போதைப் பொருள் கடத்தியதாக 2 தமிழருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்கர் மியான். இவர் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாய்லாந்தில் சமையல் வேலை பார்க்க சென்றார். அப்போது அவரை சுல்தான் என்பவரும், அவரது மகன் சலீம்கான் என்பவரும் சந்தித்து லண்டனில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டினார்கள். அதை நம்பி சுல்தானுக்கு 3.5 லட்சம் ரூபாய் தருமாறு அஸ்கர் தனது குடும்பத்தினரிடம் கூறினார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் சுல்தான் அஸ்கரிடம் கம்போடியாகவுக்கு சென்று சீனா வழியாக லண்டனுக்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார். அதன் பேரில் அஸ்கர் கம்போடியாவுக்கு சென்று 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அஸ்கர் தனது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு சீனாவுக்கு செல்வதாக கூறினார். 1301 கிராம் ஹெராயின் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக அதே மாதம் 22ம் தேதி சீன சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதேபோன்று, தஞ்சாவூரைச் சேர்ந்த உசேன் மைதீன் என்பவரும் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி சீனாவில் குவாங் சூ மாகாணத்தில் நுழை முற்பட்டபோது சந்தேகத்தின் பேரில் அவரை அதிகாரிகள் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவருடைய வயிற்றில் இருந்து 300.09 கிராம் ஹெராயின் போதைப் பொருளை கைப்பற்றினர். அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 3 முறை உசேன் மைதீன் போலி பெயர்களில் சீனாவுக்கு போதைப் பொருளை கடத்தி இருப்பதாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
இவருக்கும், அஸ்கர் மியானுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 2ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts
Monday, June 2, 2008
Monday, May 12, 2008
இன்னுமொரு இயற்கை அழிவு
சீனாவை உலுக்கிய பாரிய பூமியதிர்ச்சி 8,500பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் காயம்
தென்மேற்கு சீனாவிலுள்ள சிசுவான் மாகாணத்தை இன்று திங்கட்கிழமை தாக்கிய 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி காரணமாக சிறுவர்கள் உட்பட 5,000 பேர் பலியானதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி பூமியதிர்ச்சி காரணமாக இரு பாடசாலைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தமை காரணமாக அங்கிருந்த சுமார் 900 சிறுவர்கள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இப்பூமியதிர்ச்சியையடுத்து சீனாவின் அதியுயர்ந்த கட்டிடமான ஜின்மாவோ கோபுரத்திலிருந்தும் ஏனைய உயர்ந்த கட்டிடங்களிலிருந்தும் மக்களை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.
சீனாவில் இடம்பெற்ற இப்பூமியதிர்ச்சி, தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக், வியட்நாமின் ஹனொய் நகர் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது.
சிசுவான் மாகாண தலைநகரான செங்துவிலிருந்து 57 கிலோமீற்றர் தொலைவில் நேற்று அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2.28 மணிக்கு தாக்கிய பூமியதிர்ச்சியால் செங்து நகரிலோ அல்லது அதற்கு அருகாமையிலுள்ள திறீ ஜோர்ஜெஸ் அணையிலோ பிரதான சேதமெதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரச தொலைக்காட்சி அறி க்கையிட்டுள்ளது.
எனினும் மேற்படி நகரக் கட்டிடங்களிலிருந்து மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்துவிலிருந்து 930 மைல்கள் தொலைவிலுள்ள சீனத் தலைநகர் பீஜிங்கிலுள்ள பல கட்டிடங்கள், இப்பூமியதிர்ச்சியின் போது சுமார் இரு நிமிடங்களுக்கு நடுக்கம் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மக்கள் கட்டிடங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.
பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இறந்தவர்களின் தொகை மேன்மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென்மேற்கு சீனாவிலுள்ள சிசுவான் மாகாணத்தை இன்று திங்கட்கிழமை தாக்கிய 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி காரணமாக சிறுவர்கள் உட்பட 5,000 பேர் பலியானதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி பூமியதிர்ச்சி காரணமாக இரு பாடசாலைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தமை காரணமாக அங்கிருந்த சுமார் 900 சிறுவர்கள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இப்பூமியதிர்ச்சியையடுத்து சீனாவின் அதியுயர்ந்த கட்டிடமான ஜின்மாவோ கோபுரத்திலிருந்தும் ஏனைய உயர்ந்த கட்டிடங்களிலிருந்தும் மக்களை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.
சீனாவில் இடம்பெற்ற இப்பூமியதிர்ச்சி, தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக், வியட்நாமின் ஹனொய் நகர் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது.
சிசுவான் மாகாண தலைநகரான செங்துவிலிருந்து 57 கிலோமீற்றர் தொலைவில் நேற்று அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2.28 மணிக்கு தாக்கிய பூமியதிர்ச்சியால் செங்து நகரிலோ அல்லது அதற்கு அருகாமையிலுள்ள திறீ ஜோர்ஜெஸ் அணையிலோ பிரதான சேதமெதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரச தொலைக்காட்சி அறி க்கையிட்டுள்ளது.
எனினும் மேற்படி நகரக் கட்டிடங்களிலிருந்து மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்துவிலிருந்து 930 மைல்கள் தொலைவிலுள்ள சீனத் தலைநகர் பீஜிங்கிலுள்ள பல கட்டிடங்கள், இப்பூமியதிர்ச்சியின் போது சுமார் இரு நிமிடங்களுக்கு நடுக்கம் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மக்கள் கட்டிடங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.
பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இறந்தவர்களின் தொகை மேன்மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to:
Posts (Atom)