ஒரு நீதியான நேர்மையான போராட்டத்தை அறம் சார் தத்துவங்களின் அரசியல் கொள்கைகளே வழிநடத்தும்.
தற்போதைய நிலவரங்கள் பற்றி புலிகளின் அரசியல் துறைப்பேச்சாளர் நடேசன்; இராணுவ முன்னேற்றத்தை தடுப்பதற்கான சகல தந்திரோபாயங்களையும் பாவித்தாயிற்று, புதிய தந்திரோயங்களை பாவிக்கவேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்தார். சில சில நாட்களுக்கு முன்னர் புலிகளின் இணையமொன்றில் அவரின் அறிக்கை பிரசுரமாகியிருந்தது. படையினர் கம்பளம் விரித்தது போல் வருகிறார்கள் என்று அதற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் சு. ரவி குறிப்பிட்டிருந்தார். அவர்கள் அரச படையினர் நூல் பந்திலிருந்து நூல் வருவது போல் வருவார்கள் என எதிர்பார்த்திருந்தனர் போலும். உலக நாடுகளிலிருந்து நவீன ஆயுதங்களை வாங்கி குவித்துத் தான் தமக்கெதிராக வெற்றிகரமாக தாக்குதல் நடத்துகிறார்கள் என்று புலிகள் அரற்றுகிறார்கள். ஆனால் பிரதான உண்மை அதுவல்ல. கடந்த 30 வருடங்களில் படையினர் புலிகளிடமிருந்து கற்றிருக்கிறார்கள். புலிகளே அவர்களின் பிரதான ஆசான்களாக இருந்திருக்கிறார்கள். இன்று படையினர் பாவிக்கும் சாம,பேத,தான, தண்ட முறைமைகள் எல்லாம் புலிகளிடம் இருந்து கசடற கற்றறிந்தவை. இந்த அனுபவ பாடத்துடன் அவர்கள் புலிகளை விஞ்சி பல படி மேலேயே நிற்கிறார்கள்.
ஒரு நீதியான நேர்மையான போராட்டத்தை அறம் சார் தத்துவங்களின் அரசியல் கொள்கைகளே வழிநடத்தும். புலிகளை வழி நடத்தியது பாசிசம். மனித குலத்தின் சிறந்த விடயங்கள் எல்லாம் எமக்கு உவப்பாக இல்லையென்றால் அழித்து விடுதல் என்பதே அது. இந்த வரலாற்றுத் தவறின் முட்டு சந்தில் அவர்கள் இன்று நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 1986 இல் எப்போது ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து மாற்று தமிழ் அமைப்புக்களின் இருப்புக்கெதிரான அழிச்சாட்டியத்தை தொடக்கி வைத்தார்களோ அன்றே ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு கொள்ளி சொருகப்பட்டது.இந்த கொள்ளி சொருகலை மெத்தப்படித்த மேதாவிகள் உட்பட தமிழர்களில் ஒரு கணிசமான பகுதியினர் ஆதரித்தனர். நெஞ்சில் மனிதாபிமான ஈரம் கசிந்த ஒரு சில தமிழர்களே குற்றுயிரும் குறை உயிருமாக ரெலோ உறுப்பினர்கள் கொல்லப்பட்டபோது இந்த மிலேச்சத்தனத்திற்கெதிராக முணுமுணுத்தனர். தொடர்ந்து புளொட் ,ஈபிஆhஎல்எப் சாதாரண முஸ்லீகள் ,சிங்களவர் என வாழ்வு இருப்பு எல்லாமே கேள்விக்குறியாக்கப்பட்டபோது தமிழ் அரசியல் தலைவர்கள், தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் ,இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி என படுகொலைகள் தொடர்ந்த போது விடுதலை வேள்வியின் ஒரு பகுதி, நெருப்பாற்றை நீந்திக் கடத்தல் என்னும் பெரும் பணி என புலி ஆதரவுத்தமிழர்கள் இறுமாந்திருந்தார்கள் .பிரபாகரன் ஒரு அவதாரபுருசன் 'கடவுள் முருகனுக்கே அவன் நிகரானவன்" என பதிகம் பாடினார்கள் . பதிகம் மட்டுமல்ல போர்ப்பரணியும் பாடினார்கள்.இப்போதென்னவென்றால் யாராவது பலம் கொண்ட மனிதன் கன்னத்தை பொத்தி அறைந்தால் தலைகிறுகிறுகிறுத்து நிற்பார்களே அப்படி தலை கிறுகிறுத்து நிற்கிறார்கள,; இந்த முட்டாள் தமிழர்கள் .ஒன்றும் தெரியாதா பாப்பாக்கள் போல் என்ன நடந்தது, ஏன் நடந்தது என விம்மி வெடிக்கிறார்கள் .பாழாய்பபோன இந்த தமிழர்கள் தமது வடஅமெரிக்க, ஜரோப்பிய இருப்புக்காகவும் வேறு சௌகரியங்களுக்காகவும் புலிகளை உசுப்பேத்தி பாசிசத்தை போசித்து வளர்த்தவர்கள், தாம் தான் என்பதை ஏனோ அடிக்கடி மறந்து விடுகிறார்கள். இவர்கள் சிங்கள படைகளின் மரணங்களில் மாத்திரமல்ல, வெடித்துச் சிதறும் தமிழ் சிறார்களின் மரணங்களிலும் கிறங்கிப் போய்கிடந்தவர்கள்.
'துள்ளித் திரியும் பருவத்திலே துடுக்கடக்கி பள்ளிக்கனுப்பாத தந்தையாகிய பாதகனே" என்று வயது வந்த பிள்ளை தனது தந்தையை நொந்து கொள்வதைப்போல இந்த பொறுப்பில்லாத தமிழரையும் நாளைய சந்ததி நொந்துகொள்ளும். கொலைகளை தமிழர்கள் கூச்சநாச்சமின்றி ஆதரிப்பதை கோயிலடியிலும் ,தேவலாயத்திலும் ,சாப்பாட்டு கடைகளிலும் காதில் நாராசமாக சர்வசாதாரணமாக கேட்கலாம்.இவர்களில் பலர் வெள்ளை வேட்டி திருநூற்று பூச்சுடன் இருப்பார்கள்.நீலன் திருச்செல்வம் சாகவேண்டிய ஆள்த்தான் என்று தேவாலய ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையிலிருந்து வெளியில் வந்து கூடும் போது சிலாகிப்பார்கள். வெள்ளிக்கிழமை கதிரேசன் கோயிலுக்குள்ளேயே மகேஸ்வரி சாகவேண்டிய ஆள்தான் என்று அளவளாவுவார்கள் . நெஞ்சில் உரனுமின்றி நேர்மை சிறிதுமின்றி வஞ்சனை செய்யும் இந்த வாய்ச்சொல் வீரர்கள் பஞ்சமா பாதகம் பற்றிய வேதாகம நூல்களையெல்லாம் வீட்டில் அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள் .
நல்லூர் கோயிலில் திருவிழாவிற்கு 25 நாள் விரதம். ஆனால் பூங்கவனத்தல் அன்று சாகவைக்கப்படும் ஆட்டுக்கு இந்த 25 நாழும் முள்முருக்கங்குழை உட்பட நல்ல சாப்பாடுகிடைக்கும்.
அறநிலை சாராத தமிழர்களின் கசாப்புக்கடைசிந்தனை தான் இங்கு பிரச்சனை. இந்த தமிழர்கள் எது பற்றி பெருமையடைந்தார்கள்? 30 ஆயிரம்பேருக்கு மாவீரர் சுடலை அமைத்ததைப் பற்றி பெருமை அடைந்தார்கள். ஆனால் முக்கியமான விடயம் இவர்களின் பிள்ளைகள் உற்றசுற்றம் யாரும் இச்சுடலைகளில் புதைக்கப்பட்டிருக்கிறார்களா என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த கொலைவெறி புரையேறிய தமிழர்கள் பிரபாகரன் ஆச்சரியங்களை நிகழ்த்துவார் எனக்காத்து கிடக்கிறார்கள். பாவம் வாய்பிழந்தே பழக்கப்பட்டுப் போனவர்கள். இவர்களுக்கு இங்கு நிகழும் மனிதப்பேரவலம் ஒரு பொருட்டல்ல. பல்லாயிரக்கணக்கான மக்கள் மனையிழந்து.. வாழ்விழந்து.. பீரங்கிக்குண்டுகளால் பின்னப்பட்ட வலையின் கீழ்...... வானமிடிந்து விழும் பேரோசை.... அதனையும் விஞ்சிய மனிதபேரவலக்குரல்...... இருளைப்பகலாக்கும் பீரங்கிக் குண்டுகளின் வெளிச்சத்தில்...... மரணமும் வாழ்வுமாக....... இருப்பவர்களை பற்றி சிந்திக்கவில்லை. இந்த பிரகிருதிகளுக்கு இந்த சபிக்கப்பட்ட மக்களை பிடிப்பதுமில்லை. இந்த மக்கள் தமது பாதுகாப்பு கருதி அரச கட்டுபாட்டு பகுதிக்குள் சென்று விட்டால் அடியோடு வெறுத்துவிடுவார்கள். இன்று நொந்து,கெட்டு தாம் உண்டு தம்பாடுண்டு என்று வாழும் கிழக்கின் மக்களையும் இவர்கள் அவ்வாறுதான் வெறுக்கிறார்கள்.மக்கள் பிரபாகரனுக்கு பதிவிரதைகளான பெண்டிராக இருக்கவேண்டும் என்று பாசிசம் தலைக்கேறிய பத்தாம் பசலிகள் கருதுகிறார்கள் .புலிகளின் பினாமிகளான ஊது குழல் ஊடகக்காரர்கள் பாசிசம் ஈடாட்டம் கண்டுவருவதையிட்டு பதட்டமடைந்திருக்கிறார்கள். சர்வதேச கப்பவசூல்காரருக்கும் வேதனைதான.; ஆனால் இதில் கிடைப்பதை சுருட்டிக்கொள்ளலாம் என்றும் பலர் காத்திருக்கிறார்கள். புலிகள் சார் கோயில் ,தமிழ் பள்ளிக் கூடம் உள்ளிட்ட மாபியாத்தொழில் காரர்களுக்கோ பெருங்கவலை. ஆனால் இலங்கையில் ஒரு உருப்படியான தீர்வு ஏற்பட்டு தமிழர்களும் சக சமூகங்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்று எத்தனை பேர் கருதினார்கள். தமிழர்கள் வாழ்கிறார்களோ இல்லையோ புலிப்பாசிசம் வாழ வேண்டும் என்பதே இவர்களில் பெருப்பாலானோரின் அங்கலாய்ப்பாகும் .ஆனால் வரலாற்றில் மனித குலத்திற்கு தீங்கிளைக்கும் ஒன்று தற்காலிகமாக வெற்றி பெறினும் நிரந்தராமாக தோலிவியுறும் என்ற விதி அவர்களுக்கு புரிவதில்லை புரிந்த கொள்ளவும் மாட்டார்கள்.
முல்லைத்தீவு நகரத்தில் குண்டு விழுந்து மாவட்டதின் சம்பிருதாய முதற்பிரசையான அரச அதிபர் உட்பட 18 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததும், குழந்தையொன்று மரணித்ததும் அவலமானதும் துயரமானதுமே. இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான அவலங்கள் கடந்து வந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்து விட்டன. சராசரி இராணுவ ஆட்சியை விஞ்சிய வன்முறை சூழலில் தான் மக்கள் வாழ்ந்து மரணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பேரினவாத அரசுகள் மாத்திரம் பாத்திரவாழிகளாக இருக்கவில்லை. பாசிசப்புலிகளும் தான் பாத்திர வாழிகள். மக்கள் கௌரவமாக வாழ்வதற்கு இந்தியாவின் அனுசரணையுடன,; நாட்டின் உள்ளார்ந்த ரீதியலேயே சர்வதேச அனுசரணையுடன் எத்தனை சந்தர்ப்பங்கள் கிடைத்தன. எல்லாவற்றையும் புலிகள் நிராகரித்தபோது, சீர்குலைத்தபோது கைகொட்டி ஆரவாரித்து வரவேற்றவர்கள் போதை தலைக்கேறிய சமூகப்பிரக்ஞை அற்ற மந்தை ரகத் தமிழர்கள். புலிகள் இந்திய படையுடன் மோதியபோது ,பிரேமதாச வடக்கு-கிழக்கு மாகாணசபையைக் கலைத்தபோது ,வடக்கு-கிழக்கு மாகாண சபை உருவாகுவதற்கு முன்னின்றுளைத்த தோழர் பத்மநபாவும் தோழர்களும் படுகொலை செய்யப்பட்டபோது, தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டபோது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக இலங்கையில் அதிகாரப் பகிர்விற்காக தம்மை அர்ப்பணித்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி புலிகளின் தற்கொலை குண்டுதாரியினால் படுகொலைசெய்யப்பட்டபோது ,அதிகாரப் பகிர்ந்தளிப்பிற்கான அரசியல் யாப்பை உருவாக்குவதில் பங்களித்த நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்;டபோது, சந்திரிகாவினால் முன்மொழியப்பட்ட அதிகாரப்பகிர்வு யோசனைகள் பாராளுமன்ற மேசையிலேயே தீயிட்டு எரிக்கப்பட்டபோது, இறுதியாக நோர்வேயின் முன்முயற்சியில் இனப்பிரச்சனை தீர்வாக சர்வதேச அனுசணையுடன் முன்வைக்கப்பட்ட சமஸ்டிமுறையை நிராகரித்தபோது எல்லாவற்றையும் தமிழீப்போராட்டத்திற்கு உரமேற்றும் அம்சங்கள் ,அதி புத்திசாலித்தனம் என இந்த தற்குறிகள் கூறியும் ,பிரசாரம் செய்தும் வந்தன.
இந்த ஜென்மங்கள் உலகம் முழுவதும் பரந்திருந்தாலும் இவை கிணற்று தவளைகளாகவும் இருந்தன.
புலிகளின் பங்கர்கள் பபிலோனிய தொங்கு தோட்டங்களை விஞ்சிய உலக அதிசயமானவை.
நாலு படையையும் நிர்வாகத்தையும் வைத்திருக்கும், அரசாக இருக்கும் ஒரே விடுதலை இயக்கம் அதுதான்.
உலகத்திலேயே பெரிய பத்திரிகையாளர் மாநாடு வன்னியில் பிரபாரன் கலந்து கொண்டது தான்;.
பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை விட உலகில் நனிசிறந்ததெதுவும் கிடையாது
அதிகூடிய தற்கொலை குணடுகளை வைத்திருப்பவர்கள் நாங்களே.
உலகத்தில் தலை சிறந்த தத்துவ ஆசிரியர் அன்ரன்பாலசிங்கம் மாத்திரமே. .
பெண்விடுலை பற்ற பேசுவதற்கு தகுதியானவர் அடேல் ஒருவரே.
அரசபடையினரிடமோ பொலிசாரிடமோ பிடிபட்டால் உடனடியாவே உயிரை மாய்த்துக் கொள்ளும் ஒரே இயக்கம் .
கட்டுபாடும் ஒழுங்கும் கொண்ட ஒரே ஒரு இயக்கம்
சிங்களவர்கள் முட்டாள்கள் தமிழர்கள் கெட்டிக்காரர்கள்
மிகப்பிரமாண்டமான சுடலைகளும் எமதே.
எங்களை விட கெட்டிக்காரர்கள் உலகில் எவரும் இல்லை
இப்படியான வானம் கிணற்றின் வாயளவு என்று எல்லாவற்றையும் வன்னி பங்கரில் போட்டு உரசிப்பார்க்கும் மனோபாவம் பாரிய அளவில் வளாந்துள்ளதனால் இன்றைய நிலைமை புலிகளின் அடியார் திருக் கூட்டதிற்கு பேரதிர்ச்சியையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ' குளிச்சா குற்றாலம் கும்பிட்டா பரமசிவம்" என்ற மூடத்தனம் இந்த தமிழர்களை உடுக்கடித்து எங்கெல்லாமோ அலைக்கழித்து அழைத்துச் சென்றிருக்கிறது. அது கடைசியில் ரோமாபுரிக்கு அழைத்து செல்லவில்லை. உடுக்கடித்தவர்கள் தமிழர்வாழ்வை சுடுகாட்டுக்கு இட்டுச்சென்றிருக்கிறார்கள் .என்றாலும் போதைபுரையேறிய தமிழர்கள் இன்னும் உடுக்கடி, வேப்பிலை, கற்பூரச்சட்டி, குங்குமம் பூசப்பட்டு கத்தி முனையில் காட்சியளிக்கும் எலுமிசிங்காய் மனநிலையிலிருந்து மீளவில்லை.
ஆனால் ஒரு சமூகம் பிரமாண்டமான அளவில் அழிக்கப்பட்டிருகிறது. பௌத்த சிங்கள் பேரினவாதத்தை போசித்து வளர்த்ததில் தமிழ் பாசிசம் வகித்த பங்களிப்பு என்ற வெள்ளிடைமலையான உண்மையை இவர்கள் காண மறுக்கிறார்கள். போதாக்குறைக்கு புலித்தேவன் வேறு ஸ்ரீலங்கா அரசு ஜெனிவா ஒப்பந்தத்தின் விதிகளை அடிக்கடி மீறிவருவதாக குற்றம் சாட்டுகிறார். புலிகள் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு கட்டுபட்டவர்கள் இல்லை. நாம் பாசிசப்பயங்கரவாதிகள் என்று கூறவருகிறார் போலும். சிவிலியன் பஸ்களுக்கு- ரயில்களுக்கு குண்டுவைப்பது, ஊரோடு மக்களை துரத்துவது அரசியல் தலைவர்கள் மனித உரிமைவாதிகளை படுகொலைசெய்வதெல்லாம் ஜெனிவா உடன் படிக்கைக்கு உடன்பாடானவை என்று கூற வருகிறாரா. நாலுபடை வைத்திருப்பவர்கள், தமக்கென நிர்வாகம் -அரசு வைத்திருப்பவர்கள் ,உலக அதிசயம் நிகழ்த்துபவர்கள் நீங்கள் மக்களை மரங்களின கீழ் வாழவைப்பது தகுமா, மக்கள் குடியிருப்புக்கள் மேல் குண்டு வீச அனுமதிப்பது எந்தளவு நியாயம், உங்களை பாதுகாக்க மக்களை அரணாகப்பாவிப்பது எந்தளவிற்கு தார்மீகமானது. மக்களின் உணவு ,குடிநீர் ,சுகாதாரம் ,எரிபொருள் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும். மக்கள் வாழும் பிரதேசங்கள் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம்செய்யப்படவேண்டும் .இவற்றுக்காக ஜனநாயக அரசியல் கட்சிகளும் ,மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச உள்ளளுர் மனிதாபிமானப் பணியாளர்களும் குரல்கொடுக்கலாம.; ஆனால் புலிகள் குரல்கொடுக்கமுடியுமா . அவ்வாறு குரல் கொடுத்தால் அது அளவுக்கு மிஞ்சிய பாசாங்கல்லவா. தனக்கென ஒரு நிர்வாகத்தையும், நாற்படைகளையும், சர்வதேச ஆதரவையும் உலகத்தமிழர்களின ஆதரவையும் கொண்டிருப்பதாக கூறும் புலிகள் இவற்றுக்காக ஸ்ரீலங்கா அரசிடம் கையேந்துவானேன்? அவர்களின் தூதரகங்களுடாக(?) உதவியைப்பெற்று தமது துறைமுகங்களில் இறக்கி கொடுக்க வேண்டியது தானே. முட்டாள்த் தனமாககேள்வி எழுப்புகிறேன் என்று கருதவேண்டாம். எவ்வளவு தூரம் சனங்களை மடையர்கள் ஆக்கியிருக்கிறார்கள் என்பதற்காகவே இந்தகேள்வி இங்கு எழுப்பபடுகிறது.
இந்த பாசிச போதையின் மத்தியில், சமூக அவலங்களின் நடுவில் தமிழ் ஜனநாயக சத்திகள் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை பாதுகாப்பதற்கான பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளன. ஊரை எரிப்பவர்கள் மத்தியில் வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக ஒரு கைவிளக்கையாவது ஏற்றிவைக்க முனைகிறார்கள். அண்மையில் பாரதப்பிரதமர் இலங்கை வந்த போது அனைத்து ஜனநாயகத் தமிழர்தரப்பினருமே ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியில் தீர்வு ஏற்பட வழிசமைக்க வலியுறுத்தியதோடு வன்னியில் மக்கள் எதிர் நோக்கி நிற்கும் பேரலத்தையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. பாரதப்பிரதமர் தமிழர் அரசியல் அரங்கில் ஜனநாயக அரசியல் சத்திகள் பலப்படவேண்டியதன் அவசியதை வலியுறுத்தியிருந்தார்.வன்முறை மயப்பட்ட எமது சமூகச்சூழலில் பாரதப் பிரதமரின் கருத்து மிக முக்கியமானது . 'கத்தியின்றி; ரத்தமின்றி" சுதந்திரப்போராட்மொன்றை மாபெரும் மக்களியக்கத்தை நடத்திய மாபெரும் நாட்டின் தலைவரின் இக் கூற்று எம்மைப்பொறுத்தவரையில் மிகமுக்கிமானது.பல்லுக்குப் பல் கண்ணுக்கு கண் இலக்கற்ற தறிகெட்ட வன்முறை மனிதவாழ்வு கெடுபிடியானதாகவும், ஈவிரக்கமற்றதாகவும,; காட்டு மிராண்டித்தனமாகவும் மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வார்த்தைகள் முக்கியமானவை. நாம் மனிதர்களாக நடந்து கொண்டு உரிமைகளுக்காகப் போராடவேண்டும்.யாரையும் புண்படுத்துவதற்காக இதனை எழுதவில்லை. நாம் உண்மைகளையும், மானிட சமூக நியதிகளையும் புரிந்து கொள்ள முயல்வோம் . ஏனெனில் ஒரு சமூகம் அழிந்துகொண்டிருக்கிறது. மன்னியுங்கள்! இது அகதித் தமிழனின் சமூக வேதனை.
அகதித் தமிழன்
Showing posts with label அகதித்தமிழன். Show all posts
Showing posts with label அகதித்தமிழன். Show all posts
Monday, August 11, 2008
Saturday, July 5, 2008
வங்குரோத்தை வெளிப்படுத்தி நிற்கும் புலிகளின் பாசிசம்
- அகதிதமிழன்
புலிகள் இருப்பதால்தான் தமிழினம் வாழ்கிறது அவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமேனும் அரசாங்கம் பயப்படுகிறது அவர்கள் இல்லாவிட்டால் தமிழர்களுக்கு எதுவும் கிடையாது ஆகிய வார்த்தைகள் எமது சமூகத்தில் பரவலாக புழக்கத்தில் உள்ளவை. உண்மையில் இந்த வார்த்தைகளுக்கு ஏதாவது அர்த்தம் உள்ளதா?
ஒரு சிறந்த விவசாயியை அறுவடையைக் கொண்டே அளக்கலாம். சிறந்த ஓவியனை ஓவியத்தின் உயிரோட்டத்திலிருந்துதான் அறியலாம். சிறந்த கட்டிட கலைஞனை கட்டிடத்தின் அழகு, விசாலம், வலிமை என்பவற்றை வைத்து அறியலாம்.
அதேபோன்றதுதான் இதுவும். கடந்த 30 வருடங்களாக தமிழர்களுக்கு தமிழீழம் எடுத்துத் தருவதாக கூறி தமிழர்களுக்கு எவையெவை நல்ல சிறந்த அம்சங்களாக இருந்தனவோ அவையெல்லாவற்றையும் அழித்து தலைவர்களையெல்லாம் கொன்றுதள்ளி தமிழர்கள் வாழ்ந்த பூமியின் ஒருபகுதியை உயர்பாதுகாப்பு வலயங்களாக அரச படைகளுக்கு பறிகொடுத்து மிதிவெடி புதையாத இடமே இல்லையென்ற மாதிரி ஊரெல்லாம் மாற்றி சமூகத்தின் ஒரு பகுதியினரை அங்கவீனர்களாக மாற்றி கணவனை இழந்த மனைவியரையும், மனைவியை இழந்த கணவரையும் அநாதரவான குடும்பங்களையும் உருவாக்கி சிங்களப் படையினரை கொண்டுவந்து படலைக்குள்ளும், வளவுக்குள்ளும் நிறுத்திவிட்டு, வந்த உருப்படியான தீர்வுகளையெல்லாம் பாழ்படுத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும், யுவதிகளையும் கொன்றுதள்ளி, பலிகொடுத்து, இணைந்த வடக்கு கிழக்கையும் பிரிபதற்கான ஏதுநிலைகளை உருவாக்கி, எம்முடன் உற்ற சுற்றமாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை உடுத்த துணியுடன் வெளியேற்றி, தமிழர்களுக்கு தலைவர்களே இல்லா நிலையை உருவாக்கி, மிச்சம் மீதியிருந்த கல்விமான்களையும் கொன்று, அவர்களில் பலர் நாட்டைவிட்டு ஓட வழிவகுத்து, தமிழர்கள் வீதியில் நடமாடும் நிலைமையையும் மட்டுப்படுத்தி, திறந்தவெளி சிறைச்சாலை போன்று தமிழர்கள் தமது பிரதேசங்களில் திட்டுத்திட்டாக வாழும் நிலைமைகளை உருவாக்கி, அகதிகளாக தார்பலின் சீலைகளின் கீழ் பிச்சாப் பாத்திரத்துடன் வாழ வழிசமைத்து, பெருமளவில அகதிகளாக தஞ்சம் புகுந்த அண்டைநாடு தொப்புள் கொடி உறவுடனும் வாழ முடியாமல் அங்கு வன்முறைகளை விதைத்து, உலகில் சந்தேகத்துக்குரிய சமூகம் என்ற நிலைமைகளை உருவாக்கி வைத்திருப்பதைத் தானா இவ்வாறு அர்த்தப்படுத்துகிறார்கள்.
இவையெல்லாம்தான் புலிகள் தமது விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்த வாழ்வு. உண்மையில் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்கள், சுதந்திரமான வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் இந்த காரியங்களை செய்ய முடியுமா?
ஆயுதங்களை வாங்கி குவித்து சிறுவர்களையும், சிறுமியரையும், இளைஞர்களையும், யுவதிகளையும் ஆயுதபாணிகளாக்கி அதில் ஒரு பகுதியினரை கரும்புலிகள் என்ற பெயரில் வெடிகுண்டுகளாக மாற்றி அவர்கள் எத்தனை ஆயிரம் பேரின் அழிவுக்கு வித்திட்டார்கள். துரோகிகள் என்ற பெயரில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் அவர்களால் கொல்லப்பட்டார்கள். தமிழர்களின் உழைப்பு, வளங்கள் எல்லாமே இங்கு புலிகளின் அழிச்சாட்டியத்திற்காக வன்பறிப்பு செய்யப்பட்டன.
அண்டை நாட்டையும், பல உலக நாடுகளையும் தமது பலாத்கார நிதி திரட்டலுக்கானதும் ஆயுதங்களை கடத்துவதற்குமான தளங்களாக பாவிக்க முற்பட்டதால் அந்தந்த நாடுகளில் தமிழர்களின் வாழ்வு பெரும் இடையூறுகளுக்கும் அனர்த்தங்களுக்கும் உள்ளாகியது.
உள்ளுரிலும் சரி, உலகளாவிய ரீதியிலும் சரி தமிழர்களுடைய சொத்துக்கள் கலாச்சார நிறுவனங்கள் கோயில்கள், பாடசாலைகள் ஏன் சிவில் நிர்வாகம் கூட சுதந்திரமாக இயங்க முடியவில்லை. அத்தனையின் மீதும் புலிகளின் விரல்கள் இரும்புக் கரங்கள் மறைந்திருந்தன. அரச சார்பற்ற நிறுவனங்கள் மனித உரிமை அமைப்புக்கள் கூட சுதந்திரமாக இயங்க முடியவில்லை. தமிழ் அரசியல் என்பது புலிகளின் முகவர் அரசியலாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரமான கருத்துடையோர் உடல் மீதியின்றி அழிக்கப்பட்டார்கள்.
ஊடகங்கள் முகவர்களாகவே தொழிற்பட்டனர். மீறி சுதந்திரமாகச் செயற்பட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமையாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
பாசிசம் எவ்வாறு சமூகத்தின் அத்தனை வளங்களையும் சூறையாடும், மனிதர்களின் உயிர்களை காவுகொள்ளும், தம்முடன் சேர்த்து ஒரு சமூகத்தையே உடன்கட்டை ஏறச் செய்யும் என்பதற்கு கடந்த 25வருட காலம் புலிகளின் செயற்பாடுகள் புத்தி பேதலிக்காத தமிழர்களுக்கு சிறந்ததொரு அனுபவமாகும்.
வரலாற்றில் இழைக்கப்படும் பாரதூரமான மனிதகுல விரோத தவறுகளுக்காக அந்தத் தவறுகளை இழைத்தவர்கள் ஏதோவொரு கட்டத்தில் பாரிய விலையைச் செலுத்த வேண்டிவரும். அந்த விலையைத்தான் தற்போது புலிகள் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். புலிகள்தான் போராடுகிறார்கள் . அவர்கள் இல்லாவிட்டால் நாதியே இல்லை என்று துதிபாடியதற்காக தமிழர்களும் அதற்கான விலையை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பாராதூரமான நோய் பரவுவதற்கு அனுமதித்ததற்காக, அதற்கு உடந்தையாக இருந்ததற்காக இன்று முழுச் சமூகமும் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
பாசிசத்தின் வழியை பின்பற்றியவர்கள் அந்த பாசிச பிதா மகர்களின் மீள முடியாத பாதையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
தற்போது தன்னும் எமது சமூகத்தின் கணிசமானவொரு பகுதியினர் விழித்துக் கொள்ளாவிட்டால் இன்னும் ஓரிரு தசாப்தத்தில் தமிழர்களின் வாழ்வு இலங்கையில் என்னவாகும் என்பது நினைத்துப் பார்க்க முடியாததொன்றாகும்.
புலிகளின் பயங்கரவாத பாசிசம் சிங்கள பேரினவாதத்தை போசித்து, வளர்த்து அதுவொரு பலம்பொருந்திய நிறுவனமாவதற்கு வழிவகுத்திருக்கிறது. தென்னிலங்கையில் உள்ள சாதாரண மக்கள் தமிழர்களின் நியாயங்களை சிந்திப்பதற்கான கதவுகளை அது அடைத்து விட்டிருக்கிறது. அன்றாடம் சாதாரண மக்களின் மீதான தாக்குதல்களை இலக்காக கொள்ளலாம் என்பதை ஜனரஞ்சகப்படுத்தியதும் புலிகளே.
புலிகள் இந்த லட்சணத்தில் இருக்கும் பொழுது புலிகளுடன் அமர்ந்து பேசுமாறு கோர எந்த நாடும் முன்வரப் போவதில்லை. எந்தவொரு ஆக்கபூர்வமான தீர்வு ஆலோசனைகளையும் முன் வைப்பதில் அவர்கள் தயக்கம் காட்டுவார்கள். ஏந்த ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் புலிகள் நிராகரிப்பவர்கள். அவற்றை முன்மொழிபவர்களையே அவமானப்படுத்துபவர்கள் அல்லது அவர்களின் உயிருக்கும் உலைவைப்பவர்கள். உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது புலிகளின் பிரதான இயல்புகளில் ஒன்று.
ஆக புலிகள் இயக்கத்தினுள் கூட பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விசுவாசமானவர்கள் நெருக்கமானவர்கள் தவிர மற்றெல்லோரும் சந்தேகத்துக்குரியவர்கள். உயிர் வாழ்வதற்குரிய தகுதியை மிகவும் குறைவாக கொண்டவர்கள்.
தமிழர்களின் உரிமை போராட்டத்தின் பெயரில் பிரபாகர பாசிச மையத்தை பலப்படுத்தும் செயற்பாடே கடந்த கால்நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. விஷத்தை பால் என்று நம்பி உள்ளுரிலும் , உலகத்திலும் வாழும் தமிழர்களில் ஒரு பகுதியினர் கிறங்கிக் கிடக்கிறார்கள். ஜனநாயக சூழலில் வாழும் அண்டைநாட்டு சர்வதேச பினாமிகள் கூட தன்னனலம் கருதுதியும் இன்னுமொரு பகுதியினர் அறியாத் தனத்திலும் புலிகளின் பாசிசத்தில் புரையேறிப்போய் கிடக்கிறார்கள்.
தமிழர்களின் வாழ்வு சுதந்திரத்தை நோக்கிச் செல்லவில்லை. அவை மிக மோசமான தனிமைபடுதலை நோக்கிச் செல்கிறது., போக்கிடமற்ற நிலையை நோக்கிச் செல்கிறது. ஏற்கனவே பலதும் நிகழ்ந்து விட்டன என்பதை புரியாதவர்களாக மிச்சமீதி உள்ளவர்களும் வாழ்ந்தால் அதுவொரு சமூகத் தற்கொலையாகும்.
புலிகளின் பாசிச நலனையொட்டி இன்று உலகம் முழுவதும் பின்னப்பட்டுள்ள மாயவலை தகர்க்கப்பட வேண்டும். அதன் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட பாசிச பொருளாதார கட்டமைப்பு நிர்மூலம் செய்யப்பட வேண்டும். உள்ளுர் தமிழர்கள் மீதும், உலகத் தமிழர்கள் மீதும் இறுக்கப்பட்டுள்ள இரும்புப் பிடி அகற்றப்பட வேண்டும். அவர்கள் பயத்தில் இருந்து விடுபட வேண்டும். இதுதான் தமிழர்களின் சுதந்திரத்திற்கான, விமோசனத்துக்கான முதல் அடி வைப்பாக அமையும்.
அப்போதுதான் உலக நாடுகள் இநதியா உட்பட ஈழத் தமிழர்களின் தார்மீக கோரிக்கைகளுக்கு பங்களிக்க முன்வர முடியும். மற்றும்படி எதையும் செய்ய முடியாது என்பதையே யதார்த்தமாகும். அவ்வாறு செய்வதானது நல்லதோர் வீணை செய்து அதனை நலங்கெட புழுதியில் எறியும் செயற்பாடாகவே அமையும்.
தமிழ்நியூஸ்வெப்
புலிகள் இருப்பதால்தான் தமிழினம் வாழ்கிறது அவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமேனும் அரசாங்கம் பயப்படுகிறது அவர்கள் இல்லாவிட்டால் தமிழர்களுக்கு எதுவும் கிடையாது ஆகிய வார்த்தைகள் எமது சமூகத்தில் பரவலாக புழக்கத்தில் உள்ளவை. உண்மையில் இந்த வார்த்தைகளுக்கு ஏதாவது அர்த்தம் உள்ளதா?
ஒரு சிறந்த விவசாயியை அறுவடையைக் கொண்டே அளக்கலாம். சிறந்த ஓவியனை ஓவியத்தின் உயிரோட்டத்திலிருந்துதான் அறியலாம். சிறந்த கட்டிட கலைஞனை கட்டிடத்தின் அழகு, விசாலம், வலிமை என்பவற்றை வைத்து அறியலாம்.
அதேபோன்றதுதான் இதுவும். கடந்த 30 வருடங்களாக தமிழர்களுக்கு தமிழீழம் எடுத்துத் தருவதாக கூறி தமிழர்களுக்கு எவையெவை நல்ல சிறந்த அம்சங்களாக இருந்தனவோ அவையெல்லாவற்றையும் அழித்து தலைவர்களையெல்லாம் கொன்றுதள்ளி தமிழர்கள் வாழ்ந்த பூமியின் ஒருபகுதியை உயர்பாதுகாப்பு வலயங்களாக அரச படைகளுக்கு பறிகொடுத்து மிதிவெடி புதையாத இடமே இல்லையென்ற மாதிரி ஊரெல்லாம் மாற்றி சமூகத்தின் ஒரு பகுதியினரை அங்கவீனர்களாக மாற்றி கணவனை இழந்த மனைவியரையும், மனைவியை இழந்த கணவரையும் அநாதரவான குடும்பங்களையும் உருவாக்கி சிங்களப் படையினரை கொண்டுவந்து படலைக்குள்ளும், வளவுக்குள்ளும் நிறுத்திவிட்டு, வந்த உருப்படியான தீர்வுகளையெல்லாம் பாழ்படுத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும், யுவதிகளையும் கொன்றுதள்ளி, பலிகொடுத்து, இணைந்த வடக்கு கிழக்கையும் பிரிபதற்கான ஏதுநிலைகளை உருவாக்கி, எம்முடன் உற்ற சுற்றமாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை உடுத்த துணியுடன் வெளியேற்றி, தமிழர்களுக்கு தலைவர்களே இல்லா நிலையை உருவாக்கி, மிச்சம் மீதியிருந்த கல்விமான்களையும் கொன்று, அவர்களில் பலர் நாட்டைவிட்டு ஓட வழிவகுத்து, தமிழர்கள் வீதியில் நடமாடும் நிலைமையையும் மட்டுப்படுத்தி, திறந்தவெளி சிறைச்சாலை போன்று தமிழர்கள் தமது பிரதேசங்களில் திட்டுத்திட்டாக வாழும் நிலைமைகளை உருவாக்கி, அகதிகளாக தார்பலின் சீலைகளின் கீழ் பிச்சாப் பாத்திரத்துடன் வாழ வழிசமைத்து, பெருமளவில அகதிகளாக தஞ்சம் புகுந்த அண்டைநாடு தொப்புள் கொடி உறவுடனும் வாழ முடியாமல் அங்கு வன்முறைகளை விதைத்து, உலகில் சந்தேகத்துக்குரிய சமூகம் என்ற நிலைமைகளை உருவாக்கி வைத்திருப்பதைத் தானா இவ்வாறு அர்த்தப்படுத்துகிறார்கள்.
இவையெல்லாம்தான் புலிகள் தமது விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்த வாழ்வு. உண்மையில் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்கள், சுதந்திரமான வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் இந்த காரியங்களை செய்ய முடியுமா?
ஆயுதங்களை வாங்கி குவித்து சிறுவர்களையும், சிறுமியரையும், இளைஞர்களையும், யுவதிகளையும் ஆயுதபாணிகளாக்கி அதில் ஒரு பகுதியினரை கரும்புலிகள் என்ற பெயரில் வெடிகுண்டுகளாக மாற்றி அவர்கள் எத்தனை ஆயிரம் பேரின் அழிவுக்கு வித்திட்டார்கள். துரோகிகள் என்ற பெயரில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் அவர்களால் கொல்லப்பட்டார்கள். தமிழர்களின் உழைப்பு, வளங்கள் எல்லாமே இங்கு புலிகளின் அழிச்சாட்டியத்திற்காக வன்பறிப்பு செய்யப்பட்டன.
அண்டை நாட்டையும், பல உலக நாடுகளையும் தமது பலாத்கார நிதி திரட்டலுக்கானதும் ஆயுதங்களை கடத்துவதற்குமான தளங்களாக பாவிக்க முற்பட்டதால் அந்தந்த நாடுகளில் தமிழர்களின் வாழ்வு பெரும் இடையூறுகளுக்கும் அனர்த்தங்களுக்கும் உள்ளாகியது.
உள்ளுரிலும் சரி, உலகளாவிய ரீதியிலும் சரி தமிழர்களுடைய சொத்துக்கள் கலாச்சார நிறுவனங்கள் கோயில்கள், பாடசாலைகள் ஏன் சிவில் நிர்வாகம் கூட சுதந்திரமாக இயங்க முடியவில்லை. அத்தனையின் மீதும் புலிகளின் விரல்கள் இரும்புக் கரங்கள் மறைந்திருந்தன. அரச சார்பற்ற நிறுவனங்கள் மனித உரிமை அமைப்புக்கள் கூட சுதந்திரமாக இயங்க முடியவில்லை. தமிழ் அரசியல் என்பது புலிகளின் முகவர் அரசியலாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரமான கருத்துடையோர் உடல் மீதியின்றி அழிக்கப்பட்டார்கள்.
ஊடகங்கள் முகவர்களாகவே தொழிற்பட்டனர். மீறி சுதந்திரமாகச் செயற்பட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமையாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
பாசிசம் எவ்வாறு சமூகத்தின் அத்தனை வளங்களையும் சூறையாடும், மனிதர்களின் உயிர்களை காவுகொள்ளும், தம்முடன் சேர்த்து ஒரு சமூகத்தையே உடன்கட்டை ஏறச் செய்யும் என்பதற்கு கடந்த 25வருட காலம் புலிகளின் செயற்பாடுகள் புத்தி பேதலிக்காத தமிழர்களுக்கு சிறந்ததொரு அனுபவமாகும்.
வரலாற்றில் இழைக்கப்படும் பாரதூரமான மனிதகுல விரோத தவறுகளுக்காக அந்தத் தவறுகளை இழைத்தவர்கள் ஏதோவொரு கட்டத்தில் பாரிய விலையைச் செலுத்த வேண்டிவரும். அந்த விலையைத்தான் தற்போது புலிகள் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். புலிகள்தான் போராடுகிறார்கள் . அவர்கள் இல்லாவிட்டால் நாதியே இல்லை என்று துதிபாடியதற்காக தமிழர்களும் அதற்கான விலையை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பாராதூரமான நோய் பரவுவதற்கு அனுமதித்ததற்காக, அதற்கு உடந்தையாக இருந்ததற்காக இன்று முழுச் சமூகமும் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
பாசிசத்தின் வழியை பின்பற்றியவர்கள் அந்த பாசிச பிதா மகர்களின் மீள முடியாத பாதையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
தற்போது தன்னும் எமது சமூகத்தின் கணிசமானவொரு பகுதியினர் விழித்துக் கொள்ளாவிட்டால் இன்னும் ஓரிரு தசாப்தத்தில் தமிழர்களின் வாழ்வு இலங்கையில் என்னவாகும் என்பது நினைத்துப் பார்க்க முடியாததொன்றாகும்.
புலிகளின் பயங்கரவாத பாசிசம் சிங்கள பேரினவாதத்தை போசித்து, வளர்த்து அதுவொரு பலம்பொருந்திய நிறுவனமாவதற்கு வழிவகுத்திருக்கிறது. தென்னிலங்கையில் உள்ள சாதாரண மக்கள் தமிழர்களின் நியாயங்களை சிந்திப்பதற்கான கதவுகளை அது அடைத்து விட்டிருக்கிறது. அன்றாடம் சாதாரண மக்களின் மீதான தாக்குதல்களை இலக்காக கொள்ளலாம் என்பதை ஜனரஞ்சகப்படுத்தியதும் புலிகளே.
புலிகள் இந்த லட்சணத்தில் இருக்கும் பொழுது புலிகளுடன் அமர்ந்து பேசுமாறு கோர எந்த நாடும் முன்வரப் போவதில்லை. எந்தவொரு ஆக்கபூர்வமான தீர்வு ஆலோசனைகளையும் முன் வைப்பதில் அவர்கள் தயக்கம் காட்டுவார்கள். ஏந்த ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் புலிகள் நிராகரிப்பவர்கள். அவற்றை முன்மொழிபவர்களையே அவமானப்படுத்துபவர்கள் அல்லது அவர்களின் உயிருக்கும் உலைவைப்பவர்கள். உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது புலிகளின் பிரதான இயல்புகளில் ஒன்று.
ஆக புலிகள் இயக்கத்தினுள் கூட பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விசுவாசமானவர்கள் நெருக்கமானவர்கள் தவிர மற்றெல்லோரும் சந்தேகத்துக்குரியவர்கள். உயிர் வாழ்வதற்குரிய தகுதியை மிகவும் குறைவாக கொண்டவர்கள்.
தமிழர்களின் உரிமை போராட்டத்தின் பெயரில் பிரபாகர பாசிச மையத்தை பலப்படுத்தும் செயற்பாடே கடந்த கால்நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. விஷத்தை பால் என்று நம்பி உள்ளுரிலும் , உலகத்திலும் வாழும் தமிழர்களில் ஒரு பகுதியினர் கிறங்கிக் கிடக்கிறார்கள். ஜனநாயக சூழலில் வாழும் அண்டைநாட்டு சர்வதேச பினாமிகள் கூட தன்னனலம் கருதுதியும் இன்னுமொரு பகுதியினர் அறியாத் தனத்திலும் புலிகளின் பாசிசத்தில் புரையேறிப்போய் கிடக்கிறார்கள்.
தமிழர்களின் வாழ்வு சுதந்திரத்தை நோக்கிச் செல்லவில்லை. அவை மிக மோசமான தனிமைபடுதலை நோக்கிச் செல்கிறது., போக்கிடமற்ற நிலையை நோக்கிச் செல்கிறது. ஏற்கனவே பலதும் நிகழ்ந்து விட்டன என்பதை புரியாதவர்களாக மிச்சமீதி உள்ளவர்களும் வாழ்ந்தால் அதுவொரு சமூகத் தற்கொலையாகும்.
புலிகளின் பாசிச நலனையொட்டி இன்று உலகம் முழுவதும் பின்னப்பட்டுள்ள மாயவலை தகர்க்கப்பட வேண்டும். அதன் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட பாசிச பொருளாதார கட்டமைப்பு நிர்மூலம் செய்யப்பட வேண்டும். உள்ளுர் தமிழர்கள் மீதும், உலகத் தமிழர்கள் மீதும் இறுக்கப்பட்டுள்ள இரும்புப் பிடி அகற்றப்பட வேண்டும். அவர்கள் பயத்தில் இருந்து விடுபட வேண்டும். இதுதான் தமிழர்களின் சுதந்திரத்திற்கான, விமோசனத்துக்கான முதல் அடி வைப்பாக அமையும்.
அப்போதுதான் உலக நாடுகள் இநதியா உட்பட ஈழத் தமிழர்களின் தார்மீக கோரிக்கைகளுக்கு பங்களிக்க முன்வர முடியும். மற்றும்படி எதையும் செய்ய முடியாது என்பதையே யதார்த்தமாகும். அவ்வாறு செய்வதானது நல்லதோர் வீணை செய்து அதனை நலங்கெட புழுதியில் எறியும் செயற்பாடாகவே அமையும்.
தமிழ்நியூஸ்வெப்
வைக்கோல் பட்டடை நாயின் மனோநிலையிலிருந்து தமிழர்கள் விடுபட வேண்டும்.
- அகதித்தமிழன்
இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் கரிசனைகள் அதிகரித்துவரும் இவ் வேளையில் வௌ;வேறு விதமான பிரதிபலிப்புக்கள் புலிகளின் முகவர் ஊடகங்களாலும், அதிதீவிர சிங்கள மேலாதிக்கவாத சக்திகளாலும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய பிரதமருக்கு பாதுகாப்பாக இந்திய படைகள் வருகின்றன என்றவொரு செய்தியை வைத்துக் கொண்டு தமிழ் சிங்கள ஊடகங்கள் சர்ச்சைகளில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்கள் படும் துயரங்கள் தொடர்பாக இந்தியா மௌனமாக இருக்கிறது, பேசாமல் இருக்கிறது, இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்குகிறது என்றெல்லாம் எழுதி வருகிறார்கள். தொடர்ச்சியாக இந்த ஒப்பாரி பாடலை இசைத்துக் கொண்டு வருகிறார்கள்.
சரி. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நடைமுறை சாத்தியமான முயற்சிகளை இந்தியா முன்னெடுக்கும் போது இவர்கள் மறுவழமாக குய்யோ முறையோ என்று கூக்குரலிடுகிறார்கள்.
அதாவது இந்தியா இலங்கை இனப்பிரப்பிரச்சனை விடயத்தில் தலையிடுவதானால் முதலில் புலிகளுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுக்க வேண்டும். அவர்களை திருப்திப்படுத்த வேண்டும். இருந்தும் முகம் திருத்தி ஈரோடு பேண்வாங்க வேண்டும். இவ்வாறுதான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அண்மையில் புலிகளின் முக்கியஸ்தர் பாலகுமார் புலிகளின் முகவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தியாதான் புலிகள் தொடர்பாக தாம் இழைத்த தவறுகள் என்னவென்பதை உணர்ந்து கொண்டு தம்மை திருத்திக் கொண்டு இலங்கையில் பிரச்சினை தீர்க்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். புலிகள் செய்த அழிச்சாட்டியங்கள், அட்டூழியங்கள் எவையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை இவை பேசுதற்குரிய விடயங்கள் அல்ல என்பது போல் அவரது பேட்டியின் சாரம்சம் அமைந்திருந்தது.
தமிழ் மக்களின் நலன்கள், அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்களில் இந்தப் பிராந்தியத்துக்கும் இலங்கைக்கும் ஏற்புடையதான சிபாரிசுகளை செய்ய இந்தியா முன் வருமானால் அவர்கள் அதனை எதிர்ப்பார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினூடாக இணைந்த வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்ட அதிகார கட்டமைப்பையும் அவர்கள் அவ்வாறுதான் நிராகரித்தார்கள்.
புலிகளின் முகவர் அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் 13வது திருத்தச் சட்டமூலத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு என்பதை தாம் 1988 இலேயே நிராகரித்து விட்டதாக அண்மையில் ஆங்கில தேசிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையிலான அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தி - இலங்கை ஒப்பந்தத்தின் கீழான அதிகாரப் பகிர்ந்தளிப்பு செயற்பாடு முழுமையாக நிகழ வேண்டுமென எதிர்பார்த்தது. அன்றைய அமிர்தலிங்கம் அவர்களின் அறிக்கைகளிலும் பாராளுமன்ற உரைகளிலும் இவற்றை நாம் அவதானிக்கலாம். எனினும் 13வது திருத்தச் சட்டத்திற்கப்பால் அதிகாரப்பகிர்வு நிகழ வேண்டுமென்ற கருத்து அவரிடமிருந்தது.
இந்தியா 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் முழுமை செய்வது, மேலும் புதிய யதார்த்தங்கள், சூழ்நிலைகளுக்கேற்ப 13வது திருத்தத்துக்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆக்கபூர்வமான தீர்வு யோசனைகளை விடுத்து அன்றாட பிழைப்புவாத அரசியலை புலிகளின் நிழலில் நிகழ்ச்சி நிரலில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
புலிகளோ சுத்த இராணுவவாத, ஏகபிரதிநிதித்துவ, அதிகார கற்பித போதையில் கிறங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் கோட்டை கனவுகளும் தற்போது தகர்ந்து வருகின்றன.
இந்த நிலையில்தான் புலிகளை பிணை எடுக்க அதில் தமது நலன்களை பாதுகாத்துக்கொள்ள புலிகளின் ஊடக பெருச்சாளிகளும், அவர்களின் நலன் சார்ந்து இயங்கும் சர்வதேச மாஃபியாக்களும், வேறு பினாமிகளும் இந்தியா உதவ வேண்டும் என்கிறார்கள்.
இந்தியா தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பாக எத்தகைய அதி உட்ச பட்ச தீர்வை முன்வைக்க முன்வந்தாலும் இவர்கள் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. புலிகளின் ஏகபாசிச அதிகாரத்துக்கு பங்கம் வரும் வகையிலான எந்தவொரு தீர்வையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இவர்கள் மனித உரிமை மீறல்களை பற்றி குரல் எழுப்புவதும் வெறும் பாசாங்கே.
புலிகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை இருட்டடிப்புச் செய்வதில், கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்.
இவர்களின் மொழியில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பது புலிகளுக்கு முடிசூட்டுவது, மனித உரிமை மீறல் என்பது புலிகளால் கொல்லப்படுபவர், வெறுக்கப்படுபவர்கள் தவிர மற்றவர்களுக்கு நிகழ்பவையே. அது மிகவும் கபடத்தனமானது.
சமூகத்திற்கு எது தேவை, எது ஆக்கபூர்வமானது, எது யதார்த்தமானது என்பதெல்லாம் இவர்களுக்கு அநாவசியமானது. ஆக புலிகளின் விருப்புக்கும், வெறுப்புக்கும் ஏற்ப சர்வதேச சமூகமோ, இந்தியாவோ தாளம் போட வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த சிந்தனையின் செல்வாக்கு கணிசமான அளவில் தமிழர்களில் ஒருபகுதியினர் மத்தியில் காணப்படுகிறது. அவர்களுக்கு ஊட்டப்பட்டிருக்கும் கருத்து புலிகள் இல்லாவிட்டால் தமிழினம் அழிந்துவிடும். ஆனால் புலிகளின் சகோதரத்துவத்தை நிராகரிக்கும் பாசிச பயங்கரவாத போராட்டம் தான் ஏற்கனவே தமிழர்களின் கணிசமான தொகையினரை அழித்துவிட்டதென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்று யாழ் குடாநாடு முதியோரின் சிறைகூடமாகவும், கிழக்கும் இளந்தலைமுறையினர் அரிதாகிவிட்ட பிரதேசமாகவும், இரண்டு தலைமுறையினரின் அழிவை பார்த்த பூமியாகவும் அகதிகளின் தேசமாகவும் மாறியிருப்பதில் புலிகளின் பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
புலிகள் ஒரு ஆக்க சக்தியல்ல. அவர்கள் ஒரு நாசகார சக்தி என்பதை நாம் அடிப்படையாக விளங்கி வைத்திருக்க வேண்டும்.
எனவே புலி வாலை பிடித்து எமது மக்களில் ஒரு பகுதியினர் தொங்கிக் கொண்டிருந்தால் அவர்கள் அதன் வன்முறை குணத்திற்கே இரையாக வேண்டிவரும். கடந்து வந்த 30 ஆண்டுகளில் எமது மக்களுக்கு இது பற்றி நல்ல பட்டறிவு இருக்க வேண்டும். ஆனால் தெரிந்தும் உடன்கட்டை ஏறும் பரிதாப நிலையே காணப்படுகிறது.
கிழக்கில் கணிசமான அளவில் மக்கள் தமது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பேரழிவை சந்தித்த கிழக்கில் தமது பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் தொடர்பான மக்களின் அக்கறைகள் அதிகரித்திருக்கின்றன. அங்காவது முழுமையான அதிகாரப் பகிர்ந்தளிப்பு நிகழட்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.
இதேபோன்றதொரு நிலை வடக்கிலும் ஏற்பட வேண்டும்.
தமிழ் மக்களின் பிரதேசங்களை இணைத்து ஒரு பாதுகாப்பான பிரதேசத்தில் ஒரு அதிகாரப் பகிர்வு கட்டமைப்பை உருவாக்குவது படிப்படியாக ஏற்படுத்தப்பட வேண்டும்
இதேபோன்று முஸ்லீம் மக்கள், மலையக மக்களுக்கும் அதிகாரப்பகிர்வு கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆக்கபூர்வமான செயற்பாடுகளின் ஊடாகவே இதனை செய்ய முடியும்.
அதிகாரப் பகிர்வு முறையில் 60வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட இந்தியாவும் இத்தகைய நிலையொன்றைத்தான் எதிர்பார்க்கிறதென நாம் கருத முடியும்.
ஆனால் எமது இலக்கற்ற அராஜக சிந்தனை போக்கிற்கு உதவுவதற்கு அந்த மாபெரும் நாடு தனது சக்தியையும் உழைப்பையும் வீண்விரயம் செய்ய முன்வராது.
இலங்கை அரசை மிரட்டி வைப்பதற்கும், புலிகளுக்கு தடவி கொடுப்பதற்கும் இந்தியா ஒருபோதும் இங்கு தலையிடாது. இலங்கையில் அனைத்துத தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு இந்தியா உதவ முன்வரும்.
தமிழர்கள் தமக்கு எது வேண்டுமென நறுக்குத் தெறிக்க திட்டவட்டமாக தீர்மானிக்க வேண்டும். வைக்கோற்போர் நாயின் சிந்தனை போக்கிலிருந்து விடுபடுவதில்தான் எமது எதிர்காலம் தங்கியிருக்கிறதென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மறுபுறம் பௌத்த சிங்கள பேரினவாத அதிதீவிரவாத சக்திகள் இன ரீதியான பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் வழங்க முடியாது. அப்படியானதொரு பிரச்சினை இல்லை அப்படியேதும் வழங்கினால் கூட அது நாட்டைப் பிரிக்கும் அபாயம் என்பது போல் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவே ஒரு சித்தரிப்பை செய்து வருகின்றன. நிலைமை விபரீதமாவதற்கு இவர்களுடைய பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல. இது சிங்களவர்களின் நாடு. மற்றவர்கள் வந்தேறு குடிகள் அடக்க ஒடுக்கமாக இரண்டாம் தர பிரஜைகளாக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் குறைந்தபட்சம் கிழக்கில் முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான மாகாணசபைக்கோ அல்லது வடக்கின் அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான இடைக்கால ஏற்பாட்டுக்கோ ஏதாவது அதிகாரங்கள் வழங்கப்பட்டு விடுமோ, இந்தியா அதற்கு உதவிடுமோ என்று பதற்றமடைகிறார்கள். அவ்வாறு அதிகாரம் வழங்குவது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என பிரச்சாரம் செய்கிறார்கள்.
தென்னாசியாவில் இலங்கை கல்வித் தரம் கூடிய நாடு என்பார்கள். என்னவோ இத்தகைய சிந்தனை போக்குள்ள தற்குறிகள்தான் எமது அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதனால்தான் ஒருமித்தக் கருத்தை எட்டுவதென்பது சிரமமானதாக இருக்கிறது.
இலங்கை சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் போரும், மனித அழிவும் என்றாகிவிட்டது. இலங்கையின் அனைத்து மக்களுக்கும் சுதந்திரமானதும், கௌரவமானதுமான வாழ்வை பெற்றுக்கொடுப்பதில் இச் சக்திகள் பெரும் தாமதத்தையும் இடையூறையும் விளைவித்து வந்திருக்கின்றன.
'வினாசகாலே விபரீத புத்தி" என்பார்கள். இந்த விபரீத புத்தியின் ஆதிக்கம் நொருக்கப்பட்டு, முதுகெலும்பு முறிக்கப்பட்டு, இணக்கபபாடு, விட்டுக்கொடுப்பு, பரஸ்பர புரிந்துணர்வு இதற்கான உள்ளார்ந்த பொறிமுறை ஏற்படாமல் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியம்.
லட்சம் பேர்வரை உயிரிழந்து ஒரு மில்லியன் மக்கள் வரை அகதிகளான பின்னரும் ஞானம் பிறக்கவில்லை.
எமக்கு உதவி செய்ய வருபவர்கள் அவர்கள் தமது அனுபவங்களில் இருந்து சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுகையில் அதனை குழப்பியடிக்கும் செயற்பாடு இனியாவது சகல தரப்பிலிருந்தும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஆக்கபூர்வமான வழிகளில் சிந்தித்து செயற்பட தலைப்பட வேண்டும்.
எமது நாட்டுக்குள் இந்த மாற்றங்கள் நிகழாவிட்டால் எந்த வல்லமையும், புலமைத்துவம், ஆற்றலும் வாய்ந்த சக்திகள் செய்யவரும் உதவிகளும் புரிந்து கொள்ளாமல் போய்விடக்கூடும். விழலுக்கு இறைத்த நீராகி விடும்.
தமிழ்நியூஸ்வெப்
இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் கரிசனைகள் அதிகரித்துவரும் இவ் வேளையில் வௌ;வேறு விதமான பிரதிபலிப்புக்கள் புலிகளின் முகவர் ஊடகங்களாலும், அதிதீவிர சிங்கள மேலாதிக்கவாத சக்திகளாலும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய பிரதமருக்கு பாதுகாப்பாக இந்திய படைகள் வருகின்றன என்றவொரு செய்தியை வைத்துக் கொண்டு தமிழ் சிங்கள ஊடகங்கள் சர்ச்சைகளில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்கள் படும் துயரங்கள் தொடர்பாக இந்தியா மௌனமாக இருக்கிறது, பேசாமல் இருக்கிறது, இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்குகிறது என்றெல்லாம் எழுதி வருகிறார்கள். தொடர்ச்சியாக இந்த ஒப்பாரி பாடலை இசைத்துக் கொண்டு வருகிறார்கள்.
சரி. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நடைமுறை சாத்தியமான முயற்சிகளை இந்தியா முன்னெடுக்கும் போது இவர்கள் மறுவழமாக குய்யோ முறையோ என்று கூக்குரலிடுகிறார்கள்.
அதாவது இந்தியா இலங்கை இனப்பிரப்பிரச்சனை விடயத்தில் தலையிடுவதானால் முதலில் புலிகளுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுக்க வேண்டும். அவர்களை திருப்திப்படுத்த வேண்டும். இருந்தும் முகம் திருத்தி ஈரோடு பேண்வாங்க வேண்டும். இவ்வாறுதான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அண்மையில் புலிகளின் முக்கியஸ்தர் பாலகுமார் புலிகளின் முகவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தியாதான் புலிகள் தொடர்பாக தாம் இழைத்த தவறுகள் என்னவென்பதை உணர்ந்து கொண்டு தம்மை திருத்திக் கொண்டு இலங்கையில் பிரச்சினை தீர்க்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். புலிகள் செய்த அழிச்சாட்டியங்கள், அட்டூழியங்கள் எவையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை இவை பேசுதற்குரிய விடயங்கள் அல்ல என்பது போல் அவரது பேட்டியின் சாரம்சம் அமைந்திருந்தது.
தமிழ் மக்களின் நலன்கள், அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்களில் இந்தப் பிராந்தியத்துக்கும் இலங்கைக்கும் ஏற்புடையதான சிபாரிசுகளை செய்ய இந்தியா முன் வருமானால் அவர்கள் அதனை எதிர்ப்பார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினூடாக இணைந்த வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்ட அதிகார கட்டமைப்பையும் அவர்கள் அவ்வாறுதான் நிராகரித்தார்கள்.
புலிகளின் முகவர் அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் 13வது திருத்தச் சட்டமூலத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு என்பதை தாம் 1988 இலேயே நிராகரித்து விட்டதாக அண்மையில் ஆங்கில தேசிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையிலான அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தி - இலங்கை ஒப்பந்தத்தின் கீழான அதிகாரப் பகிர்ந்தளிப்பு செயற்பாடு முழுமையாக நிகழ வேண்டுமென எதிர்பார்த்தது. அன்றைய அமிர்தலிங்கம் அவர்களின் அறிக்கைகளிலும் பாராளுமன்ற உரைகளிலும் இவற்றை நாம் அவதானிக்கலாம். எனினும் 13வது திருத்தச் சட்டத்திற்கப்பால் அதிகாரப்பகிர்வு நிகழ வேண்டுமென்ற கருத்து அவரிடமிருந்தது.
இந்தியா 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் முழுமை செய்வது, மேலும் புதிய யதார்த்தங்கள், சூழ்நிலைகளுக்கேற்ப 13வது திருத்தத்துக்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆக்கபூர்வமான தீர்வு யோசனைகளை விடுத்து அன்றாட பிழைப்புவாத அரசியலை புலிகளின் நிழலில் நிகழ்ச்சி நிரலில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
புலிகளோ சுத்த இராணுவவாத, ஏகபிரதிநிதித்துவ, அதிகார கற்பித போதையில் கிறங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் கோட்டை கனவுகளும் தற்போது தகர்ந்து வருகின்றன.
இந்த நிலையில்தான் புலிகளை பிணை எடுக்க அதில் தமது நலன்களை பாதுகாத்துக்கொள்ள புலிகளின் ஊடக பெருச்சாளிகளும், அவர்களின் நலன் சார்ந்து இயங்கும் சர்வதேச மாஃபியாக்களும், வேறு பினாமிகளும் இந்தியா உதவ வேண்டும் என்கிறார்கள்.
இந்தியா தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பாக எத்தகைய அதி உட்ச பட்ச தீர்வை முன்வைக்க முன்வந்தாலும் இவர்கள் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. புலிகளின் ஏகபாசிச அதிகாரத்துக்கு பங்கம் வரும் வகையிலான எந்தவொரு தீர்வையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இவர்கள் மனித உரிமை மீறல்களை பற்றி குரல் எழுப்புவதும் வெறும் பாசாங்கே.
புலிகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை இருட்டடிப்புச் செய்வதில், கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்.
இவர்களின் மொழியில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பது புலிகளுக்கு முடிசூட்டுவது, மனித உரிமை மீறல் என்பது புலிகளால் கொல்லப்படுபவர், வெறுக்கப்படுபவர்கள் தவிர மற்றவர்களுக்கு நிகழ்பவையே. அது மிகவும் கபடத்தனமானது.
சமூகத்திற்கு எது தேவை, எது ஆக்கபூர்வமானது, எது யதார்த்தமானது என்பதெல்லாம் இவர்களுக்கு அநாவசியமானது. ஆக புலிகளின் விருப்புக்கும், வெறுப்புக்கும் ஏற்ப சர்வதேச சமூகமோ, இந்தியாவோ தாளம் போட வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த சிந்தனையின் செல்வாக்கு கணிசமான அளவில் தமிழர்களில் ஒருபகுதியினர் மத்தியில் காணப்படுகிறது. அவர்களுக்கு ஊட்டப்பட்டிருக்கும் கருத்து புலிகள் இல்லாவிட்டால் தமிழினம் அழிந்துவிடும். ஆனால் புலிகளின் சகோதரத்துவத்தை நிராகரிக்கும் பாசிச பயங்கரவாத போராட்டம் தான் ஏற்கனவே தமிழர்களின் கணிசமான தொகையினரை அழித்துவிட்டதென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்று யாழ் குடாநாடு முதியோரின் சிறைகூடமாகவும், கிழக்கும் இளந்தலைமுறையினர் அரிதாகிவிட்ட பிரதேசமாகவும், இரண்டு தலைமுறையினரின் அழிவை பார்த்த பூமியாகவும் அகதிகளின் தேசமாகவும் மாறியிருப்பதில் புலிகளின் பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
புலிகள் ஒரு ஆக்க சக்தியல்ல. அவர்கள் ஒரு நாசகார சக்தி என்பதை நாம் அடிப்படையாக விளங்கி வைத்திருக்க வேண்டும்.
எனவே புலி வாலை பிடித்து எமது மக்களில் ஒரு பகுதியினர் தொங்கிக் கொண்டிருந்தால் அவர்கள் அதன் வன்முறை குணத்திற்கே இரையாக வேண்டிவரும். கடந்து வந்த 30 ஆண்டுகளில் எமது மக்களுக்கு இது பற்றி நல்ல பட்டறிவு இருக்க வேண்டும். ஆனால் தெரிந்தும் உடன்கட்டை ஏறும் பரிதாப நிலையே காணப்படுகிறது.
கிழக்கில் கணிசமான அளவில் மக்கள் தமது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பேரழிவை சந்தித்த கிழக்கில் தமது பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் தொடர்பான மக்களின் அக்கறைகள் அதிகரித்திருக்கின்றன. அங்காவது முழுமையான அதிகாரப் பகிர்ந்தளிப்பு நிகழட்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.
இதேபோன்றதொரு நிலை வடக்கிலும் ஏற்பட வேண்டும்.
தமிழ் மக்களின் பிரதேசங்களை இணைத்து ஒரு பாதுகாப்பான பிரதேசத்தில் ஒரு அதிகாரப் பகிர்வு கட்டமைப்பை உருவாக்குவது படிப்படியாக ஏற்படுத்தப்பட வேண்டும்
இதேபோன்று முஸ்லீம் மக்கள், மலையக மக்களுக்கும் அதிகாரப்பகிர்வு கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆக்கபூர்வமான செயற்பாடுகளின் ஊடாகவே இதனை செய்ய முடியும்.
அதிகாரப் பகிர்வு முறையில் 60வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட இந்தியாவும் இத்தகைய நிலையொன்றைத்தான் எதிர்பார்க்கிறதென நாம் கருத முடியும்.
ஆனால் எமது இலக்கற்ற அராஜக சிந்தனை போக்கிற்கு உதவுவதற்கு அந்த மாபெரும் நாடு தனது சக்தியையும் உழைப்பையும் வீண்விரயம் செய்ய முன்வராது.
இலங்கை அரசை மிரட்டி வைப்பதற்கும், புலிகளுக்கு தடவி கொடுப்பதற்கும் இந்தியா ஒருபோதும் இங்கு தலையிடாது. இலங்கையில் அனைத்துத தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு இந்தியா உதவ முன்வரும்.
தமிழர்கள் தமக்கு எது வேண்டுமென நறுக்குத் தெறிக்க திட்டவட்டமாக தீர்மானிக்க வேண்டும். வைக்கோற்போர் நாயின் சிந்தனை போக்கிலிருந்து விடுபடுவதில்தான் எமது எதிர்காலம் தங்கியிருக்கிறதென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மறுபுறம் பௌத்த சிங்கள பேரினவாத அதிதீவிரவாத சக்திகள் இன ரீதியான பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் வழங்க முடியாது. அப்படியானதொரு பிரச்சினை இல்லை அப்படியேதும் வழங்கினால் கூட அது நாட்டைப் பிரிக்கும் அபாயம் என்பது போல் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவே ஒரு சித்தரிப்பை செய்து வருகின்றன. நிலைமை விபரீதமாவதற்கு இவர்களுடைய பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல. இது சிங்களவர்களின் நாடு. மற்றவர்கள் வந்தேறு குடிகள் அடக்க ஒடுக்கமாக இரண்டாம் தர பிரஜைகளாக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் குறைந்தபட்சம் கிழக்கில் முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான மாகாணசபைக்கோ அல்லது வடக்கின் அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான இடைக்கால ஏற்பாட்டுக்கோ ஏதாவது அதிகாரங்கள் வழங்கப்பட்டு விடுமோ, இந்தியா அதற்கு உதவிடுமோ என்று பதற்றமடைகிறார்கள். அவ்வாறு அதிகாரம் வழங்குவது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என பிரச்சாரம் செய்கிறார்கள்.
தென்னாசியாவில் இலங்கை கல்வித் தரம் கூடிய நாடு என்பார்கள். என்னவோ இத்தகைய சிந்தனை போக்குள்ள தற்குறிகள்தான் எமது அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதனால்தான் ஒருமித்தக் கருத்தை எட்டுவதென்பது சிரமமானதாக இருக்கிறது.
இலங்கை சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் போரும், மனித அழிவும் என்றாகிவிட்டது. இலங்கையின் அனைத்து மக்களுக்கும் சுதந்திரமானதும், கௌரவமானதுமான வாழ்வை பெற்றுக்கொடுப்பதில் இச் சக்திகள் பெரும் தாமதத்தையும் இடையூறையும் விளைவித்து வந்திருக்கின்றன.
'வினாசகாலே விபரீத புத்தி" என்பார்கள். இந்த விபரீத புத்தியின் ஆதிக்கம் நொருக்கப்பட்டு, முதுகெலும்பு முறிக்கப்பட்டு, இணக்கபபாடு, விட்டுக்கொடுப்பு, பரஸ்பர புரிந்துணர்வு இதற்கான உள்ளார்ந்த பொறிமுறை ஏற்படாமல் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியம்.
லட்சம் பேர்வரை உயிரிழந்து ஒரு மில்லியன் மக்கள் வரை அகதிகளான பின்னரும் ஞானம் பிறக்கவில்லை.
எமக்கு உதவி செய்ய வருபவர்கள் அவர்கள் தமது அனுபவங்களில் இருந்து சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுகையில் அதனை குழப்பியடிக்கும் செயற்பாடு இனியாவது சகல தரப்பிலிருந்தும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஆக்கபூர்வமான வழிகளில் சிந்தித்து செயற்பட தலைப்பட வேண்டும்.
எமது நாட்டுக்குள் இந்த மாற்றங்கள் நிகழாவிட்டால் எந்த வல்லமையும், புலமைத்துவம், ஆற்றலும் வாய்ந்த சக்திகள் செய்யவரும் உதவிகளும் புரிந்து கொள்ளாமல் போய்விடக்கூடும். விழலுக்கு இறைத்த நீராகி விடும்.
தமிழ்நியூஸ்வெப்
Subscribe to:
Posts (Atom)