தமிழீழமும் வேண்டும் கொழும்பில்
பல அடுக்குமாடி வீடுகளும் வாங்கவேண்டும்.
புலம்புகின்றனர் தமிழீழம் வேண்டும் என்று
புலம்பெயர் நாடுகளில்
புதிது புதிதாய் வாங்கி வருகின்றனர்
புண்ணிய பூமியாம் கொழும்பில்
பல அடுக்குமாடி வீடுகளை....
சுயநல மனிதரெல்லாம்
சுகபோகமாய் தலைநகரில் வாழ்ந்திட
சுமைகள் சுமந்த பொதுநலவாதிகள் எல்லாம்
சூழ்ச்சிக்குள் பொசுங்கி போயினர்
புலியின் வால்பிடித்து
புகழ்ச்சி தேடி பொருள் தேடி
புலம்பெயர் நாடுகளில்
புண்படாமல் வாழ்கின்றனர்
மனதில் சுபோகம் எனும் நஞ்சுவைத்து
மனம் குண்றிய மக்களை
மறைக்கின்றனர் மண்ணுக்குள்ளே
மதிகெட்ட மனிதர் இவர்கள்
தமிழீழம் கேட்டு விட்டு
தரம் கெட்டமனிதர் எல்லாம்
தாவியேறினர் விமானம்
தனை மட்டும் பாதுகாக்க.......
புலம் பெயர் நாடுகளில்
பூக்கள் போல் மென்மையாக வாழ்ந்து கொண்டு
புலம்பினர் அழுதனர் திறம்பட நடித்தனர்
பூமியொன்று வேணும் என்று
தன்பிள்ளையை நிறைவாக பள்ளி சென்றிட
தடக்கி விழாதவண்ணம் பாதணி அணிந்து
தடவிக்கொடுத்து அனுப்பினர்
தங்கமகனே சென்று வாடா என்று......
அப்பாவி மக்களின் பிள்ளைகள்
அப்பா அம்மா என கதறி கதறி அழுதிட
அப்பாவி குழந்தைகளின் கைகளிலே விலங்கு மாட்டி
அழைத்து சென்றனர் ஆயுத பயிற்ச்சிக்கென்று...
சுயநலம் மனதில் கலந்திட
சூத்திரங்கள் நெஞ்சில் நிறைந்திட
சூடான படுக்கை அறைகளிலே
சுவையான பாதார்த்தம் அருந்தி
சுவைக்கின்றனர் வெளிநாடுகளில்...
சுயநலத்தை கைவிட்டால்
சுதந்திரம் உன் கையில்வரும்
சூனியத்தை சுட்டெரித்தால்
சுமைகள் எல்லாம் சுகமாகிவிடும்.
எழுதியவர்- வவிவரதன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment