Tuesday, August 5, 2008

தேசியம் என்றுகூறிய நீ தெருவோரங்களில் பிணங்களை குவித்ததுதான் நீ கண்டமீதம்

தேசியம் தேசியம் என்றுகூறிய ஓருவன்
தேசத்தை கலங்கவைத்து
தெருவோரம் மக்களை தூங்கவைத்து
தேகம் சாய்த்து களைப்பாறுகிறான்
தேசத்தின் அடியில் வீடு கட்டி


தப்புகள் ஆயிரமாயிரம்... தரணியில் நீசெய்தாய்
தண்டணையிலிருந்து தப்பித்து நீ வாழ
தமிழீழம் எனும் பேச்சு
தலைவாசல் புரியாத தவித்திடும் மக்கள்
தலைவிரிகோலமாய் தள்ளாடும் கால்கள்


தாய்பிறந்த மண்ணை தன்நலத்துக்காய்
தவிடுபொடியாக்கிவிட்ட தன்நலத்தைகாக்கும்
தவக்களையே?? நீ தலைவனா??
தலைவன் என்றவன் எப்படி ??


தன்நலத்தை பேனாதவன்
தன் உயிரை போற்றாதவன்
தவித்திடும் மக்களுக்கு
தண்ணீர் ஊற்றுபவன் புசிக்க உணவு கொடுப்பவன்
அவன்தான் தலைவன் ஆவான்

உன்எண்ணம் எதுவென்று புரியவில்லை
உள்ளம் வாடும் மக்களுக்கு தீர்வு
உண்மைஎதுவென்று தோணவில்லை
ஊற்றெடுக்கும் மண்ணுக்குள் உருமாறிபோனவனே?


இறைவன் தந்த உடல் மண்ணுக்கு
இரையாகும் காரணம் மனிடனுக்கு
இன்பம் தரும் காரணியாக அமைந்து விடும்
இறையின் காலடியிலும் சேர்ந்துவிடுவர்
இன்று இறப்பவர்களினால் என்ன..?பயன்


இறுமாப்புடன் இருக்கும் நீ
இதயம் இல்லாத ஓருஇராவணனா?
இரக்ககுணம் இல்லாத அரக்கனா நீ
இமைமூடி திறக்குமுன்
இடுகாட்டுக்கு அனுப்புகிறாய் உன் இனத்தை


தேசியத் தலைவன் என்று கூறி
தேசத்தின் வீதிகளில் பிணங்களை குவிப்பவனே
தெருக்களில் எருதுகளின் எருக்கள் கிடப்பது ஞாயம்
தேசப்பற்றாளர்களின் தேகங்களுமா? தெருக்களில் கிடப்பது


சுகமான ராகம் கேட்ட நம் மண்னை
சோகமான (முகாரி) ராகம் கேட்கும்
சுடுகாடாக ஆக்கிவிட்டாய்
சுவையான பதார்த்தம் சுவைத்த மக்கள்
சுடுவெயிலில் Àங்க வைத்து விட்டாய்


அதிபர் ஆனந்தராஐhவை கொண்றாய்
அண்ணன் அமிர்தலிங்கத்தை கொண்றாய்
அகிம்சைவாதி துரைப்பாவை கொண்றாய்
அப்பாவி லக்ஸ்மன் கதிர்காமரை கொண்றாய்
அள்ளிச்சென்றது என்ன..? உன்
அகத்தில் இருப்பது என்ன..??


சிந்தித்து பார்? சிந்தித்து பார்..?
சிறகைவிரித்து சுதந்திரமாய் பறந்து
சூழ்ச்சிக்குள் அகப்படாமல்
சுயசந்தனையுடன் சிந்தித்து பார்..நீ...
சிந்திக்கும் போது சிவந்து நனைதிருக்கும்மண்....
சிந்திக்கும் மக்களின் கண்ணீரால்....


என்றென்றும்அன்புடன்
வவிதரன்

No comments: