற்போது தகவல் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கையின் படி அட்டோபர் 18 ஆம் திகதியிலிருந்து அனுமதிப் பத்திரமற்ற அனைத்து இடங்களும் அகற்றப்படும் என அவர்மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment