Wednesday, August 6, 2008

முக்கிய கரும்புலி உறுப்பினரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவி நாடப்படுகின்றது.


தம்புல்லவில் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் சானக்கியன் என அழைக்கப்படும் மொஹமட் அம்ஸார் ரம்சின் (24) என்ற கரும்புலி பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் இவரை தேடி வலைவிரித்துள்ளனர். இவர் தொடர்பாக தகவல்கள் இருப்பின் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் கொடுக்கலாம்.

தொலைபேசி இலக்கங்கள் வருமாறு118, 119, 2421111, 2433333

இந்த புலி உறுப்பினருக்கு உதவுவோர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸ் தலைமயகம் தெரிவித்துள்ளது.

No comments: